being created

சு. அனவரத விநாயகம் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 23:14, 14 May 2024 by Tamizhkalai (talk | contribs)

சு. அனவரத விநாயகம் பிள்ளை (செப்டம்பர் 20,1877 – 1940) தமிழறிஞர், ஆய்வாளர், அகராதி தொகுப்பாளர், பேராசிரியர், எழுத்தாளர், பதிப்பாளர்.

பிறப்பு, கல்வி

அனவரத விநாயகம் பிள்ளை செப்டம்பர் 20,1877-ல் சுப்பிரமணியபிள்ளை, தாயார் ஈசுவர வடிவு அம்மாள் இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்விக்குப்பின் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் தத்துவத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். முதுகலையில் நச்கினார்க்கினியரைப்பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார்.

தனிவாழ்க்கை

அனவரத விநாயகம் பிள்ளை கிறிஸ்தவக் கல்லூரியில் முதலில் பயிற்றுனராகவும், பிறகு பிராந்திய மொழிகள் துறையில் மேற்பார்வையாளராகப், (Superintendent of Vernacular Studies) பணியாற்றினார். கொழும்புப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும், சென்னைப் பல்கலைக் கழகத்துத் ‘தமிழ் லெச்சிகன்’ உறுப்பினராகவும், தமிழாராய்ச்சியாளராகவும் இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

இவர் இயற்றிய நூல்கள் நச்சினார்க்கினியர், சைவ சித்தாந்த வரலாறு, ஒளவையார், ஏகநாதர், தமிழ்ப் பெருமக்கள் வரலாறு, மாணவர் தமிழகராதி, பழமொழி அகராதி முதலியவை. இவர் பல தமிழ் நூல்களை ஆராய்ச்சிமிக்க முன்னுரைகளுடன் பதிப்பித்திருக்கின்றார். தமிழ்ப் புராணங்கள், தமிழ் மொழி முதலிய பல பொருள்களைப்பற்றிய கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். (பி.20-9-1877-இ. ஏப். 1940).

விருதுகள், பரிசுகள்

இலக்கிய இடம்

நூல்கள்

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.