under review

கோவிலடி ரங்கநாத பெருமாள் ஆலயம்: Difference between revisions

From Tamil Wiki
(Removed non-breaking space character)
(Added First published date)
 
(3 intermediate revisions by the same user not shown)
Line 26: Line 26:
====== ஆழ்வார்கள் ======
====== ஆழ்வார்கள் ======
இந்த ஆலயத்தை நான்கு ஆழ்வார்கள் [[மங்களாசாசனம்]] செய்துள்ளனர். நம்மாழ்வார், திருமழிசை ஆழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மொத்தம் 33 பாசுரங்களை பாடியுள்ளனர்.  
இந்த ஆலயத்தை நான்கு ஆழ்வார்கள் [[மங்களாசாசனம்]] செய்துள்ளனர். நம்மாழ்வார், திருமழிசை ஆழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மொத்தம் 33 பாசுரங்களை பாடியுள்ளனர்.  
<poem>
<poem>
பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன்என்று என்நெஞ்சு நிறையப் புகுந்தான்
பேரேன்என்று என்நெஞ்சு நிறையப் புகுந்தான்
கார்ஏழ் கடல்ஏழ் மலைஏழ் உலகு உண்டும்
கார்ஏழ் கடல்ஏழ் மலைஏழ் உலகு உண்டும்
ஆராவயிற்றானை அடங்கப் பிடித்தேனே.  
ஆராவயிற்றானை அடங்கப் பிடித்தேனே.  
(நம்மாழ்வார் பாசுரம்)
(நம்மாழ்வார் பாசுரம்)
</poem>
</poem>
== ஆலய அமைப்பு ==
== ஆலய அமைப்பு ==
ஆலயக் கருவறையில் ரங்கநாதர் புஜங்க சயனத்தில் (ஒருக்களித்து படுத்த கோலத்தில்) மேற்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். பெருமாளின் மார்பில் ஸ்ரீதேவி பொறிக்கப்பட்டிருக்கிறாள். அருகில் மார்க்கண்டேய மகரிஷி அமர்ந்திருகிறார். பெருமாள் அப்பக் குடத்தைப் பற்றியபடி காட்சி தருகிறார். வெளியே தனிச் சந்திதியில் கமலவல்லித்தாயார் கிழக்கு நோக்கி கோயில்கொண்டிருக்கிறார். உட்பிரகாரத்தில் விநாயகர், நம்மாழ்வார், ராமானுஜர், ஆழ்வார்கள், கருடன், வேணுகோபாலன், விஷ்வக்சேனர் ஆகியோர் இருக்கிறார்கள். இக்கோவில் ஒரு மேட்டின் மீது 20 படிகள் மேல் உள்ளது. ஆலய விமானத்தின் பெயர் இந்திர விமானம். இந்த ஆலயத்திற்கு இந்திரகிரி, பலாசவன க்ஷேத்ரம், பஞ்சரங்கம், அப்பால ரங்கநாத சுவாமி திருக்கோயில் ஆகிய பெயர்கள் புராணங்களில் உள்ளன.  
ஆலயக் கருவறையில் ரங்கநாதர் புஜங்க சயனத்தில் (ஒருக்களித்து படுத்த கோலத்தில்) மேற்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். பெருமாளின் மார்பில் ஸ்ரீதேவி பொறிக்கப்பட்டிருக்கிறாள். அருகில் மார்க்கண்டேய மகரிஷி அமர்ந்திருகிறார். பெருமாள் அப்பக் குடத்தைப் பற்றியபடி காட்சி தருகிறார். வெளியே தனிச் சந்திதியில் கமலவல்லித்தாயார் கிழக்கு நோக்கி கோயில்கொண்டிருக்கிறார். உட்பிரகாரத்தில் விநாயகர், நம்மாழ்வார், ராமானுஜர், ஆழ்வார்கள், கருடன், வேணுகோபாலன், விஷ்வக்சேனர் ஆகியோர் இருக்கிறார்கள். இக்கோவில் ஒரு மேட்டின் மீது 20 படிகள் மேல் உள்ளது. ஆலய விமானத்தின் பெயர் இந்திர விமானம். இந்த ஆலயத்திற்கு இந்திரகிரி, பலாசவன க்ஷேத்ரம், பஞ்சரங்கம், அப்பால ரங்கநாத சுவாமி திருக்கோயில் ஆகிய பெயர்கள் புராணங்களில் உள்ளன.  
இக்கோயிலுக்கு சோழ, பல்லவ மன்னர்களும், அதன் பின்பு விஜயநகர மன்னர்களும் திருப்பணி செய்திருக்கிறார்கள்.  
இக்கோயிலுக்கு சோழ, பல்லவ மன்னர்களும், அதன் பின்பு விஜயநகர மன்னர்களும் திருப்பணி செய்திருக்கிறார்கள்.  
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
Line 48: Line 44:


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|24-Dec-2022, 17:28:36 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:வைணவ ஆலயங்கள்]]
[[Category:வைணவ ஆலயங்கள்]]

Latest revision as of 12:05, 13 June 2024

அப்பாள ரங்கநாதர் கோயில்

கோவிலடி ரங்கநாத பெருமாள் ஆலயம் ( பொ.யு. எட்டாம் நூற்றாண்டு) (கோயிலடி அப்பாள ரங்கநாதர் ஆலயம். அப்பால ரங்கநாதர் கோயில்) தஞ்சை மாவட்டத்தில் அமைந்த விஷ்ணு ஆலயம். ஆழ்வார்களின் பாடல்பெற்ற நூற்றெட்டு திவ்யதேசங்களுள் எட்டாவது ஆலயம். சோழநாட்டின் ஆறாவது திருத்தலம்.

இடம்

தஞ்சாவூர் அருகே திருக்காட்டுப்பள்ளியை ஒட்டி கோயிலடி என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது.

தெய்வங்கள்

  • மூலவர்: அப்பால ரெங்கநாதர் (அப்பக் குடத்தான்).
  • தாயார் : ஸ்ரீமத் கமலவல்லி தாயார், இந்திரா தேவி.
  • பிறதெய்வங்கள்: விநாயகர், நம்மாழ்வார், ராமானுஜர், ஆழ்வார்கள், கருடன், வேணுகோபாலன், விஷ்வக்சேனர்.
  • தீர்த்தம் : இந்திர புஷ்கரிணி.
  • மரம்: பலாசம் (புரசு) பலாசவனம் என அழைக்கப்படுகிறது.

தொன்மம்

திருமகள் குடிகொண்ட இடம்

நிலமகள் திருமகளை விட உயர்ந்தவள் என பெருமாள் சொன்னமையால் திருமகள் சீற்றம் கொண்டு இங்கே வந்து தவமிருந்தார் என்றும், பெருமாள் தோன்றி திருமகளை ஆறுதல்படுத்தி தன் மார்பில் அணிந்துகொண்டார் என்றும் தொன்மம் சொல்கிறது

உபரிசிரவசு தவம் செய்த இடம்

புராணகால மன்னனாகிய உபரிசிரவசு கௌதமமுனிவரின் குடிலுக்குள் நுழைய முயன்ற மதம்கொண்ட யானையை அம்பால் தாக்க அந்த யானை ஒரு பிராமணரை கொன்றது. அந்த அந்தணக்கொலை (பிரம்மஹத்தி) பழி நீங்க உபரிசிரவசு இந்த தலத்திற்கு வந்து வேள்விகள் செய்தார். அந்தணர்களுக்கு அவர் அன்னக்கொடை செய்தபோது ஓர் அந்தணர் வந்து அனைத்து உணவையும் உண்டார். அந்த அந்தணர் பெருமாளே என தெரியவந்தது. அப்பத்தை விரும்பி உண்டமையால் அப்பக்குடத்தான் என பெருமாள் அழைக்கப்பட்டார்.

நம்மாழ்வார்

நம்மாழ்வார் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளை கடைசியாக மங்களாசாசனம் செய்துவிட்டு இங்கேயே வீடுபேறடைந்தார் என்று நம்பப்படுகிறது.

நீத்தார் கடன்

பெற்றோர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையை முறையாக ஆற்றாதோர் வழிபட்டு மீட்பு பெற வேண்டிய பிதுர்முக்தி தலம் இது எனப்படுகிறது.

இந்திரன்

இந்த ஆலயம் இந்திரனுக்குரியது.

வரலாறு

இந்த ஆலயம் இருக்கும் கோவிலடி ஊரின் பழைய பெயர் திருப்பேர் நகர். சம்ஸ்கிருதத்தில் ஸ்ரீநகரம் ஸ்ரீபுரம் என்னும் பெயர்கள் உண்டு. காவேரிக்கரையில் விஷ்ணு பள்ளி கொண்டிருக்கும் பஞ்சரங்க தலங்களில் ஒன்று. அப்பாலரங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இது திருவரங்கத்தை விட தொன்மையானது என்பதனாலும், திருவரங்கத்திற்கு அப்பாலுள்ளது என்பதனாலும் இப்பெயர்பெற்றது என சொல்லப்படுகிறது.

இந்த ஆலயம் பொ.யு. எட்டாம் நூற்றாண்டு முதல் இருந்துகொண்டிருக்கிறது. இங்கே அப்பம் படைக்கப்படுவதும் அன்னக்ஷேத்திரம் என அழைக்கப்படுவதும் இந்த ஆலயம் நீத்தார்கடன்களுக்கான இடமாக தொன்மைக்காலம் முதல் இருந்து வந்திருக்கலாம் என்பதற்கான சான்று.

ஆழ்வார்கள்

இந்த ஆலயத்தை நான்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். நம்மாழ்வார், திருமழிசை ஆழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மொத்தம் 33 பாசுரங்களை பாடியுள்ளனர்.

பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன்என்று என்நெஞ்சு நிறையப் புகுந்தான்
கார்ஏழ் கடல்ஏழ் மலைஏழ் உலகு உண்டும்
ஆராவயிற்றானை அடங்கப் பிடித்தேனே.
(நம்மாழ்வார் பாசுரம்)

ஆலய அமைப்பு

ஆலயக் கருவறையில் ரங்கநாதர் புஜங்க சயனத்தில் (ஒருக்களித்து படுத்த கோலத்தில்) மேற்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். பெருமாளின் மார்பில் ஸ்ரீதேவி பொறிக்கப்பட்டிருக்கிறாள். அருகில் மார்க்கண்டேய மகரிஷி அமர்ந்திருகிறார். பெருமாள் அப்பக் குடத்தைப் பற்றியபடி காட்சி தருகிறார். வெளியே தனிச் சந்திதியில் கமலவல்லித்தாயார் கிழக்கு நோக்கி கோயில்கொண்டிருக்கிறார். உட்பிரகாரத்தில் விநாயகர், நம்மாழ்வார், ராமானுஜர், ஆழ்வார்கள், கருடன், வேணுகோபாலன், விஷ்வக்சேனர் ஆகியோர் இருக்கிறார்கள். இக்கோவில் ஒரு மேட்டின் மீது 20 படிகள் மேல் உள்ளது. ஆலய விமானத்தின் பெயர் இந்திர விமானம். இந்த ஆலயத்திற்கு இந்திரகிரி, பலாசவன க்ஷேத்ரம், பஞ்சரங்கம், அப்பால ரங்கநாத சுவாமி திருக்கோயில் ஆகிய பெயர்கள் புராணங்களில் உள்ளன. இக்கோயிலுக்கு சோழ, பல்லவ மன்னர்களும், அதன் பின்பு விஜயநகர மன்னர்களும் திருப்பணி செய்திருக்கிறார்கள்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Dec-2022, 17:28:36 IST