under review

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(39 intermediate revisions by 9 users not shown)
Line 1: Line 1:
அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி (1941-2020) ரஷ்ய தமிழறிஞராகவும், மொழியியல் அறிஞராகவும் அறியப்படுகிறார். இவர் தமிழின் சங்க நூல்களை ரஷ்யாவில் அறிமுகப்படுத்தியவர்களில் முன்னோடி.  
[[File:அலக்ஸாண்டர் துப்யான்ஸ்கி.jpg|thumb|அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி]]
[[File:ஜெயகாந்தனுடன் அலக்ஸாண்டர் துப்யான்ஸ்கி.jpg|thumb|ஜெயகாந்தனுடன் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி]]
[[File:அலக்ஸாண்டர் துப்யான்ஸ்கி2.jpg|thumb|அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி]]
அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி (அலெக்சாண்டர் மிகைலுவிச் துபியான்ஸ்கி, Alexander Mikhailovitch Dubiansky, Alexander Dubianskiy, Alexander Dubyanskiy, or Aleksandr Dubiansky)(1941-2020) ரஷ்ய தமிழறிஞராகவும், மொழியியல் அறிஞராகவும் அறியப்படுகிறார். இவர் தமிழின் சங்க நூல்களை ரஷ்யாவில் அறிமுகப்படுத்தியவர்களில் முன்னோடி.  
[[File:Dubianski150 09022008.jpg|thumb|நன்றி - [https://muelangovan.blogspot.com/ http][https://muelangovan.blogspot.com/ ://muelangovan.blogspot.com/]]]
[[File:Dubianski150 09022008.jpg|thumb|நன்றி - [https://muelangovan.blogspot.com/ http][https://muelangovan.blogspot.com/ ://muelangovan.blogspot.com/]]]
== பிறப்பு,கல்வி ==
== பிறப்பு,கல்வி ==
இவர் ஏப்ரல் 27, 1941 ஆம் ஆண்டு ரஷ்யாவில் மிகையல் மற்றும் கெலன் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார்.  
அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி ஏப்ரல் 27, 1941-ம் ஆண்டு ரஷ்யாவில் மிகையல் மற்றும் கெலன் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார்.  


இவர் நத்தாலியா என்பவரை திருமணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு தான்யா என்ற மகள் பிறந்தார்.
அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி சில ஆண்டு கால ராணுவ சேவைக்குப் பின்னர் 1965-ம் ஆண்டு மாஸ்கோ ஓரியண்டல் இன்ஸ்டிட்யூட்டில் ( Moscow State University's Institute of Oriental Language) தமிழ்ப் பட்டப்படிப்பை முடித்து பின்னர் அங்கேயே முதுநிலைப் பட்டப்படிப்பையும் முடித்தார்.  
== தனிவாழ்க்கை ==
இவர் சில ஆண்டு கால ராணுவ சேவைக்குப் பின்னர் 1965 ஆம் ஆண்டு மாஸ்கோ ஓரியண்டல் இன்ஸ்டிட்யூட்டில் ( Moscow State University's Institute of Oriental Language) தமிழ்ப் பட்டப்படிப்பை முடித்து பின்னர் அங்கேயே உயர் நிலைப்பட்டப்படிப்பையும் முடித்து,1973 ஆம் ஆண்டு விரிவுரையாளராக அங்கேயே பணியில் அமர்ந்தார் பின்னர் உதவிப் பேராசிரியராகப் பதவி உயர்வும் பெற்று பணியாற்றினார்.


இவர் ''செவ்வியல் தமிழ் இலக்கியத்தின் கவிதையியல்'' என்று சங்கத்தமிழ் பற்றி ஆய்வு செய்து அதேக்கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னாளில் இந்த ஆய்வை ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார்.
அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி ''செவ்வியல் தமிழ் இலக்கியத்தின் கவிதையியல்'' என்று சங்கத்தமிழ் பற்றி ஆய்வு செய்து அதே கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னாளில் இந்த ஆய்வை ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார்.  


இவர் 1979 ஆம் ஆண்டு இந்தியவிற்கு சென்று சென்னை பல்கலைக்கழகத்தில் ஒன்பது மாதங்கள் தங்கி ஆய்வுகள் மேற்கொண்டார். மேலும் இவர் பேராசிரியர் சஞ்சீவ் அவர்களிடம் புறநானூறு கற்றார். பின்னர் இவர் பேராசிரியர் பொற்கோ அவர்களிடம் தொல்காப்பியம் பயின்றார்.
அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி 1979-ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து சென்னை பல்கலைக்கழகத்தில் ஒன்பது மாதங்கள் தங்கி ஆய்வுகள் மேற்கொண்டார். பேராசிரியர் [[ந. சஞ்சீவி]] அவர்களிடம் புறநானூறு கற்றார். பின்னர் பேராசிரியர் [[பொற்கோ]] அவர்களிடம் தொல்காப்பியம் பயின்றார்.
பின்னாளில் மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையின் தலைவராக பணியில் இருந்தார். மேலும் இவர் பத்திற்கும் மேற்ப்பட்ட பல்கலைக்கழகங்களில் தமிழ் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.[[File:Dubianski bbc.jpg|thumb|நன்றி-bbc.com]]
== தனிவாழ்க்கை ==
== பங்களிப்பு ==
அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி நத்தாலியா என்பவரை திருமணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு தான்யா என்ற ஒரே மகள்.  
இவர் லெனின் கிராட்டில் தமிழ் சொல்லிக்கொடுக்க ஒரு பள்ளியை உருவாக்கினார்.


இவர் தூயத்தமிழில் பேசவும், எழுதவும் பலரை பயிற்றுவித்தார் மேலும் பல ரஷ்யப்பல்கலைக்கழகத்தில் 50 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணிபுரிந்துள்ளார். இவர் நூற்றுக்கும் மேற்ப்பட்ட கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார், இவற்றில் பல கட்டுரைகள் தமிழ் மொழி குறித்து எழுதியுள்ளார்.
அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மாஸ்கோ ஓரியண்டல் இன்ஸ்டிட்யூட்டில் ( Moscow State University's Institute of Oriental Language) 1973- ஆம் ஆண்டு விரிவுரையாளராக பணியமர்ந்தார். பின்னர் உதவிப் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்று பணியாற்றினார். பின்னாளில் மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையின் தலைவராக பணியில் இருந்தார். மேலும் இவர் பத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் தமிழ் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.
[[File:Dubianski bbc.jpg|thumb|நன்றி-bbc.com]]
== பணிகள் ==
அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி ரஷ்யாவில் உள்ள லெனின் கிராடில் தமிழ் கற்றுக்கொடுக்க ஒரு பள்ளியை உருவாக்கினார். தூயதமிழில் பேசவும், எழுதவும் பலரை பயிற்றுவித்தார். மேலும் பல ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் 50 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணிபுரிந்துள்ளார். நூற்றுக்கும் மேற்ப்பட்ட கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார், பெரும்பாலானவை தமிழாய்வுகள்.


இவர் 1979ஆம் ஆண்டில் ''ஓலைச் சுவடியில் தமிழ்ப் பாடல்கள்'' என்ற தலைப்பில் ''எட்டுத்தொகை, பத்துப்பாட்டு'' ஆகிய நூல்களிலிருந்து சில பாடல்களைத் தேர்ந்தெடுத்து ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.  
அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி 1979-ம் ஆண்டில் ''ஓலைச் சுவடியிலிருந்து தமிழ்ப் பாடல்கள்'' என்ற தலைப்பில் ''எட்டுத்தொகை, பத்துப்பாட்டு'' ஆகிய நூல்களிலிருந்து சில பாடல்களைத் தேர்ந்தெடுத்து ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். ''தமிழ் இலக்கியம் ஒரு பார்வை'' என்ற தலைப்பில் பத்தொன்பதாவது நூற்றாண்டு வரையிலான தமிழ் இலக்கியங்கள் குறித்து ரஷ்ய மொழியில் ஒரு நூலை 1987-ம் ஆண்டில் எழுதி வெளியிட்டார்.  


இவர் 1987ஆம் ஆண்டில் ''தமிழ் இலக்கியம் ஒரு பார்வை'' என்ற தலைப்பில் பத்தொன்பதாவது நூற்றாண்டு வரையிலான தமிழ் இலக்கியங்கள் குறித்து ரஷ்ய மொழியில் எழுதியுள்ளார்.  
அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி 1989-ம் ஆண்டு ''பழந்தமிழ் பாடல்களில் சடங்கு, புராண இலக்கிய வேர்கள்'' என்னும் இரு நூல்களை ரஷ்ய மொழியில் எழுதியுள்ளார். இந்த நூல்கள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இவர் புறநானூற்றை ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். ஆங்கிலத்தில் இந்நூல் ''Ritual and Mythological Sources of the Early Tamil Poetry'' என்ற தலைப்பில் 2000-த்தில் வெளியானது.  


இவர் 1989ஆம் ஆண்டு ''பழந்தமிழ் பாடல்களில் சடங்கு,புராண இலக்கிய வேர்கள்'' என்னும் இரு நூல்களை ரஷ்ய மொழியில் எழுதியுள்ளார். இந்த நூல்கள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி உலகெங்கிலும் பயணங்கள் மேற்கொண்டு பல்வேறு ஆய்வரங்குகளில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். இவர் 2010-ம் ஆண்டில் கோவையில் நடந்த செந்தமிழ் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு தொல்காப்பியம் பற்றி உரையாற்றினார். தமிழ் எழுத்தாளர்களான [[ஜெயகாந்தன்]], [[கார்த்திகேசு சிவத்தம்பி]], [[வைரமுத்து]] மற்றும் பலருடன் நல்ல தொடர்பில் இருந்தார். ஒவ்வொரு ஆண்டும் சங்கப் பாடல்கள் குறித்த வாசிப்புப் பட்டறை ஒன்றை ரஷ்ய ஆராய்ச்சி மாணவர்களுக்கு நடத்திவந்தார். 2016-ம் ஆண்டு தமது 75-வது பிறந்தநாளின்போது பல்வேறு தமிழறிஞர்களின் கட்டுரைகளடங்கிய ''தமிழ் தந்த பரிசு'' என்ற 600 பக்கங்கள் கொண்ட நூலை வெளியிட்டார்.  
 
இவர் புறநானூற்றை ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். சங்க இலக்கியத்தில் இடம்பெறும் சடங்குகள், தொன்மங்கள் குறித்து 2000 ஆம் ஆண்டில் அவர் எழுதிய நூல் தமிழுக்கு அவர் அளித்த முக்கியமான பங்களிப்பாகும் என்று பழ. நெடுமாறன் வரையறுக்கிறார்.
 
இவர் ரஷ்ய மொழியில் இயற்றிய நூல்கள்
* தமிழ் இலக்கியம் ஒரு பார்வை
* பனை ஒலையில் பாடல்கள்
* பழந்தமிழ் இலக்கியங்களில் சடங்குகளும் தொல்புனைகதைகளும் (Ritual and Mythological Sources of the Early Tamil Poetry)
இவர் ரஷ்ய மொழியில் எழுதி வெளியிட்டுள்ள குறிப்பிடத்தகுந்த கட்டுரைகள்
* பத்துப்பாட்டு
* தமிழின் அகப்பொருள் பாடல்களின் அமைப்பு
* பத்தினி வழிபாடு
* சிங்கப்பூரில் தமிழ் இலக்கியம்
* உலக இலக்கியங்களில் ஒன்றான தமிழ் இலக்கியம்
* பாரதியின் தேசபக்திப் பாடல்கள்
இவர் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட கட்டுரைகள்
* சிலப்பதிகாரக் கதையும் அமைப்பும்
* குறிஞ்சிப் பாட்டு
* சங்க நெய்தல் பாடல்கள்
* பழந்தமிழில் காஞ்சி
* செவ்வியல் தமிழ் இலக்கியத்தில் நொச்சி
* உழிஞைச் செய்திகள்
இவர் உலகெங்கிலும் பயணம் மேற்கொண்டு ஆய்வரங்குகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2010 ஆம் ஆண்டில் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு தொல்காப்பியம் பற்றி உரையாற்றினார்.
 
இவர் தமிழ் எழுத்தாளர்களான ஜெயகாந்தன், சிவத்தம்பி, வைரமுத்து மற்றும் பலருடன் நல்ல தொடர்பில் இருந்தார்.  
 
இவர் ஒவ்வொரு ஆண்டும் சங்கப் பாடல்கள் குறித்த வாசிப்புப் பட்டறை ஒன்றை ரஷ்ய ஆராய்ச்சி மாணவர்களுக்கு நடத்திவந்தார்.  
 
இவர் 2016 ஆம் ஆண்டு தமது 75-வது பிறந்தநாளின்போது பல்வேறு தமிழறிஞர்களின் கட்டுரைகளடங்கிய ''தமிழ் தந்த பரிசு'' என்ற 600 பக்கங்கள் கொண்ட நூலை வெளியிட்டார்.  
== விவாதங்கள் ==
== விவாதங்கள் ==
இவர் 2010 ஆண்டு செந்தமிழ் மாநாட்டில் சமர்பித்த தொல்காப்பியம் பற்றிய கட்டுரை பலவிவாதங்களை உருவாக்கியது.  
அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி 2010-ம் ஆண்டு செந்தமிழ் மாநாட்டில் சமர்ப்பித்த தொல்காப்பியம் பற்றிய கட்டுரை பலவிவாதங்களை உருவாக்கியது. தொல்காப்பியம் இந்திய மரபில், சம்ஸ்கிருத மொழியிலும் பிராகிருத மொழியிலும் வெளிவந்த பல்வேறு இலக்கணநூல்களின் வழிநூல் என சொல்லப்படுவதை மறுத்தார்."''தொல்காப்பியத்தை ஆராய்ந்த அறிஞர்களில் ஒருவரான சுப்ரமணிய சாஸ்திரி தொல்காப்பியத்தின் பல பகுதிகள் சம்ஸ்கிருத நூல்களின் நேரடி மொழிபெயர்ப்புகள் என்று கூறியுள்ளார். நான் அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், அந்தக் காலத்தில் பிரதிகளுக்கிடையே இருந்த உறவு என்பது மொழிபெயர்ப்பு என்பதாக அமைந்திருக்கவில்லை. மாறாக, ஒரு மொழியில் இருப்பதை இன்னொன்றில் வழங்குவது என்ற விதத்தில்தான் இருந்தது. ஒன்றிலிருந்து கடன் பெறுவதையோ, ஒன்றன் கருத்தாக்கத்தை இன்னொரு மொழியில் பயன்படுத்துவதையோ அப்போது யாரும் தவறாக நினைக்கவில்லை''" என்று குறிப்பிட்டிருந்தார். அவர் பல மூலநூல்களை கருத்தில்கொள்ளவில்லை என ஒரு பக்கமும், அவர் தொல்காப்பிய அழகியலுக்கு இந்திய இலக்கியத்தில் மூலங்கள் உண்டு என்கிறார் என மறுபக்கமும் விவாதங்கள் உருவாயின


இந்த கட்டுரையில் இவர் “''தொல்காப்பியத்தை ஆராய்ந்த அறிஞர்களில் ஒருவரான சுப்ரமணிய சாஸ்திரி தொல்காப்பியத்தின் பல பகுதிகள் சம்ஸ்கிருத நூல்களின் நேரடி மொழிபெயர்ப்புகள் என்று கூறியுள்ளார். நான் அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், அந்தக் காலத்தில் பிரதிகளுக்கிடையே இருந்த உறவு என்பது மொழிபெயர்ப்பு என்பதாக அமைந்திருக்கவில்லை. மாறாக, ஒரு மொழியில் இருப்பதை இன்னொன்றில் வழங்குவது என்ற விதத்தில்தான் இருந்தது. ஒன்றிலிருந்து கடன் பெறுவதையோ, ஒன்றன் கருத்தாக்கத்தை இன்னொரு மொழியில் பயன்படுத்துவதையோ அப்போது யாரும் தவறாக நினைக்கவில்லை''” என்று குறிப்பிட்டிருந்தார்.  
இந்த விவாதங்கள் பற்றி குறிப்பிடும் ஆய்வாளர் [[ரவிக்குமார்]] இப்படிச் சொல்கிறார். "தொல்காப்பியம் குறித்து அவர் வாசித்த கட்டுரை பல விவாதங்களை எழுப்பியது. ஆனால் துப்யான்ஸ்கி தனது ஆய்வுக் கட்டுரையில் எழுப்பிய ஒரு பிரச்சனையை யாரும் விவாதிக்கவில்லை. சங்க இலக்கியங்களுக்கும், தொல்காப்பியத்துக்கும் இடையே காணப்படும் முரண்பாடுகளை அவரது கட்டுரை சுட்டிக்காட்டியது. அதற்காக சில உதாரணங்களையும் அவர் குறிப்பிட்டார். 'தொல்காப்பியம் நொச்சித் திணைப் பற்றி எங்கும் பேசவில்லை. உழிஞைத் திணைப் பற்றிப் பேசும்போது அதன் துணைப் பிரிவாக ஒரே ஒரு இடத்தில் நொச்சி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தொல்காப்பியத்துக்குப் பிறகு எழுதப்பட்ட புறப்பொருள் வெண்பாமாலை நொச்சித் திணையை விரிவாகப் பேசியுள்ளது. பிரிவு குறித்து தொல்காப்பியம் பேசிய இடத்தில் பிரிவுக்கான காரணங்களாக ஓதல், பகை, தூது ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. ஆனால், சங்கப் பாடல்களில் பிரிவுக்கு இரண்டு காரணங்கள் மட்டுமே கூறப்பட்டுள்ளன. பொருள் மற்றும் போர் ஆகியவைப் பற்றி மட்டுமே அவை பேசுகின்றன. ஓதல், தூது ஆகியவை சங்கப் பாடல்களில் எங்குமே பிரிவுக்கான காரணமாகப் பேசப்படவில்லை. பெண்ணோடு கடற்பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று தொல்காப்பியம் கூறுகிறது. அத்தகைய நிகழ்வு எதுவும் சங்கப் பாடல்களில் இல்லை. தலைவனின் தோழன் காதலர்கள் சந்திப்பதற்காகப் பன்னிரெண்டு விதமான காரியங்களைச் செய்வது குறித்தும் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. ஆனால், சங்கப் பாடல்களில் அத்தகைய நிகழ்வுகளை எங்குமே நாம் காணமுடியவில்லை’ என்று துப்யான்ஸ்கி குறிப்பிட்டார். இந்த கருத்துகள் இப்போதும் விவாதிக்கப்படாமலேயே உள்ளன".  
== விருது ==
== விருது ==
இவருடைய பணியைப் பாராட்டி இவருக்குத் தெற்காசியக் கல்விச் சங்கம் (The South Asian Studies Association) தலைசிறந்த கல்வியாளர் விருது (Exemplar Academic Awards) 2013இல் வழங்கியது.
அலெக்சாண்டர் துப்யான்ஸ்கியின் பணியைப் பாராட்டி அவருக்குத் தெற்காசியக் கல்விச் சங்கம் (The South Asian Studies Association) தலைசிறந்த கல்வியாளர் விருது (Exemplar Academic Awards) 2013-ல் வழங்கியது.
== மறைவு ==
== மறைவு ==
இவர் நவம்பர் 18, 2020 ஆம் ஆண்டு, தனது 79 ஆம் வயதில் கொரோனாவினால் உயிரிழந்தார்.
அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி நவம்பர் 18, 2020-ம் ஆண்டு, தனது 79- ஆம் வயதில் கொரோனாவினால் உயிரிழந்தார்.
== உசாத்துணை ==
== இலக்கிய இடம் ==
[https://mutiru-tamilosai.blogspot.com/2011/09/alexander-dubianskiy-tamil-scholar-from.html தமிழ் ஓசை]
அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி 2000-ம் ஆண்டில் சங்க இலக்கியத்தில் இடம்பெறும் சடங்குகள், தொன்மங்கள் குறித்து எழுதிய நூல் (''Ritual and Mythological Sources of the Early Tamil Poetry'') தமிழுக்கு அவர் அளித்த முக்கியமான பங்களிப்பு என்று பழ. நெடுமாறன் வரையறுக்கிறார்.  


[https://muelangovan.blogspot.com/2008/12/1941.html முனைவர் இளங்கோவன் பதிவு]
ருஷ்ய கல்விப்புலத்தில் தமிழிலக்கியம் மீதான தொடர் ஆர்வத்தை உருவாக்கி நிலைநிறுத்தியவர் அலக்ஸாண்டர் துப்யான்ஸ்கி. ’ரஷ்யாவில் பேராசிரியர் துப்யான்ஸ்கியை மையமாகக் கொண்டுதான் கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழ் ஆய்வுகள் நடந்துவந்தன. அதிலும் குறிப்பாக சோவியத் யூனியன் தகர்வுக்குப் பிறகு முன்னேற்றப் பதிப்பகம், ராதுகா பப்ளிஷர்ஸ் போன்றவை மூடப்பட்டதற்குப் பிறகு தமிழ் தொடர்பான ஆர்வம் ரஷ்யாவில் வெகுவாகக் குறைந்து விட்டது. அதைக் கடந்த 25 ஆண்டுகளாகத் தனி ஒரு மனிதராகக் காப்பாற்றி வந்தவர் அலெக்ஸாந்தர் துப்யான்ஸ்கி. ஆண்டுக்கு ஒருமுறை சங்கப் பாடல்கள் குறித்த வாசிப்புப் பட்டறையை ஒழுங்கு செய்து இந்த ஆர்வம் குறையாமல் அவர் காப்பாற்றி வந்தார்’ என ஆய்வாளர் ரவிக்குமார் குறிப்பிடுகிறார்.


[http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/1339-2020-11-21-06-14-08 பழ. நெடுமாறன் குறிப்பு]
இந்தியவியல் அறிஞர்கள் பொதுவாக சம்ஸ்கிருதம் சார்ந்தே தங்களுடைய ஆய்வுகளை மேற்கொண்டு வந்த காலகட்டத்தில் தமிழ்ப்பண்பாடு மற்றும் வரலாறு சார்ந்து ஆய்வுகளை முன்னெடுத்த முன்னோடிகளில் அலக்ஸாண்டர் துப்யான்ஸ்கி முக்கியமானவர். [[பர்ட்டன் ஸ்டெயின்]], [[ஜார்ஜ்.எல்.ஹார்ட்]], [[நொபுரு கரஷிமா]] போன்றவர்களின் வரிசையில் வைக்கப்படவேண்டியவர். [[டேவிட் ஷுல்மான்]], [[அஸ்கோ பர்ப்போலா|அஸ்கோ பர்ப்போலா,]] யாரோஸுலோவ் வாசெக் போன்றவர்களுக்கு முன்னோடியானவர்.


[https://www.hindutamil.in/news/opinion/columns/604104-alexander-dubyanskiy.html தி இந்து கருத்துப்பேழை - அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி: தமிழ் தந்த பரிசு! - ரவிக்குமார், ‘மணற்கேணி’ இலக்கிய ஆய்விதழின் ஆசிரியர்]
தொல்காப்பியம் குறித்த ஆய்வுகள், தொல்தமிழ்ச்சடங்குகள் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வுகளுக்காக போற்றப்படுகிறார். இவ்விரு தளங்களிலும் தமிழ்ப்பண்பாட்டு மரபின் தனித்தன்மையை அடையாளம் காட்டியவர் அலக்ஸாண்டர் துப்யான்ஸ்கி.
== உசாத்துணை ==
* துப்யான்ஸ்கி பற்றி [https://mutiru-tamilosai.blogspot.com/2011/09/alexander-dubianskiy-tamil-scholar-from.html தமிழ் ஓசை] பதிவு
* [https://muelangovan.blogspot.com/2008/12/1941.html முனைவர் இளங்கோவன் பதிவு]
* [http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/1339-2020-11-21-06-14-08 பழ. நெடுமாறன் இரங்கல் குறிப்பு]
* [https://www.hindutamil.in/news/opinion/columns/604104-alexander-dubyanskiy.html தி இந்து கருத்துப்பேழை - அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி: தமிழ் தந்த பரிசு! - ரவிக்குமார், 'மணற்கேணி’ இலக்கிய ஆய்விதழின் ஆசிரியர்]
*[https://www.hindutamil.in/news/tamilnadu/603033-mk-stalin-condolences-for-alexander-dubyanskiy-s-death.html அலக்ஸாண்டர் துப்யான்ஸ்கி- மு.க.ஸ்டாலின் இரங்கல்]
*[https://www.hindutamil.in/news/tamilnadu/603033-mk-stalin-condolences-for-alexander-dubyanskiy-s-death-2.html அலக்ஸாண்டர் துப்யான்ஸ்கி - இந்து தமிழ் இரங்கல் கட்டுரை]
*[https://www.facebook.com/WriterRavikumar/posts/10157457359622062 துப்யான்ஸ்கி பற்றி ரவிக்குமார் பேஸ்புக் பதிவு]
*[https://youtu.be/jdrA0WdZSwA Alexander Dubyanskiy மறைவு - யார் இவர்? பின்னணி என்ன?, பிபிசி செய்தி தமிழ், youtube.com]
*[https://www.thehindu.com/news/national/tamil-nadu/russian-tamil-scholar-is-no-more/article33128413.ece Russian Tamil scholar is no more, thehindu.com, Nov 2020]
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Latest revision as of 07:22, 24 February 2024

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி
ஜெயகாந்தனுடன் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி
அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி (அலெக்சாண்டர் மிகைலுவிச் துபியான்ஸ்கி, Alexander Mikhailovitch Dubiansky, Alexander Dubianskiy, Alexander Dubyanskiy, or Aleksandr Dubiansky)(1941-2020) ரஷ்ய தமிழறிஞராகவும், மொழியியல் அறிஞராகவும் அறியப்படுகிறார். இவர் தமிழின் சங்க நூல்களை ரஷ்யாவில் அறிமுகப்படுத்தியவர்களில் முன்னோடி.

பிறப்பு,கல்வி

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி ஏப்ரல் 27, 1941-ம் ஆண்டு ரஷ்யாவில் மிகையல் மற்றும் கெலன் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார்.

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி சில ஆண்டு கால ராணுவ சேவைக்குப் பின்னர் 1965-ம் ஆண்டு மாஸ்கோ ஓரியண்டல் இன்ஸ்டிட்யூட்டில் ( Moscow State University's Institute of Oriental Language) தமிழ்ப் பட்டப்படிப்பை முடித்து பின்னர் அங்கேயே முதுநிலைப் பட்டப்படிப்பையும் முடித்தார்.

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி செவ்வியல் தமிழ் இலக்கியத்தின் கவிதையியல் என்று சங்கத்தமிழ் பற்றி ஆய்வு செய்து அதே கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னாளில் இந்த ஆய்வை ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார்.

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி 1979-ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து சென்னை பல்கலைக்கழகத்தில் ஒன்பது மாதங்கள் தங்கி ஆய்வுகள் மேற்கொண்டார். பேராசிரியர் ந. சஞ்சீவி அவர்களிடம் புறநானூறு கற்றார். பின்னர் பேராசிரியர் பொற்கோ அவர்களிடம் தொல்காப்பியம் பயின்றார்.

தனிவாழ்க்கை

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி நத்தாலியா என்பவரை திருமணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு தான்யா என்ற ஒரே மகள்.

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மாஸ்கோ ஓரியண்டல் இன்ஸ்டிட்யூட்டில் ( Moscow State University's Institute of Oriental Language) 1973- ஆம் ஆண்டு விரிவுரையாளராக பணியமர்ந்தார். பின்னர் உதவிப் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்று பணியாற்றினார். பின்னாளில் மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையின் தலைவராக பணியில் இருந்தார். மேலும் இவர் பத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் தமிழ் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.

நன்றி-bbc.com

பணிகள்

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி ரஷ்யாவில் உள்ள லெனின் கிராடில் தமிழ் கற்றுக்கொடுக்க ஒரு பள்ளியை உருவாக்கினார். தூயதமிழில் பேசவும், எழுதவும் பலரை பயிற்றுவித்தார். மேலும் பல ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் 50 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணிபுரிந்துள்ளார். நூற்றுக்கும் மேற்ப்பட்ட கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார், பெரும்பாலானவை தமிழாய்வுகள்.

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி 1979-ம் ஆண்டில் ஓலைச் சுவடியிலிருந்து தமிழ்ப் பாடல்கள் என்ற தலைப்பில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய நூல்களிலிருந்து சில பாடல்களைத் தேர்ந்தெடுத்து ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். தமிழ் இலக்கியம் ஒரு பார்வை என்ற தலைப்பில் பத்தொன்பதாவது நூற்றாண்டு வரையிலான தமிழ் இலக்கியங்கள் குறித்து ரஷ்ய மொழியில் ஒரு நூலை 1987-ம் ஆண்டில் எழுதி வெளியிட்டார்.

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி 1989-ம் ஆண்டு பழந்தமிழ் பாடல்களில் சடங்கு, புராண இலக்கிய வேர்கள் என்னும் இரு நூல்களை ரஷ்ய மொழியில் எழுதியுள்ளார். இந்த நூல்கள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இவர் புறநானூற்றை ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். ஆங்கிலத்தில் இந்நூல் Ritual and Mythological Sources of the Early Tamil Poetry என்ற தலைப்பில் 2000-த்தில் வெளியானது.

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி உலகெங்கிலும் பயணங்கள் மேற்கொண்டு பல்வேறு ஆய்வரங்குகளில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். இவர் 2010-ம் ஆண்டில் கோவையில் நடந்த செந்தமிழ் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு தொல்காப்பியம் பற்றி உரையாற்றினார். தமிழ் எழுத்தாளர்களான ஜெயகாந்தன், கார்த்திகேசு சிவத்தம்பி, வைரமுத்து மற்றும் பலருடன் நல்ல தொடர்பில் இருந்தார். ஒவ்வொரு ஆண்டும் சங்கப் பாடல்கள் குறித்த வாசிப்புப் பட்டறை ஒன்றை ரஷ்ய ஆராய்ச்சி மாணவர்களுக்கு நடத்திவந்தார். 2016-ம் ஆண்டு தமது 75-வது பிறந்தநாளின்போது பல்வேறு தமிழறிஞர்களின் கட்டுரைகளடங்கிய தமிழ் தந்த பரிசு என்ற 600 பக்கங்கள் கொண்ட நூலை வெளியிட்டார்.

விவாதங்கள்

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி 2010-ம் ஆண்டு செந்தமிழ் மாநாட்டில் சமர்ப்பித்த தொல்காப்பியம் பற்றிய கட்டுரை பலவிவாதங்களை உருவாக்கியது. தொல்காப்பியம் இந்திய மரபில், சம்ஸ்கிருத மொழியிலும் பிராகிருத மொழியிலும் வெளிவந்த பல்வேறு இலக்கணநூல்களின் வழிநூல் என சொல்லப்படுவதை மறுத்தார்."தொல்காப்பியத்தை ஆராய்ந்த அறிஞர்களில் ஒருவரான சுப்ரமணிய சாஸ்திரி தொல்காப்பியத்தின் பல பகுதிகள் சம்ஸ்கிருத நூல்களின் நேரடி மொழிபெயர்ப்புகள் என்று கூறியுள்ளார். நான் அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், அந்தக் காலத்தில் பிரதிகளுக்கிடையே இருந்த உறவு என்பது மொழிபெயர்ப்பு என்பதாக அமைந்திருக்கவில்லை. மாறாக, ஒரு மொழியில் இருப்பதை இன்னொன்றில் வழங்குவது என்ற விதத்தில்தான் இருந்தது. ஒன்றிலிருந்து கடன் பெறுவதையோ, ஒன்றன் கருத்தாக்கத்தை இன்னொரு மொழியில் பயன்படுத்துவதையோ அப்போது யாரும் தவறாக நினைக்கவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார். அவர் பல மூலநூல்களை கருத்தில்கொள்ளவில்லை என ஒரு பக்கமும், அவர் தொல்காப்பிய அழகியலுக்கு இந்திய இலக்கியத்தில் மூலங்கள் உண்டு என்கிறார் என மறுபக்கமும் விவாதங்கள் உருவாயின

இந்த விவாதங்கள் பற்றி குறிப்பிடும் ஆய்வாளர் ரவிக்குமார் இப்படிச் சொல்கிறார். "தொல்காப்பியம் குறித்து அவர் வாசித்த கட்டுரை பல விவாதங்களை எழுப்பியது. ஆனால் துப்யான்ஸ்கி தனது ஆய்வுக் கட்டுரையில் எழுப்பிய ஒரு பிரச்சனையை யாரும் விவாதிக்கவில்லை. சங்க இலக்கியங்களுக்கும், தொல்காப்பியத்துக்கும் இடையே காணப்படும் முரண்பாடுகளை அவரது கட்டுரை சுட்டிக்காட்டியது. அதற்காக சில உதாரணங்களையும் அவர் குறிப்பிட்டார். 'தொல்காப்பியம் நொச்சித் திணைப் பற்றி எங்கும் பேசவில்லை. உழிஞைத் திணைப் பற்றிப் பேசும்போது அதன் துணைப் பிரிவாக ஒரே ஒரு இடத்தில் நொச்சி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தொல்காப்பியத்துக்குப் பிறகு எழுதப்பட்ட புறப்பொருள் வெண்பாமாலை நொச்சித் திணையை விரிவாகப் பேசியுள்ளது. பிரிவு குறித்து தொல்காப்பியம் பேசிய இடத்தில் பிரிவுக்கான காரணங்களாக ஓதல், பகை, தூது ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. ஆனால், சங்கப் பாடல்களில் பிரிவுக்கு இரண்டு காரணங்கள் மட்டுமே கூறப்பட்டுள்ளன. பொருள் மற்றும் போர் ஆகியவைப் பற்றி மட்டுமே அவை பேசுகின்றன. ஓதல், தூது ஆகியவை சங்கப் பாடல்களில் எங்குமே பிரிவுக்கான காரணமாகப் பேசப்படவில்லை. பெண்ணோடு கடற்பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று தொல்காப்பியம் கூறுகிறது. அத்தகைய நிகழ்வு எதுவும் சங்கப் பாடல்களில் இல்லை. தலைவனின் தோழன் காதலர்கள் சந்திப்பதற்காகப் பன்னிரெண்டு விதமான காரியங்களைச் செய்வது குறித்தும் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. ஆனால், சங்கப் பாடல்களில் அத்தகைய நிகழ்வுகளை எங்குமே நாம் காணமுடியவில்லை’ என்று துப்யான்ஸ்கி குறிப்பிட்டார். இந்த கருத்துகள் இப்போதும் விவாதிக்கப்படாமலேயே உள்ளன".

விருது

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கியின் பணியைப் பாராட்டி அவருக்குத் தெற்காசியக் கல்விச் சங்கம் (The South Asian Studies Association) தலைசிறந்த கல்வியாளர் விருது (Exemplar Academic Awards) 2013-ல் வழங்கியது.

மறைவு

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி நவம்பர் 18, 2020-ம் ஆண்டு, தனது 79- ஆம் வயதில் கொரோனாவினால் உயிரிழந்தார்.

இலக்கிய இடம்

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி 2000-ம் ஆண்டில் சங்க இலக்கியத்தில் இடம்பெறும் சடங்குகள், தொன்மங்கள் குறித்து எழுதிய நூல் (Ritual and Mythological Sources of the Early Tamil Poetry) தமிழுக்கு அவர் அளித்த முக்கியமான பங்களிப்பு என்று பழ. நெடுமாறன் வரையறுக்கிறார்.

ருஷ்ய கல்விப்புலத்தில் தமிழிலக்கியம் மீதான தொடர் ஆர்வத்தை உருவாக்கி நிலைநிறுத்தியவர் அலக்ஸாண்டர் துப்யான்ஸ்கி. ’ரஷ்யாவில் பேராசிரியர் துப்யான்ஸ்கியை மையமாகக் கொண்டுதான் கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழ் ஆய்வுகள் நடந்துவந்தன. அதிலும் குறிப்பாக சோவியத் யூனியன் தகர்வுக்குப் பிறகு முன்னேற்றப் பதிப்பகம், ராதுகா பப்ளிஷர்ஸ் போன்றவை மூடப்பட்டதற்குப் பிறகு தமிழ் தொடர்பான ஆர்வம் ரஷ்யாவில் வெகுவாகக் குறைந்து விட்டது. அதைக் கடந்த 25 ஆண்டுகளாகத் தனி ஒரு மனிதராகக் காப்பாற்றி வந்தவர் அலெக்ஸாந்தர் துப்யான்ஸ்கி. ஆண்டுக்கு ஒருமுறை சங்கப் பாடல்கள் குறித்த வாசிப்புப் பட்டறையை ஒழுங்கு செய்து இந்த ஆர்வம் குறையாமல் அவர் காப்பாற்றி வந்தார்’ என ஆய்வாளர் ரவிக்குமார் குறிப்பிடுகிறார்.

இந்தியவியல் அறிஞர்கள் பொதுவாக சம்ஸ்கிருதம் சார்ந்தே தங்களுடைய ஆய்வுகளை மேற்கொண்டு வந்த காலகட்டத்தில் தமிழ்ப்பண்பாடு மற்றும் வரலாறு சார்ந்து ஆய்வுகளை முன்னெடுத்த முன்னோடிகளில் அலக்ஸாண்டர் துப்யான்ஸ்கி முக்கியமானவர். பர்ட்டன் ஸ்டெயின், ஜார்ஜ்.எல்.ஹார்ட், நொபுரு கரஷிமா போன்றவர்களின் வரிசையில் வைக்கப்படவேண்டியவர். டேவிட் ஷுல்மான், அஸ்கோ பர்ப்போலா, யாரோஸுலோவ் வாசெக் போன்றவர்களுக்கு முன்னோடியானவர்.

தொல்காப்பியம் குறித்த ஆய்வுகள், தொல்தமிழ்ச்சடங்குகள் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வுகளுக்காக போற்றப்படுகிறார். இவ்விரு தளங்களிலும் தமிழ்ப்பண்பாட்டு மரபின் தனித்தன்மையை அடையாளம் காட்டியவர் அலக்ஸாண்டர் துப்யான்ஸ்கி.

உசாத்துணை


✅Finalised Page