இரா.சாரங்கபாணி: Difference between revisions
(Added First published date) |
mNo edit summary |
||
(3 intermediate revisions by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|TitleSection=சாரங்கபாணி|DisambPageTitle=[[சாரங்கபாணி (பெயர் பட்டியல்)]]}} | |||
{{Read English|Name of target article=R. Sarangapani|Title of target article=R. Sarangapani}} | {{Read English|Name of target article=R. Sarangapani|Title of target article=R. Sarangapani}} | ||
[[File:Sarangapani.jpg|thumb|இரா. சாரங்கபாணி (நன்றி: முனைவர் மு.இளங்கோவன் - (muelangovan.blogspot.com)]] | [[File:Sarangapani.jpg|thumb|இரா. சாரங்கபாணி (நன்றி: முனைவர் மு.இளங்கோவன் - (muelangovan.blogspot.com)]] | ||
இரா. சாரங்கபாணி (செப்டம்பர் 18, 1925 - ஆகஸ்ட் 23, 2010) தமிழ்ப் பேராசிரியர், தமிழறிஞர் மற்றும் ஆய்வாளர். காரைக்குடி அழகப்பா கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் தமிழ்ப்பேராசிரியராகவும், ஆய்வறிஞராகவும் பணிபுரிந்தார். திருக்குறள் உரைகளை | இரா. சாரங்கபாணி (செப்டம்பர் 18, 1925 - ஆகஸ்ட் 23, 2010) தமிழ்ப் பேராசிரியர், தமிழறிஞர் மற்றும் ஆய்வாளர். காரைக்குடி அழகப்பா கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் தமிழ்ப்பேராசிரியராகவும், ஆய்வறிஞராகவும் பணிபுரிந்தார். திருக்குறள் உரைகளை ஒப்பிட்டு ஆராய்ந்து நூல்கள் எழுதினார். | ||
==பிறப்பு, கல்வி== | ==பிறப்பு, கல்வி== | ||
இரா.சாரங்கபாணி சிதம்பரத்திற்கு அருகில் உள்ள தேவங்குடியில், | இரா.சாரங்கபாணி சிதம்பரத்திற்கு அருகில் உள்ள தேவங்குடியில், செப்டெம்பர் 18, 1925 அன்று பொ.இராசகோபால் மழவராயர், சனமாலிகை அம்மையார் ஆகியோருக்குப் பிறந்தார். | ||
தேவங்குடியில் தொடக்கக் கல்வியையும், புவனகிரி கழக உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும், சிதம்பரம் பச்சையப்பன் பள்ளியில் ஆறாம்படிவம் வரையிலும் பயின்று, 1942-ல் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1947-ல் புலவர் பட்டமும், 1949-ல் | தேவங்குடியில் தொடக்கக் கல்வியையும், புவனகிரி கழக உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும், சிதம்பரம் பச்சையப்பன் பள்ளியில் ஆறாம்படிவம் வரையிலும் பயின்று, 1942-ல் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1947-ல் புலவர் பட்டமும், 1949-ல் இளநிலை இலக்கியப்பட்டமும் பெற்றார் சென்னைப் பல்கலைக் கழகத்தில். 1955-ல் முதுகலைப் பட்டமும் , 1962-ல் முதுநிலை இலக்கியப் பட்டமும், 1969-ல் முனைவர் பட்டமும் பெற்றார். | ||
==தனி வாழ்க்கை== | ==தனி வாழ்க்கை== | ||
ஜூன் 15, 1949 அன்று குடிமூலை என்ற ஊரில் தனலட்சுமி அம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார். அவரது மகன் அந்துவன் இங்கிலாந்து நாட்டில் மருத்துவராகத் தொழில் செய்கிறார். | ஜூன் 15, 1949 அன்று குடிமூலை என்ற ஊரில் தனலட்சுமி அம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார். அவரது மகன் அந்துவன் இங்கிலாந்து நாட்டில் மருத்துவராகத் தொழில் செய்கிறார். | ||
Line 21: | Line 22: | ||
* தமிழ்ப் பல்கலைக்கத்தில் ஆசிரியப்பணி புரிந்த சமயம் சங்க இலக்கியப் பொருட் களஞ்சியம் (இரு தொகுதிகள்) எழுதி வெளியிட்டார். | * தமிழ்ப் பல்கலைக்கத்தில் ஆசிரியப்பணி புரிந்த சமயம் சங்க இலக்கியப் பொருட் களஞ்சியம் (இரு தொகுதிகள்) எழுதி வெளியிட்டார். | ||
*காரைக்குடித் தமிழ் சங்கத்தில் துணைத் தலைவராக பல சங்க இலக்கிய வகுப்புகள் நடத்தியளித்தார். | *காரைக்குடித் தமிழ் சங்கத்தில் துணைத் தலைவராக பல சங்க இலக்கிய வகுப்புகள் நடத்தியளித்தார். | ||
*சிதம்பரம் தில்லைத் தமிழ் மன்றத்தில் மூன்றாண்டுகள் திருக்குறள் வகுப்புகளும், | *சிதம்பரம் தில்லைத் தமிழ் மன்றத்தில் மூன்றாண்டுகள் திருக்குறள் வகுப்புகளும், புறநானூறு வகுப்புகளும் நடத்தியுள்ளார். | ||
*யாழ்ப்பாணம் திருக்குறள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். | *யாழ்ப்பாணம் திருக்குறள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். | ||
*வ.சுப.மாணிக்கனாரின் ஆலோசனையின் பேரில் திருக்குறளுக்கு இதுவரை வெளிவந்துள்ள உரைவேறுபாடுகளைத் தொகுத்து, தக்க உரை எது எனக் காரணங்களோடு சுட்டி ''திருக்குறள் உரைவேற்றுமை'' நூல்களை எழுதினார். | *வ.சுப.மாணிக்கனாரின் ஆலோசனையின் பேரில் திருக்குறளுக்கு இதுவரை வெளிவந்துள்ள உரைவேறுபாடுகளைத் தொகுத்து, தக்க உரை எது எனக் காரணங்களோடு சுட்டி ''திருக்குறள் உரைவேற்றுமை'' நூல்களை எழுதினார். | ||
Line 74: | Line 75: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category: | [[Category:தமிழறிஞர்]] | ||
[[Category: | [[Category:பேராசிரியர்]] | ||
[[Category:Spc]] | [[Category:Spc]] |
Latest revision as of 11:07, 8 March 2025
- சாரங்கபாணி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சாரங்கபாணி (பெயர் பட்டியல்)
To read the article in English: R. Sarangapani.
இரா. சாரங்கபாணி (செப்டம்பர் 18, 1925 - ஆகஸ்ட் 23, 2010) தமிழ்ப் பேராசிரியர், தமிழறிஞர் மற்றும் ஆய்வாளர். காரைக்குடி அழகப்பா கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் தமிழ்ப்பேராசிரியராகவும், ஆய்வறிஞராகவும் பணிபுரிந்தார். திருக்குறள் உரைகளை ஒப்பிட்டு ஆராய்ந்து நூல்கள் எழுதினார்.
பிறப்பு, கல்வி
இரா.சாரங்கபாணி சிதம்பரத்திற்கு அருகில் உள்ள தேவங்குடியில், செப்டெம்பர் 18, 1925 அன்று பொ.இராசகோபால் மழவராயர், சனமாலிகை அம்மையார் ஆகியோருக்குப் பிறந்தார்.
தேவங்குடியில் தொடக்கக் கல்வியையும், புவனகிரி கழக உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும், சிதம்பரம் பச்சையப்பன் பள்ளியில் ஆறாம்படிவம் வரையிலும் பயின்று, 1942-ல் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1947-ல் புலவர் பட்டமும், 1949-ல் இளநிலை இலக்கியப்பட்டமும் பெற்றார் சென்னைப் பல்கலைக் கழகத்தில். 1955-ல் முதுகலைப் பட்டமும் , 1962-ல் முதுநிலை இலக்கியப் பட்டமும், 1969-ல் முனைவர் பட்டமும் பெற்றார்.
தனி வாழ்க்கை
ஜூன் 15, 1949 அன்று குடிமூலை என்ற ஊரில் தனலட்சுமி அம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார். அவரது மகன் அந்துவன் இங்கிலாந்து நாட்டில் மருத்துவராகத் தொழில் செய்கிறார்.
கல்விப்பணி
1949-ம் ஆண்டில் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியேற்று, பேராசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் உயர்ந்தார். 1979 முதல் மூன்றாண்டுகள் உயராய்வு நடுவத்தின் இயக்குநராகவும் இருந்தார். இருபதாண்டுகளுக்கு மேல் வ.சுப. மாணிக்கனாருடன் பணி செய்யும் வாய்ப்பைப் பெற்றார்.
1982-1986 தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு நிலைப் பேராசிரியராகப் பணியேற்று, தமிழ் இலக்கியத்துறைத் தலைவராக உயர்ந்தார்.
1988-1994 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் திருக்குறள் ஆய்வகத்தில் சிறப்புநிலைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
பாரதியார் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகங்களின் தமிழ்ப் பாடநூற் குழுவில் பாடங்களை வடிவமைத்தார்.
தமிழக மற்றும் கேரளப் பல்கலைக்கழகங்களில் இயற்கை விருந்து, குறள் விருந்து, பரிபாடல் திறன், சித்தர் இலக்கியங்களில் திருக்குறள் ஆகியவை பாடநூல்களாக இடம்பெற்றுள்ளன.
இலக்கியப் பணி
- தமிழ்ப் பல்கலைக்கத்தில் ஆசிரியப்பணி புரிந்த சமயம் சங்க இலக்கியப் பொருட் களஞ்சியம் (இரு தொகுதிகள்) எழுதி வெளியிட்டார்.
- காரைக்குடித் தமிழ் சங்கத்தில் துணைத் தலைவராக பல சங்க இலக்கிய வகுப்புகள் நடத்தியளித்தார்.
- சிதம்பரம் தில்லைத் தமிழ் மன்றத்தில் மூன்றாண்டுகள் திருக்குறள் வகுப்புகளும், புறநானூறு வகுப்புகளும் நடத்தியுள்ளார்.
- யாழ்ப்பாணம் திருக்குறள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
- வ.சுப.மாணிக்கனாரின் ஆலோசனையின் பேரில் திருக்குறளுக்கு இதுவரை வெளிவந்துள்ள உரைவேறுபாடுகளைத் தொகுத்து, தக்க உரை எது எனக் காரணங்களோடு சுட்டி திருக்குறள் உரைவேற்றுமை நூல்களை எழுதினார்.
இறப்பு
ஆகஸ்ட் 23, 2010 அன்று சாரங்கபாணி சிதம்பரம் அண்ணாமலை நகரில் உயிர்நீத்தார்.
பரிசுகள், விருதுகள்
- 1975 - ’பரிபாடல் திறன்’ நூலுக்காக, தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு
- 1999 - ’மாணிக்கச்செம்மல்’ நூலுக்காக தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு
- 1981 - பெரும்புலவர் பட்டம் - குன்றக்குடி ஆதீனம்
- 1991 - திருக்குறள் பொற்கிழி - ஶ்ரீராம் நிறுவனம்
- 1998 - திருக்குறள் விருது - தமிழக அரசு
- 2000 - தமிழ்ப்பேரவைச்செம்மல் - மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
அழகப்பா கல்லூரியில் அவரது மாணவராக இருந்த சுப.வீரபாண்டியன் தன் வந்ததும் வாழ்வதும் என்ற நூலில் "சாரங்கபாணியார் செய்தது ஆசிரியத் தொழில் அன்று, ஆசிரியத் தொண்டு" என்று குறிப்பிடுகிறார்.
படைப்புகள்
- இயற்கை விருந்து (1962)
- குறள் விருந்து (1968)
- பரிபாடல் திறன் (1972)
- A critical Study of Paripatal (1984)
- A Critical Study of Ethical Literature in Tamil (1984)
- சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் (இருதொகுதி) (1986)
- திருக்குறள் உரை வேற்றுமை, அறத்துப்பால் (1989)
- திருக்குறள் உரையாசிரியர்கள் (1991)
- திருக்குறள் உரை வேற்றுமை, பொருட்பால் (1992)
- திருக்குறள் உரை வேற்றுமை, காமத்துப்பால் (1992)
- சங்கச் சான்றோர்கள் (1993)
- வள்ளுவர் வகுத்த காமம் (1994)
- புறநானூற்றுப் பிழிவு (1994)
- மாணிக்கச் செம்மல் (1998)
- திருக்குறள் இயல்புரை (1998)
- சித்தர் இலக்கியங்களில் திருக்குறள் (1999)
- திருக்குறள் பரிமேலழகர் உரைவிளக்கம் (2000)
- சங்கத்தமிழ் வளம் (2003)
- பரிபாடல் உரைவிளக்கம் (2003), கோவிலூர் மடம்
- சங்க இலக்கிய மேற்கோள்கள் (2008)
- சங்க இலக்கியப்பிழிவு (2008)
- திருக்குறள் செம்மொழிப்பதிப்பு
- பரிபாடல் செம்மொழிப்பதிப்பு
உசாத்துணை
- அறிஞர் இரா.சாரங்கபாணி அவர்களின் தமிழ்வாழ்க்கை - முனைவர் மு.இளங்கோவன் (muelangovan.blogspot.com)
- சுப.வீரபாண்டியன் - வந்ததும் வாழ்வதும் (தன் வரலாற்று நூல்)
- திருக்குறள் உரை வேற்றுமை நூற்பதிப்பும், மறுபதிப்பின் தேவையும்-முனைவர் கல்பனா சேக்கிழார்
- அறிஞர் இரா.சாரங்கபாணி அவர்களின் தமிழ்வாழ்க்கை - முனைவர் மு.இளங்கோவன் (muelangovan.blogspot.com)
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:07:16 IST