being created

தனலஷ்மி சிவயோகி சர்மா: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "தனலஷ்மி சிவயோகி சர்மா (பிறப்பு: மார்ச் 14, 1982) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர். == வாழ்க்கைக் குறிப்பு == தனலஷ்மி சிவயோகி சர்மா இலங்கை நாட்டின் வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம் காங்கேசன்த...")
(No difference)

Revision as of 16:10, 26 June 2024

தனலஷ்மி சிவயோகி சர்மா (பிறப்பு: மார்ச் 14, 1982) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

தனலஷ்மி சிவயோகி சர்மா இலங்கை நாட்டின் வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் முத்துக்குமாரக் குருக்கள், அற்புதராணி இணையருக்கு மார்ச் 14, 1982-ல் பிறந்தார். யாழ்ப்பாணம் அமெரிக்க மிசன் பாடசாலையில் ஆரம்பக் கல்வி பயின்றார். இடைநிலைக் கல்வியை அக்கராயன் மகாவித்தியாலயத்தில் பயின்றார். உயர்கல்வியை போர் சூழல் காரணமாக தனிப்பட்ட முறையில் படித்து எழுதினார்.

இலக்கிய வாழ்க்கை

தனலஷ்மி சிவயோகி சர்மா 2011 முதல் எழுதி வருகிறார். கவிதை, சிறுகதை பாடல்களெழுதி வருகிறார். ஹைக்கூ புதுக்கவிதை, குறுங்கவிதை, கிராமியக்கவிதை, தன்முனைக்கவிதை என பல வகைகளிலும் கவிதைகள் எழுதி வருகிறார். ரகுபதி (இணுவில்) இவர் எழுதிய பாடல் இறுவட்டு வடிவில் வெளிவந்துள்ளது. இவரது ஹைக்கூ மற்றும் கவிதைகள், மனம் தொடும் மலர்கள், பனிவிழும் மலர் வனம், கவிச்சோலை, அசையும் நாணல்கள், செவ்வந்தி மேலே ஒரு பனித்துளி ஆகியவை தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன.

உசாத்துணை

  • ஆளுமை:தனலஷ்மி, சிவயோகி சர்மா - noolaham



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.