தத்துவராயர்
தத்துவராயர் (Tattuvarayar) (பொ.யு. 15 -ம் நூற்றாண்டு) சைவ தத்துவ ஞானி. வடமொழி வேதாந்த நெறிக்குத் தமிழில் இலக்கணம் கண்டவர். அவர் பாடிய நூல்கள் 'அடங்கன்முறை' என அறியப்படுகின்றன. பக்தி மரபில் நின்று சஙரரின் அத்வைதத்தைப் பாடியவர். இவர் வேதாந்தி. தம் வேதாந்தக் கொள்கைகளை நிறுவுவதற்காகத் தேவாரப்பாடல்களைத் தன் கோணத்திற்கேற்பத் திரட்டி வெளியிட்டார். அவரது தேவாரத் திரட்டு இரண்டு நூல்களாக உள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு
வீரை மாநகரில் பிறந்தவர். கல்வி அறிவில் தேர்ச்சி பெறாத தத்துவ ராயர், தன் மாமனான சொருபானந்தரைக் குருவாகக் கொண்டு, பல யோக ஞானங் களைக் கற்றறிந்தார்.
சிறுவயதிலேயே இவரும் சொருபானந்தரும் ஞானத் தாகமெடுத்து குருவைத் தேடி அலைந்தார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் வடக்கும் தெற்கு மாகப் பிரிய, திருப்பைஞ்ஞீலி அருகே கோவர்த்தனம் என்ற ஊரில், ஒரு புதரில் சிவப்பிரகாசர் என்ற குருவைக் கண்டார் சொரூபானந்தர். அவரிடம் சகல ஞானமும் ஸித்தியும் பெற்றார். குருவை அடைய முடி யாத தத்துவராயருக்குப் பின்னர் மாமனே குருவானார்.
எளிய மக்கள் இவரை `பாடுதுரை' என்றும் அழைத்து வந்துள்ளனர். எளிய நாட்டுப்புறப் பாடல் பாணியில் தன்னுடைய பாடல்களை இயற்றியவர் இவர். இவர் வடலூர் வள்ளல் ராமலிங்க சுவாமிக்கும் முன்பே, சேத்தியாத் தோப்பு அருகே எறும்பூர் என்ற இடத்தில் ஒரு ஆடி மாத சதய நட்சத்திர நாளில் ஒளி யாய்ப் பிரிந்தார் (சுத்த தேகஸித்தி).
வடலூர் ராமலிங்க வள்ளலார், இவரை ஞான குருவாக ஏற்று, அவரிடத்தில் சூட்சும மாகப் பல வித்தைகளை... குறிப்பாக ஒளி தேகம் பெறும் வித்தையை அறிந்ததாக நம்பப் படுகிறது.
இவர் தத்துவத்தின் வழியே ஆன்மிகத்தை விளக்கியதால் `தத்துவராயர்' எனப் பெயர் பெற்றார். இவரே உலகம் வியக்கும் சுத்த தேக ஸித்தி எனும் சித்து முறையைக் கைக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஆன்மிக வாழ்க்கை
பாடல்கள்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.