கல்பற்றா நாராயணன்: Difference between revisions
(→நாவல்) |
No edit summary |
||
(4 intermediate revisions by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|TitleSection=நாராயணன்|DisambPageTitle=[[நாராயணன் (பெயர் பட்டியல்)]]}} | |||
[[File:கல்பற்றா.jpg|thumb|கல்பற்றா நாராயணன்]] | [[File:கல்பற்றா.jpg|thumb|கல்பற்றா நாராயணன்]] | ||
[[File:2 மார்ச் 2013 ல் நடைபெற்ற கல்பற்றா கவிதைக்கூடல், ஆலப்புழை மங்கொம்பு.jpg|thumb|2 மார்ச் 2013 ல் நடைபெற்ற கல்பற்றா கவிதைக்கூடல், ஆலப்புழை மங்கொம்பு]] | [[File:2 மார்ச் 2013 ல் நடைபெற்ற கல்பற்றா கவிதைக்கூடல், ஆலப்புழை மங்கொம்பு.jpg|thumb|2 மார்ச் 2013-ல் நடைபெற்ற கல்பற்றா கவிதைக்கூடல், ஆலப்புழை மங்கொம்பு]] | ||
[[File:தேவதேவன் கலாப்பிரியா கல்பற்றா.jpg|thumb|தேவதேவன் ,கலாப்பிரியா, கல்பற்றா 2013]] | [[File:தேவதேவன் கலாப்பிரியா கல்பற்றா.jpg|thumb|தேவதேவன் ,கலாப்பிரியா, கல்பற்றா 2013]] | ||
கல்பற்றா நாராயணன் (பிறப்பு:நவம்பர் 2,1952 ) மலையாள கவிஞர், நாவலாசிரியர், இலக்கியப்பேச்சாளர், இலக்கிய விமர்சகர். கோழிக்கோடு பல்கலையில் மலையாளப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். கேரளக் கவிதையில் படிமங்கள் அற்ற உரைநடைக் கவிதையை நிலைநாட்டிய முன்னோடி. | கல்பற்றா நாராயணன் (பிறப்பு:நவம்பர் 2,1952 ) மலையாள கவிஞர், நாவலாசிரியர், இலக்கியப்பேச்சாளர், இலக்கிய விமர்சகர். கோழிக்கோடு பல்கலையில் மலையாளப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். கேரளக் கவிதையில் படிமங்கள் அற்ற உரைநடைக் கவிதையை நிலைநாட்டிய முன்னோடி. | ||
Line 24: | Line 25: | ||
கல்பற்றா நாராயணன் 'கோந்தலை' (வேட்டிமடி) என்ற பெயரில் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார். | கல்பற்றா நாராயணன் 'கோந்தலை' (வேட்டிமடி) என்ற பெயரில் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார். | ||
== திரைப்படம் == | == திரைப்படம் == | ||
கல்பற்றா நாராயணனின் நாவல் 'இத்ரமாத்ரம்' (தமிழில் சுமித்ரா) கே.கோபிநாதன் இயக்கத்தில் 14 செப்டெம்பர் 2012 ல் திரைப்படமாகியது. அதற்கு கேரள திரைவிமர்சகர் சங்க (International Federation of Film Critics) விருது கிடைத்தது. | கல்பற்றா நாராயணனின் நாவல் 'இத்ரமாத்ரம்' (தமிழில் சுமித்ரா) கே.கோபிநாதன் இயக்கத்தில் 14 செப்டெம்பர் 2012-ல் திரைப்படமாகியது. அதற்கு கேரள திரைவிமர்சகர் சங்க (International Federation of Film Critics) விருது கிடைத்தது. | ||
கல்பற்றா நாராயணன் 'நிழலாட்டம் ஒரு சலச்சித்ர பிரோக்ஷகன்றே ஆத்மகதா' (நிழலாட்டம். ஒரு திரைரசிகனின் தன்வரலாறு) என்ற பெயரில் தன் திரைப்படம் பார்க்கும் அனுபவங்களை எழுதியிருக்கிறார் | கல்பற்றா நாராயணன் 'நிழலாட்டம் ஒரு சலச்சித்ர பிரோக்ஷகன்றே ஆத்மகதா' (நிழலாட்டம். ஒரு திரைரசிகனின் தன்வரலாறு) என்ற பெயரில் தன் திரைப்படம் பார்க்கும் அனுபவங்களை எழுதியிருக்கிறார் | ||
Line 79: | Line 80: | ||
* [https://padhaakai.com/2014/04/27/buddha-of-the-highways/ நெடுஞ்சாலை புத்தரும் ஒரு பாதசாரியும் நரோபா] | * [https://padhaakai.com/2014/04/27/buddha-of-the-highways/ நெடுஞ்சாலை புத்தரும் ஒரு பாதசாரியும் நரோபா] | ||
* [https://www.jeyamohan.in/117374/ கல்பற்றா நாராயணன் மேலும் நான்கு கவிதைகள்] | * [https://www.jeyamohan.in/117374/ கல்பற்றா நாராயணன் மேலும் நான்கு கவிதைகள்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|12-Apr-2023, 17:09:37 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:Spc]] | [[Category:Spc]] |
Latest revision as of 07:35, 29 December 2024
- நாராயணன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நாராயணன் (பெயர் பட்டியல்)
கல்பற்றா நாராயணன் (பிறப்பு:நவம்பர் 2,1952 ) மலையாள கவிஞர், நாவலாசிரியர், இலக்கியப்பேச்சாளர், இலக்கிய விமர்சகர். கோழிக்கோடு பல்கலையில் மலையாளப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். கேரளக் கவிதையில் படிமங்கள் அற்ற உரைநடைக் கவிதையை நிலைநாட்டிய முன்னோடி.
பிறப்பு, கல்வி
கல்பற்றா நாராயணன் நவம்பர் 2,1952 அன்று கேரளத்தில் வயநாட்டில் கல்பற்றா என்னும் சிறுநகரை ஒட்டிய கோட்டத்தரை என்னும் கிராமத்தில் பாலுக்காப்பில் சங்கரன் நாயருக்கும் நாராயணி அம்மாவுக்கும் பிறந்தார். மலைவேளாண்மை செய்து வந்த குடும்பம்.
கல்பற்றா நாராயணன் எஸ்.கே.எம்.ஜே உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். பின்னர் கோழிக்கோடு அரசு கலைஅறிவியல் கல்லூரியில் மலையாள இலக்கியம் இளங்கலை பயின்றார். பின்னர் கோழிக்கோடு பல்கலையில் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம்பெற்றார்
தனிவாழ்க்கை
கல்பற்றா நாராயணன் பள்ளிப்படிப்புக்குப் பின் சிறிதுகாலம் தபால்துறையில் புற ஊழியராகப் பணியாற்றினார். கூடவே மலையாள இலக்கியமும் கற்றார். தலைச்சேரி பிரண்ணன் கல்லூரியிலும் கோழிக்கோடு அரசு கலை அறிவியல் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். கோழிக்கோடு பல்கலையில் மலையாளத் துறையில் சிறப்புப் பேராசிரியராக பணிபுரிந்தார். 2010-ல் ஓய்வுபெற்றார்
கல்பற்றா நாராயணனின் மனைவி ராதா. இரு மகன்கள். பிரபு சந்திரன், சரத்சந்திரன்.
சொற்பொழிவு
கல்பற்றா நாராயணன் இலக்கிய அழகியல் சார்ந்த சொற்பொழிவுகளுக்காகப் புகழ்பெற்றவர். குரல் உயராத மென்மையான மொழியில் படிமங்களால் பேசுவது அவருடைய பாணி.
இலக்கியவாழ்க்கை
கட்டுரைகள்
கல்பற்றா நாராயணன் இலக்கிய விமர்சகராக இலக்கியத்திற்குள் அறிமுகமானார். வைக்கம் முகமது பஷீர், கே.ஜி.சங்கரப்பிள்ளை ஆகியோரைப்பற்றிய அவருடைய கட்டுரைகள் விவாதிக்கப்பட்டன. மாத்யமம் வார இதழில் எழுதிய 'ஈ கண்ணட ஒந்நு வச்சு நோக்கூ' (இந்த கண்ணாடியை சற்று வைத்து பாருங்கள்) மலையாள மனோரமா இதழில் எழுதிய 'புதபக்ஷம்' ஆகிய தொடர்கட்டுரைகள் புகழ்பெற்றவை.
கவிதைகள்
கோழிக்கோட்டில் இருந்து வெளிவந்த 'வைத்யசஸ்த்ரம்' என்னும் சிற்றிதழில் கல்பற்றா நாராயணன் ஒழிஞ்ஞ 'விருக்ஷச்சாயயில்' (தனித்தமரநிழலில்) என்னும் தலைப்பின் கவித்துவக்குறிப்புகள் எழுதிவந்தார். அவை கவிதைகள் என உணர்ந்து அவ்வகையான கவிதைகளை எழுதலானார். முதல் கவிதைத்தொகுப்பு ஒழிஞ்ஞ விருக்ஷசாயயில். தொடர்ந்து சமயப்பிரபு என்னும் தொகுதி வெளிவந்தது.
நாவல்
கல்பற்றா நாராயணன் இத்ரமாத்ரம் என்னும் நாவலை எழுதியிருக்கிறார். அது தமிழில் சுமித்ரா என்ற பெயரில் கே.வி.ஷைலஜாவால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
தன்வரலாறு
கல்பற்றா நாராயணன் 'கோந்தலை' (வேட்டிமடி) என்ற பெயரில் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார்.
திரைப்படம்
கல்பற்றா நாராயணனின் நாவல் 'இத்ரமாத்ரம்' (தமிழில் சுமித்ரா) கே.கோபிநாதன் இயக்கத்தில் 14 செப்டெம்பர் 2012-ல் திரைப்படமாகியது. அதற்கு கேரள திரைவிமர்சகர் சங்க (International Federation of Film Critics) விருது கிடைத்தது.
கல்பற்றா நாராயணன் 'நிழலாட்டம் ஒரு சலச்சித்ர பிரோக்ஷகன்றே ஆத்மகதா' (நிழலாட்டம். ஒரு திரைரசிகனின் தன்வரலாறு) என்ற பெயரில் தன் திரைப்படம் பார்க்கும் அனுபவங்களை எழுதியிருக்கிறார்
விருதுகள்
- 2013 ஏ.ஐயப்பன் விருது
- 2015 பஷீர் இலக்கிய விருது
- 2017 கேரளசாகித்ய அக்காதமி விருது
- 2018 பத்மபிரபா இலக்கிய விருது
- தோகா பிரவாசி மலையாளி விருது
- டாக்டர் டி.பாஸ்கரன் விருது
- வி.டி.குமாரன் விருது
- சாந்தகுமாரன் தம்பி விருது
- சி.பி.சிவதாசன் விருது
- டாக்டர் பி.கே.ராஜன் விருது
இலக்கிய இடம்
கல்பற்றா நாராயணன் ஒரு கவிஞர், அழகியலை முன்வைக்கும் இலக்கிய விமர்சகர், பேச்சாளர் என்னும் நிலைகளில் கேரளத்தின் முதன்மை ஆளுமைகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். அரசின்மைவாதப் பார்வை கொண்டவர் என மதிப்பிடப்படுகிறார். கேரளக் கவிதையில் வசனத்தன்மை கொண்ட, படிமங்கள் அற்ற, நுண்சித்தரிப்புத்தன்மை கொண்ட கவிதையை ஒரு புதிய மரபாக நிலைநிறுத்திய முன்னோடி.
நூல்கள்
தமிழில்
- சுமித்ரா (நாவல்) (கே.வி.ஜெயஸ்ரீ)
- தொடுதிரை கவிதைகள் (ஜெயமோகன்)
கவிதை
- ஒழிஞ்ஞ விருக்ஷசாயயில்
- சமயப்பிரபு
- ஒரு முடந்தன்றே சுவிசேஷம்
- கறுத்த பால்
- தேர்ந்தெடுத்த கவிதைகள்
- ஓர்க்காப்புறங்கள்
கட்டுரை
- ஈ கண்ணட ஒந்நு வச்சுநோக்கூ
- கவிதையுடே ஜீவசரித்ரம்
- அவர் கண்ணுகொண்டு கேள்குந்நு
- தல்சயமம்
- கயற் முறுகுகயாணு
- என்றே பஷீர்
- ஏதிலையும் மதுரிக்குந்ந காடுகளில்
- மற்றொரு விதமாயிருந்நெங்கில்
- சௌந்தரியம் வெளுப்புமாய் ஒரு உடம்படியிலும் ஒப்பு வச்சிட்டில்ல
- எல்லா சலனங்களும் வியதிசலனங்ஙள்
நினைவுகள்
- கோந்தல
- நிழலாட்டம் ஒரு சலச்சித்ர பிரோக்ஷகன்றே ஆத்மகதா
- கல்பற்றயிலே மின்னலுகள்
உசாத்துணை
- கல்பற்றா நாராயணன் கவிதையரங்கு 2013
- கல்பற்றா கவிதைக்கூடல் படங்கள்
- கல்பற்றா நாராயணன் கவிதைகள் 1
- கல்பற்றா நாராயணன் கவிதைகள் 2
- தொடுதிரை கல்பற்றா நாராயணன்
- ஆகாயமிட்டாய் கல்பற்றா நாராயணன்
- கல்பற்றா நாராயணன் உரை மேடையிலுருக்கொண்ட அற்புதம்
- கல்பற்றா நாராயணன் இன்னும் மூன்று கவிதைகள்
- நெடுஞ்சாலையில் புத்தரைச் சந்தித்தால் என்ன செய்வது?
- நெடுஞ்சாலை புத்தரும் ஒரு பாதசாரியும் நரோபா
- கல்பற்றா நாராயணன் மேலும் நான்கு கவிதைகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
12-Apr-2023, 17:09:37 IST