under review

விவேகானந்தர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
(55 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
[[File:விவேகானந்தர்.png|thumb|விவேகானந்தர்]]
[[File:விவேகானந்தர்.png|thumb|விவேகானந்தர்]]
விவேகானந்தர்  
[[File:விவேகானந்தர்6.png|thumb|விவேகானந்தர்]]
விவேகானந்தர் (நரேந்திரநாத் தத்தா) (சுவாமி விவேகானந்தர்) (ஜனவரி 12, 1863 - ஜூலை 4, 1902) சிந்தனையாளர், ஆன்மிகவாதி. [[ராமகிருஷ்ண பரமஹம்சர்|ராமகிருஷ்ண பரமஹம்சரின்]] சீடர். அத்வைத வேதாந்தி. இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல உரைகளை ஆற்றினார். அரசியல், இலக்கியம், தத்துவம், கலை என எல்லா தளத்திலும் தேசிய அடையாளமாகக் கொள்ளத்தக்க கலைஞர்களை அடையாளம் காட்டினார். இந்திய மரபை மீட்டுருவாக்கம்செய்து நவீன யுகத்தை இந்தியா எதிர்கொள்வதில் ஆற்றவேண்டிய பணிகளை அடையாளம் காட்டினார். இந்தியாவின் மறுமலர்ச்சி காலகட்டத்தில் தோன்றிய புதிய ஆன்மிக இயக்கங்களில்  அவர் ஏற்படுத்திய ராமகிருஷ்ணா மடமும், மிஷனும் குறிப்பிடத்தகுந்தவை.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
சுவாமி விவேகானந்தர் (சனவரி 12, 1863 - சூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றவை.
விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. விவேகானந்தர் கல்கத்தாவில் விஸ்வநாத் தத்தா, புவனேஸ்வரி தேவி இணையருக்கு ஜனவரி 12, 1863-ல் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சகோதரிகள் கிரண் பாலா,ஜோகேந்திர பாலா. இளைய சகோதரர்கள் மகேந்திரநாத் தத்தா, பூபேந்திரநாத் தத்தா. பூபேந்திரநாத் தத்தா இந்திய சுதந்திரத்திற்குப் போராடியவர்.  கிரண்பாலா முதல் குழந்தையைப் பெற்றெடுத்த போது இறந்தார்.இளைய சகோதரியான ஜோகேந்திரபாலா சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டு புகுந்த வீட்டினரின் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879-ல் கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தத்துவம் பயின்றார். 1884-ல் தந்தை இறந்தார்.
[[File:விவேகானந்தர்2.png|thumb|விவேகானந்தர்]]


வாழ்க்கை
== ஆன்மிக வாழ்க்கை ==
பிறப்பும் இளமையும்
விவேகானந்தர் ஆரம்பத்தில் பிரம்ம சமாஜத்தின் உறுப்பினராக இருந்தார். 1881-ல் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தார். முதலில் அவரின் இறை பற்றிய கருத்துக்களையும், வழிபாட்டு முறைகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ராமகிருஷ்ணரின் போதனைகள் உருவம், அருவம் ஆகிய இரண்டையும் பேசின. அவர் வழியாக பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் ஆகிய இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொண்டார். 1886-ல் ராமகிருஷ்ண பரமஹம்சர் இறந்தார். அவர் இறப்பதற்கு முன்பு துறவறம் ஏற்கத் திட்டமிட்டிருந்த தனது இளம் சீடர்களுக்கு காவித் துணிகளை வழங்கி அவர்களை விவேகானந்தரிடம் ஒப்படைத்தார். அவர் இறந்தபின் இளம் சீடர்கள் டிசம்பர் 24, 1886-ல் துறவற சபதம் எடுத்து ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொண்டனர். பரனாகூரில் முதல் மடத்தை உருவாக்கினர்.


சுவாமி விவேகானந்தரின் வலது கையின், கைரேகைப் பதிவு
அதன்பின் விவேகானந்தர் நான்கு ஆண்டுகள் இந்தியா முழுவதும் துறவியாக அலைந்தார். தன் பயண முடிவில் டிசம்பர் 24, 1892-ல் கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்தார். 1893-ல் சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார். அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துகளை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.
விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.


பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச்சு கல்லூரியில் (Scottish Church College) தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.
1897-ல் கடல் வழியாக இந்தியா திரும்பினார். கொழும்பில் ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியால் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் கொழும்பு முதல் கல்கத்தா வரை உரைகள் ஆற்றினார். 1899-ல் இரண்டாவது முறையாக மேல்நாட்டுப் பயணம் செய்தார். ஐக்கிய அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் பயணம் செய்தார். டிசம்பர் 1900-ல் இந்தியா திரும்பினார். தன் இறப்பு வரை பேலூர் மடத்தில் இருந்தார்.
[[File:விவேகானந்தர்3.png|thumb|1887 பரானகரில் சந்நியாசிகளுடன் விவேகானந்தர்]]


சகோதர சகோதரிகள்
===== மாணவர்கள் =====
சுவாமி விவேகானந்தருக்கு மகேந்திரநாத் தத்தர் மற்றும் பூபேந்திரநாத் தத்தர் எனும் இரு இளைய சகோதரர்களும், மூத்த, இளைய சகோதரிகளும் இருந்தனர். பூபேந்திரநாத் தத்தர் இந்திய சுதந்திரத்திற்குப் போராடியவர். சகோதரிகளில் ஒருவர் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டு புகுந்த வீட்டினரின் கொடுமை தாளாது தற்கொலை செய்து கொண்டார்.[1]
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் செய்திகளால் மேற்குலகில் பலர் தாக்கம் பெற்றனர். அவர்களில் சிலர் அவருடைய சீடர்களாகவோ, நண்பர்களாகவோ ஆயினர். அவர்களில் மார்கரெட் நோபல் (சகோதரி நிவேதிதா), கேப்டன், செவியர், ஜோஸ்பின் மெக்லியோட், சாரா ஓலே புல் ஆகியோர் இவரின் குறிப்பிடத்தகுந்த மேற்கத்திய மாணவர்கள். நிவேதிதா கொல்கத்தாவில் பெண் கல்விக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். இவரின் இந்தியச் சீடர்கள் ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து சன்னியாசிகள் ஆயினர்.
இராமகிருஷ்ணருடன்
இறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். இராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள், உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.


துறவறம்
== அமைப்புப் பணிகள் ==
முதன்மைக் கட்டுரை: சுவாமி விவேகானந்தரின் இந்தியப் பயணங்கள் (1888–1893)
விவேகானந்தர் ராமகிருஷ்ண மிஷன் மற்றும் ராமகிருஷ்ண மடம் ஆகியவற்றை மே 1, 1897-ல் தோற்றுவித்தார். இவை இரண்டும் மேற்கு வங்கத்திலுள்ள பேலூர் மடத்தை தலைமை இடமாகக் கொண்டன.  ராமகிருஷ்ண மடம் அத்வைத வேதாந்தத்தையும், நான்கு யோகங்களையும் (ஞான, பக்தி, கர்ம, ராஜ) போதிக்கும் இடம். நான்கு யோக முறைகளுள் கர்ம யோகத்தை முதன்மையாக முன்வைப்பது. 1909-ல் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது. மடத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர்கள் மிஷனின் ஆளும் குழுவாகவும் பணியாற்றுகின்றனர். ராமகிருஷ்ணரின் நேரடி சீடரான சுவாமி அகந்தானந்தாவால் சர்காச்சியில் பஞ்ச நிவாரணம் தொடங்கப்பட்டது. ராமகிருஷ்ணரின் நேரடி சீடரான சுவாமி பிரம்மானந்தா, ஆணையத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். 1902-ல் விவேகானந்தரின் மரணத்திற்குப் பிறகு [[சாரதா தேவி]] அமைப்பின் ஆலோசனைத் தலைவராக முக்கியப் பங்காற்றினார்.
1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர். அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.
===== ராமகிருஷ்ண மடம் =====
ராமகிருஷ்ண பரமஹம்சரை குருவாகக் கொண்ட சீடர்களை உருவாக்குவதும், அவரின் போதனைகளைப் பரப்புவதும் முக்கியப் பணியாகக் கொண்டது.
===== ராமகிருஷ்ண மிஷன் =====
மருத்துவம், நிவாரணம், கல்வித்திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தும் அமைப்பு.


குரல் வளம்
== எழுத்து ==
தங்கக் குடத்தில் தட்டினால் எழும் கிண்கிணி நாதம் போன்ற இனிமையான குரல் என்று சட்டம்பி சுவாமிகள், சுவாமி விவேகானந்தரது குரல் வளம் குறித்துக் கூறுகின்றார்.[2]
விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவர் எழுத்துக்கள், கடிதங்கள், பேச்சுக்கள், பேட்டிகள் முதலியன 'The complete works of Swami Vivekananda' என்ற பெயரில் தொகுக்கப்பட்டன. இத்தொகுப்பு தமிழ் மொழியிலும் 'விவேகானந்தரின் ஞான தீபம்' என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது. இவையே பின்னர் 'எழுந்திரு! விழித்திரு!' என்ற தலைப்பில் பதினொரு பகுதிகளாக வெளியிடப்பட்டன. 'Karma Yoga, Raja Yoga, Vedanta Philosophy: An address before the Graduate Philosophical Society', 'Lectures from Colombo to Almora', 'Vedanta philosophy: lectures on Jnana Yoga' ஆகிய நூல்கள் விவேகானந்தர் வாழ்ந்த காலத்திலேயே வெளியிடப்பட்டன.
[[File:விவேகானந்தர்4.png|thumb|விவேகானந்தர் 1893-ல் சிகாகோ மாநாட்டில்]]


மேலைநாடுகளில்
== தத்துவம் ==
Search Wikisource
விவேகானந்தர் அத்வைத வேதாந்தத்தின் மேல் நம்பிக்கை கொண்டிருந்தார். அனைத்து மதங்களின் மீதும் நம்பிக்கையையும் மரியாதையையும் வலியுறுத்தினார். அனைத்து மதங்களும் இறைவனை அடைவதற்கான வழியே என்றார். அனைத்து மதங்களும் சரியாகப் பின்பற்றப்பட்டால் ஒரே இலக்கை நோக்கி இட்டுச் செல்லும் என்றார்.
விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்
முதன்மைக் கட்டுரை: உலகச் சமயங்களின் பாராளுமன்றம்


1893-ஆம் ஆண்டின் சிகாகோவில் நடைபெற்ற உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் உரையாற்றியவர்களில் சிலர்: இடமிருந்து வலமாக: வீர்சந்த் காந்தி, அனகாரிக தர்மபால, சுவாமி விவேகானந்தர் மற்றும் அமி ஜி. பொனெட் மௌரி
இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது சுவாமி விவேகானந்தர் மக்களின் வறுமை மற்றும் பின்தங்கிய நிலையைக் கண்டார். மக்கள் திரளைப் புறக்கணித்ததே இந்தியாவின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நம்பினார். மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியத்தேவையை வழங்குவதே முக்கியமான பணி என்று கருதினார். இவர்களுக்கு விவசாயம், கிராமத் தொழில்கள் போன்றவற்றின் மேம்பட்ட முறைகளை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும், நம்பிக்கையை அளிக்க வேண்டும் என்றார். பொருளாதார நிலையை மேம்படுத்த உலக அறிவு, மற்றும் ஆன்மீக அறிவு ஆகியவையே இதற்கான தீர்வு என்று கண்டார். இவற்றைக் கல்வியின் மூலம் பரப்ப ராமகிருஷ்ண அமைப்புகளை ஏற்படுத்தினார்.
கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். 1893-இல் சிகாகோவில் நடைபெற்ற உலகச் சமயங்களின் மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு[3], அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துகளை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.
[[File:விவேகானந்தர்5.png|thumb|விவேகானந்தர் 1897-ல் முதல் உலக சுற்றுப்பயணத்திற்குப் பின்]]
விவேகானந்தர் நேரடியாக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்களிப்பாற்றவில்லை. ஆனால் பல தலைவர்கள் இவரின் சிந்தனைகளால் தாக்கம் பெற்றனர். பாலகங்காதர திலகர், ஜெகதீஷ் சந்திரபோஸ் ஆகிய ஆளுமைகளுடன் உரையாடலில் இருந்தார். கலை இலக்கியம் சார்ந்து அவர் முன்வைத்த ஆளுமைகள் இந்திய மறுமலர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தனர். [[அரவிந்தர்]] தன் ஆத்ம குருவாக விவேகானந்தரைக் குறிப்பிட்டார். காந்தி தன் தேச பக்தியைப் பெருக்கியதில் விவேகானந்தரின் பங்கைக் குறிப்பிட்டுள்ளார். சுபாஷ் சந்திர போஸ், நேரு ஆகியோரும் விவேகானந்தரின் தாக்கம் பெற்றவர்கள்.
== பங்களிப்பு ==
நவீன இந்தியாவை உருவாக்குவதில் விவேகானந்தரின் சிந்தனைகள் முக்கியப் பங்களிப்பாற்றியதாக ஏ.எல்.பாஷ்யம் போன்ற வரலாற்றாசிரியர்கள் கருதினர்.


இந்தியா திரும்புதல்
* மதம் என்பது உலகப்பொதுவான ஆழ்நிலை உண்மையை பிரதிபளிக்கக் கூடிய ஒன்று என்றார். மதம் என்பது பிரக்ஞைப்பூர்வமான அறிவியல் (science of consciousness) என்றார். மதமும் அறிவியலும் ஒன்றை ஒன்று நிராகரிக்கக்கூடியவை அல்ல மாறாக நிரப்புபவை என்றார். இத்தகைய புரிதல் மதத்தை அதன் இறுகியதன்மை, அடிப்படைவாதம், மூடநம்பிக்கை ஆகியவற்றிலிருந்து மீட்டெடுக்கும் என்றார்.
1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுகள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவுகளால் நிலைநிறுத்திய விவேகானந்தர், அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார். பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார் அன்றைய இராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி.


கல்கத்தாவில் இராமகிருசுண இயக்கம் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். 1899 சனவரி முதல் 1900 டிசம்பர் வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டுப் பயணம் மேற்கொண்டார்.
* விவேகானந்தர் ”potential divinity of the soul” என்ற கருத்தை முன்வைத்தார். மனிதனை மையமாகக் கொண்டு செயல்படும் உலகில் வன்முறைகளை, குற்றங்களை இல்லாமல் செய்து மனித வாழ்க்கையை அர்த்தமானதாக வாழ "spiritual humanism" என்ற கருத்தை முன் வைத்தார்.  


மறைவு
* பயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒழுக்கத்தை அல்லாமல் உள்ளார்ந்த தூய்மையின் (intrinsic purity and oneness of the Atman) காரணமான அறத்தை முன்வைத்தார். தூய்மையே ஆத்மாவின் இயல்பான குணம். பரமாத்மா அல்லது பிரம்மத்தின் வடிவே அனைவரும் என்பதால் ஒருவர் மற்றவரை அந்தக் காரணத்தின் பொருட்டு அன்புடன் நடத்தவேண்டும் என்றார்.
1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். அன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் இன்று உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.


விவேகானந்தரின் கருத்துகள்
* கிழக்கத்திய கலாச்சாரத்திற்கும் மேற்கத்திய கலாச்சாரத்திற்கும் பாலமாக செயல்பட்டார். இந்திய கலாச்சாரத்திலிருந்து மேற்கு கற்றுக் கொள்ள வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.  
மனிதர் இயல்பில் தெய்வீகமானவர்கள் என்பதையும், இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்தவதே மனித வாழ்வின் சாரம் என்பதையும் அவர் தன் அனைத்து சொற்பொழிவுகளிலும், எழுத்துகளிலும் வலியுறுத்துவதைக் காணலாம். காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் ரிஷிகளிடமும், சமூகத்தில் ஒரு பிரிவினரிடமும் மட்டுமே குழுமியிருந்த ஆன்மீகம், சமூகத்தில் இருந்த அனைவரிடமும் பரவ வேண்டும் என அவர் விரும்பினார். வேதாந்த கருத்துகளை பின்பற்றி செயலாற்றும் ஒருவர், சமூகத்தில் எந்தப் பணியைச் செய்தாலும் அதை சிறப்பாக செய்யமுடியும் என்பது அவர் கருத்து. மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார்.


தமிழர் பற்றி விவேகானந்தர்
* மேற்கிலிருந்து கற்றுக் கொள்ளவேண்டிய அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், சமத்துவம், பெண் உரிமை சார்ந்து இந்தியர்களுக்கு வலியுறுத்தினார்.
சென்னை மாகாணத்திலிருந்தே தமிழர் இனத்தவர் இயூபிரட்டீசு நதி சென்று சுமேரியா நாகரிகத்தை உருவாக்கி, அதன் பிறகு அசிரியா, பாபிலோனியா போன்ற நாகரிகங்களை உருவாக்கினர். அவர்கள் கண்ட வானியல் போன்றவை தொன்மங்களாகி, அத்தொன்மங்களே விவிலியம் உருவாக மூலமானது. மலபார் பகுதியில் இருந்த ஒரு தமிழ்ப் பிரிவினர் எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர்.[4][5]
விவேகானந்தரின் பொன்மொழிகள்
உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.[6]
கடவுள் இருந்தால் அவரை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லை யென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு செய்வதை விட நாத்திகனாக இருப்பதே மேல்[7].
உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகைத் தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.
செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்.
உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.
சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.
நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாகத் திகழுங்கள்!
இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.
இளைஞர்களே உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால் என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.
வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.
சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்.
என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்
உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு
அவரது கவிதைகள்
கடவுளைத் தேடி... எனும் தலைப்பில் வங்க மொழியில் கவிதைகளை எழுதியுள்ளார். அதுபற்றி வெகு சிலருக்கேத் தெரியும். அதனைத் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளனர். அவற்றினை திருமதி.சௌந்திரா கைலாசம் என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மீராபாய், கபீர்தாஸ், ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்றவரின் கவியில் உள்ள ஆழம், இவற்றிலும் உண்டு.


எடுத்துக்காட்டாக..
* இந்தியர்கள் மொழி, இன, பிராந்தியம் சார்ந்த வேறுபாடுகள் கொண்டவர்களானாலும் அடியாழத்தில் கலாச்சாரம், ஆன்மிக தளத்தில் ஒன்றிணைவதற்கான புள்ளியை உணர்த்தினார். இது ஒற்றுமையுணர்வையும் தேசபக்தியையும் வளர்த்தது. சமூகத்தில் பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.


அனைத்தும் ஆகி அன்பாகி
* இந்துத்துவம்/இந்து என்பதற்கான தெளிவான, உலக மக்கள் ஏற்றுக் கொள்ளும்படியான வரையறையை அளித்தார். இந்து என்பதை வாழும் முறையாக (way of life) மீள அறிமுகப்படுத்தினார். பல கடவுளர்களால், வழிபாட்டு முறைகளால், நம்பிக்கைகளால் சிதறுண்டிருந்த மக்களை இக்கருத்தின் மூலம் ஒன்றிணைத்தார். வேதங்கள், புராணங்கள், இந்திய தத்துவங்களை நவீனச்சிந்தனைக்கேற்ப அறிமுகப்படுத்தினார்.
  அமைபவன் அவனே அவன்தாளில்
உனதுளம் ஆன்மா உடல் எல்லாம்
  உடனே தருக என் நண்பா


இவைகள் யாவும் உன்முன்னே
* ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பின்பற்றிய துறவு நெறியை உருவாக்கினார். துறவை நவீனச்சூழலுக்கு ஏற்ப மறு சீரமைப்பு செய்தார்.
  இருக்கும் அவனின் வடிவங்கள்
இவைகளை விடுத்து வேறெங்கே
  இறைவனைத் தேடுகின்றாய் நீ


மனத்தில் வேற்றுமை இல்லாமல்
* அரசியல், இலக்கியம், தத்துவம், கலை என எல்லா தளத்திலும் தேசிய அடையாளமாகக் கொள்ளத்தக்க கலைஞர்களை அடையாளம் காட்டினார்.
  மண்ணுல கதனில் இருக்கின்ற
== மறைவு ==
அனைத்தையும் நேசித் திடும் ஒருவன்
விவேகானந்தர் ஜூலை 4, 1902-ல் தன் 39-ம் வயதில் பேலூரில் காலமானார். விவேகானந்தர் பிறந்த ஜனவரி 12-ம் தேதியை இந்திய அரசு 'தேசிய இளைஞர் தினம்' என அறிவித்தது.
ஆண்டவனை அவனைத் தொழுபவனாம்
== நூல் பட்டியல் ==
                                  --விவேகானந்தர்
* Karma Yoga: the Yoga of Action
நூல்கள்
* Jnana Yoga
விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவர் எழுத்துக்கள், கடிதங்கள், பேச்சுக்கள், பேட்டிகள் முதலியன The complete works of Swami Vivekananda என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பு தமிழ் மொழியிலும் விவேகானந்தரின் ஞான தீபம் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. இவையே பின்னர் எழுந்திரு! விழித்திரு! என்ற தலைப்பில் 11 பகுதிகளாக வெளியிடப்பட்டன.
* Raja-Yoga (1920)
* Vedanta Philosophy: An address before the Graduate Philosophical Society (first published 1896)
* Lectures from Colombo to Almora (1897)
* Vedanta philosophy: lectures on Jnana Yoga (1902)
* Addresses on Bhakti Yoga
* Bhakti-Yoga
* The East and the West
* Inspired Talks (1909)
* Living at the Source
* Narada Bhakti Sutras – translation
* Para Bhakti or Supreme Devotion
* Practical Vedanta
* Pathways to Joy: The Master Vivekananda on the Four Yoga Paths to God
* Meditation and Its Methods According to Swami Vivekananda
* Vedanta: Voice of Freedom
* Patanjali's Yoga Sutras
* My India : The India Eternal
* Narada Bhakti Sutras: The Path of Love for God
* Speeches and writings of Swami Vivekananda; a comprehensive collection
* A Bouquet of Swami Vivekananda's Writings (2013), handwritten works of Swami Vivekananda
 
== உசாத்துணை ==
* [https://www.jeyamohan.in/2493/ விவேகானந்தர்,ராஜா ரவிவர்மா, நவீன ஓவியம்: ஜெயமோகன் தளம்]
* [https://purnea.rkmm.org/swami-vivekananda Swami Vivekananda Life & Sayings: purnea]
* [https://swamivivekanandaquotesgarden.blogspot.com/2014/03/a-l-basham-swami-vivekananda.html Arthur Llewellyn Basham On Swami Vivekananda]
 
== இணைப்புகள் ==
* [https://ereads.rkmm.org/s/er/m/chicago-addresses/a/cover விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு: எழுத்து வடிவம்]


மரபுரிமை பேறுகள்
விவேகானந்தா பன்னாட்டு அறக்கட்டளை
தமிழ்நாட்டில் விவேகானந்தர் நினைவிடங்கள்


விவேகானந்தர் நினைவு மண்டபம், கன்னியாகுமரி
விவேகானந்தர் பாறை
விவேகானந்தர் நினைவு மண்டபம்
விவேகானந்தர் இல்லம்
விவேகானந்த கேந்திரம்
கல்வி நிலையங்கள்
இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி, சென்னை
விவேகானந்தர் கல்லூரி, அகத்தீசுவரம்
விவேகானந்தர் கல்லூரி, மதுரை
== தனிவாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
== விருதுகள்==
== நூல் பட்டியல் ==
== உசாத்துணை ==


{{Being created}}
 
 
{{Finalised}}
 
{{Fndt|09-Jun-2024, 14:35:29 IST}}
 
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 15:56, 13 June 2024

விவேகானந்தர்
விவேகானந்தர்

விவேகானந்தர் (நரேந்திரநாத் தத்தா) (சுவாமி விவேகானந்தர்) (ஜனவரி 12, 1863 - ஜூலை 4, 1902) சிந்தனையாளர், ஆன்மிகவாதி. ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர். அத்வைத வேதாந்தி. இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல உரைகளை ஆற்றினார். அரசியல், இலக்கியம், தத்துவம், கலை என எல்லா தளத்திலும் தேசிய அடையாளமாகக் கொள்ளத்தக்க கலைஞர்களை அடையாளம் காட்டினார். இந்திய மரபை மீட்டுருவாக்கம்செய்து நவீன யுகத்தை இந்தியா எதிர்கொள்வதில் ஆற்றவேண்டிய பணிகளை அடையாளம் காட்டினார். இந்தியாவின் மறுமலர்ச்சி காலகட்டத்தில் தோன்றிய புதிய ஆன்மிக இயக்கங்களில் அவர் ஏற்படுத்திய ராமகிருஷ்ணா மடமும், மிஷனும் குறிப்பிடத்தகுந்தவை.

வாழ்க்கைக் குறிப்பு

விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. விவேகானந்தர் கல்கத்தாவில் விஸ்வநாத் தத்தா, புவனேஸ்வரி தேவி இணையருக்கு ஜனவரி 12, 1863-ல் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சகோதரிகள் கிரண் பாலா,ஜோகேந்திர பாலா. இளைய சகோதரர்கள் மகேந்திரநாத் தத்தா, பூபேந்திரநாத் தத்தா. பூபேந்திரநாத் தத்தா இந்திய சுதந்திரத்திற்குப் போராடியவர். கிரண்பாலா முதல் குழந்தையைப் பெற்றெடுத்த போது இறந்தார்.இளைய சகோதரியான ஜோகேந்திரபாலா சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டு புகுந்த வீட்டினரின் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879-ல் கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தத்துவம் பயின்றார். 1884-ல் தந்தை இறந்தார்.

விவேகானந்தர்

ஆன்மிக வாழ்க்கை

விவேகானந்தர் ஆரம்பத்தில் பிரம்ம சமாஜத்தின் உறுப்பினராக இருந்தார். 1881-ல் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தார். முதலில் அவரின் இறை பற்றிய கருத்துக்களையும், வழிபாட்டு முறைகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ராமகிருஷ்ணரின் போதனைகள் உருவம், அருவம் ஆகிய இரண்டையும் பேசின. அவர் வழியாக பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் ஆகிய இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொண்டார். 1886-ல் ராமகிருஷ்ண பரமஹம்சர் இறந்தார். அவர் இறப்பதற்கு முன்பு துறவறம் ஏற்கத் திட்டமிட்டிருந்த தனது இளம் சீடர்களுக்கு காவித் துணிகளை வழங்கி அவர்களை விவேகானந்தரிடம் ஒப்படைத்தார். அவர் இறந்தபின் இளம் சீடர்கள் டிசம்பர் 24, 1886-ல் துறவற சபதம் எடுத்து ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொண்டனர். பரனாகூரில் முதல் மடத்தை உருவாக்கினர்.

அதன்பின் விவேகானந்தர் நான்கு ஆண்டுகள் இந்தியா முழுவதும் துறவியாக அலைந்தார். தன் பயண முடிவில் டிசம்பர் 24, 1892-ல் கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்தார். 1893-ல் சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார். அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துகளை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.

1897-ல் கடல் வழியாக இந்தியா திரும்பினார். கொழும்பில் ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியால் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் கொழும்பு முதல் கல்கத்தா வரை உரைகள் ஆற்றினார். 1899-ல் இரண்டாவது முறையாக மேல்நாட்டுப் பயணம் செய்தார். ஐக்கிய அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் பயணம் செய்தார். டிசம்பர் 1900-ல் இந்தியா திரும்பினார். தன் இறப்பு வரை பேலூர் மடத்தில் இருந்தார்.

1887 பரானகரில் சந்நியாசிகளுடன் விவேகானந்தர்
மாணவர்கள்

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் செய்திகளால் மேற்குலகில் பலர் தாக்கம் பெற்றனர். அவர்களில் சிலர் அவருடைய சீடர்களாகவோ, நண்பர்களாகவோ ஆயினர். அவர்களில் மார்கரெட் நோபல் (சகோதரி நிவேதிதா), கேப்டன், செவியர், ஜோஸ்பின் மெக்லியோட், சாரா ஓலே புல் ஆகியோர் இவரின் குறிப்பிடத்தகுந்த மேற்கத்திய மாணவர்கள். நிவேதிதா கொல்கத்தாவில் பெண் கல்விக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். இவரின் இந்தியச் சீடர்கள் ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து சன்னியாசிகள் ஆயினர்.

அமைப்புப் பணிகள்

விவேகானந்தர் ராமகிருஷ்ண மிஷன் மற்றும் ராமகிருஷ்ண மடம் ஆகியவற்றை மே 1, 1897-ல் தோற்றுவித்தார். இவை இரண்டும் மேற்கு வங்கத்திலுள்ள பேலூர் மடத்தை தலைமை இடமாகக் கொண்டன. ராமகிருஷ்ண மடம் அத்வைத வேதாந்தத்தையும், நான்கு யோகங்களையும் (ஞான, பக்தி, கர்ம, ராஜ) போதிக்கும் இடம். நான்கு யோக முறைகளுள் கர்ம யோகத்தை முதன்மையாக முன்வைப்பது. 1909-ல் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது. மடத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர்கள் மிஷனின் ஆளும் குழுவாகவும் பணியாற்றுகின்றனர். ராமகிருஷ்ணரின் நேரடி சீடரான சுவாமி அகந்தானந்தாவால் சர்காச்சியில் பஞ்ச நிவாரணம் தொடங்கப்பட்டது. ராமகிருஷ்ணரின் நேரடி சீடரான சுவாமி பிரம்மானந்தா, ஆணையத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். 1902-ல் விவேகானந்தரின் மரணத்திற்குப் பிறகு சாரதா தேவி அமைப்பின் ஆலோசனைத் தலைவராக முக்கியப் பங்காற்றினார்.

ராமகிருஷ்ண மடம்

ராமகிருஷ்ண பரமஹம்சரை குருவாகக் கொண்ட சீடர்களை உருவாக்குவதும், அவரின் போதனைகளைப் பரப்புவதும் முக்கியப் பணியாகக் கொண்டது.

ராமகிருஷ்ண மிஷன்

மருத்துவம், நிவாரணம், கல்வித்திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தும் அமைப்பு.

எழுத்து

விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவர் எழுத்துக்கள், கடிதங்கள், பேச்சுக்கள், பேட்டிகள் முதலியன 'The complete works of Swami Vivekananda' என்ற பெயரில் தொகுக்கப்பட்டன. இத்தொகுப்பு தமிழ் மொழியிலும் 'விவேகானந்தரின் ஞான தீபம்' என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது. இவையே பின்னர் 'எழுந்திரு! விழித்திரு!' என்ற தலைப்பில் பதினொரு பகுதிகளாக வெளியிடப்பட்டன. 'Karma Yoga, Raja Yoga, Vedanta Philosophy: An address before the Graduate Philosophical Society', 'Lectures from Colombo to Almora', 'Vedanta philosophy: lectures on Jnana Yoga' ஆகிய நூல்கள் விவேகானந்தர் வாழ்ந்த காலத்திலேயே வெளியிடப்பட்டன.

விவேகானந்தர் 1893-ல் சிகாகோ மாநாட்டில்

தத்துவம்

விவேகானந்தர் அத்வைத வேதாந்தத்தின் மேல் நம்பிக்கை கொண்டிருந்தார். அனைத்து மதங்களின் மீதும் நம்பிக்கையையும் மரியாதையையும் வலியுறுத்தினார். அனைத்து மதங்களும் இறைவனை அடைவதற்கான வழியே என்றார். அனைத்து மதங்களும் சரியாகப் பின்பற்றப்பட்டால் ஒரே இலக்கை நோக்கி இட்டுச் செல்லும் என்றார்.

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது சுவாமி விவேகானந்தர் மக்களின் வறுமை மற்றும் பின்தங்கிய நிலையைக் கண்டார். மக்கள் திரளைப் புறக்கணித்ததே இந்தியாவின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நம்பினார். மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியத்தேவையை வழங்குவதே முக்கியமான பணி என்று கருதினார். இவர்களுக்கு விவசாயம், கிராமத் தொழில்கள் போன்றவற்றின் மேம்பட்ட முறைகளை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும், நம்பிக்கையை அளிக்க வேண்டும் என்றார். பொருளாதார நிலையை மேம்படுத்த உலக அறிவு, மற்றும் ஆன்மீக அறிவு ஆகியவையே இதற்கான தீர்வு என்று கண்டார். இவற்றைக் கல்வியின் மூலம் பரப்ப ராமகிருஷ்ண அமைப்புகளை ஏற்படுத்தினார்.

விவேகானந்தர் 1897-ல் முதல் உலக சுற்றுப்பயணத்திற்குப் பின்

விவேகானந்தர் நேரடியாக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்களிப்பாற்றவில்லை. ஆனால் பல தலைவர்கள் இவரின் சிந்தனைகளால் தாக்கம் பெற்றனர். பாலகங்காதர திலகர், ஜெகதீஷ் சந்திரபோஸ் ஆகிய ஆளுமைகளுடன் உரையாடலில் இருந்தார். கலை இலக்கியம் சார்ந்து அவர் முன்வைத்த ஆளுமைகள் இந்திய மறுமலர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தனர். அரவிந்தர் தன் ஆத்ம குருவாக விவேகானந்தரைக் குறிப்பிட்டார். காந்தி தன் தேச பக்தியைப் பெருக்கியதில் விவேகானந்தரின் பங்கைக் குறிப்பிட்டுள்ளார். சுபாஷ் சந்திர போஸ், நேரு ஆகியோரும் விவேகானந்தரின் தாக்கம் பெற்றவர்கள்.

பங்களிப்பு

நவீன இந்தியாவை உருவாக்குவதில் விவேகானந்தரின் சிந்தனைகள் முக்கியப் பங்களிப்பாற்றியதாக ஏ.எல்.பாஷ்யம் போன்ற வரலாற்றாசிரியர்கள் கருதினர்.

  • மதம் என்பது உலகப்பொதுவான ஆழ்நிலை உண்மையை பிரதிபளிக்கக் கூடிய ஒன்று என்றார். மதம் என்பது பிரக்ஞைப்பூர்வமான அறிவியல் (science of consciousness) என்றார். மதமும் அறிவியலும் ஒன்றை ஒன்று நிராகரிக்கக்கூடியவை அல்ல மாறாக நிரப்புபவை என்றார். இத்தகைய புரிதல் மதத்தை அதன் இறுகியதன்மை, அடிப்படைவாதம், மூடநம்பிக்கை ஆகியவற்றிலிருந்து மீட்டெடுக்கும் என்றார்.
  • விவேகானந்தர் ”potential divinity of the soul” என்ற கருத்தை முன்வைத்தார். மனிதனை மையமாகக் கொண்டு செயல்படும் உலகில் வன்முறைகளை, குற்றங்களை இல்லாமல் செய்து மனித வாழ்க்கையை அர்த்தமானதாக வாழ "spiritual humanism" என்ற கருத்தை முன் வைத்தார்.
  • பயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒழுக்கத்தை அல்லாமல் உள்ளார்ந்த தூய்மையின் (intrinsic purity and oneness of the Atman) காரணமான அறத்தை முன்வைத்தார். தூய்மையே ஆத்மாவின் இயல்பான குணம். பரமாத்மா அல்லது பிரம்மத்தின் வடிவே அனைவரும் என்பதால் ஒருவர் மற்றவரை அந்தக் காரணத்தின் பொருட்டு அன்புடன் நடத்தவேண்டும் என்றார்.
  • கிழக்கத்திய கலாச்சாரத்திற்கும் மேற்கத்திய கலாச்சாரத்திற்கும் பாலமாக செயல்பட்டார். இந்திய கலாச்சாரத்திலிருந்து மேற்கு கற்றுக் கொள்ள வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.
  • மேற்கிலிருந்து கற்றுக் கொள்ளவேண்டிய அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், சமத்துவம், பெண் உரிமை சார்ந்து இந்தியர்களுக்கு வலியுறுத்தினார்.
  • இந்தியர்கள் மொழி, இன, பிராந்தியம் சார்ந்த வேறுபாடுகள் கொண்டவர்களானாலும் அடியாழத்தில் கலாச்சாரம், ஆன்மிக தளத்தில் ஒன்றிணைவதற்கான புள்ளியை உணர்த்தினார். இது ஒற்றுமையுணர்வையும் தேசபக்தியையும் வளர்த்தது. சமூகத்தில் பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
  • இந்துத்துவம்/இந்து என்பதற்கான தெளிவான, உலக மக்கள் ஏற்றுக் கொள்ளும்படியான வரையறையை அளித்தார். இந்து என்பதை வாழும் முறையாக (way of life) மீள அறிமுகப்படுத்தினார். பல கடவுளர்களால், வழிபாட்டு முறைகளால், நம்பிக்கைகளால் சிதறுண்டிருந்த மக்களை இக்கருத்தின் மூலம் ஒன்றிணைத்தார். வேதங்கள், புராணங்கள், இந்திய தத்துவங்களை நவீனச்சிந்தனைக்கேற்ப அறிமுகப்படுத்தினார்.
  • ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பின்பற்றிய துறவு நெறியை உருவாக்கினார். துறவை நவீனச்சூழலுக்கு ஏற்ப மறு சீரமைப்பு செய்தார்.
  • அரசியல், இலக்கியம், தத்துவம், கலை என எல்லா தளத்திலும் தேசிய அடையாளமாகக் கொள்ளத்தக்க கலைஞர்களை அடையாளம் காட்டினார்.

மறைவு

விவேகானந்தர் ஜூலை 4, 1902-ல் தன் 39-ம் வயதில் பேலூரில் காலமானார். விவேகானந்தர் பிறந்த ஜனவரி 12-ம் தேதியை இந்திய அரசு 'தேசிய இளைஞர் தினம்' என அறிவித்தது.

நூல் பட்டியல்

  • Karma Yoga: the Yoga of Action
  • Jnana Yoga
  • Raja-Yoga (1920)
  • Vedanta Philosophy: An address before the Graduate Philosophical Society (first published 1896)
  • Lectures from Colombo to Almora (1897)
  • Vedanta philosophy: lectures on Jnana Yoga (1902)
  • Addresses on Bhakti Yoga
  • Bhakti-Yoga
  • The East and the West
  • Inspired Talks (1909)
  • Living at the Source
  • Narada Bhakti Sutras – translation
  • Para Bhakti or Supreme Devotion
  • Practical Vedanta
  • Pathways to Joy: The Master Vivekananda on the Four Yoga Paths to God
  • Meditation and Its Methods According to Swami Vivekananda
  • Vedanta: Voice of Freedom
  • Patanjali's Yoga Sutras
  • My India : The India Eternal
  • Narada Bhakti Sutras: The Path of Love for God
  • Speeches and writings of Swami Vivekananda; a comprehensive collection
  • A Bouquet of Swami Vivekananda's Writings (2013), handwritten works of Swami Vivekananda

உசாத்துணை

இணைப்புகள்




✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Jun-2024, 14:35:29 IST