பூலோகசிங்க முதலியார்
From Tamil Wiki
பூலோகசிங்க முதலியார் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர், எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
பூலோகசிங்க முதலியார் இலங்கை யாழ்ப்பாணம் காரைத்தீவில் பிறந்தார். தெல்லிப்பழையில் வாழ்ந்தார். 'அருளப்ப நாவலர்' என்றும் அழைக்கப்பட்டார். கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்தவர்.
இலக்கிய வாழ்க்கை
பூலோகசிங்க முதலியார் இருபத்தி நான்கு படலமும், ஆயிரத்துத் தொள்ளாயிரம் செய்யுள்களையும் கொண்ட ’திருச்செல்வராசர் காப்பியம்’ என்னும் காப்பியத்தை இயற்றினார்.
நூல் பட்டியல்
- திருச்செல்வராசர் காப்பியம்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:அருளப்பநாவலர்: noolaham
✅Finalised Page