under review

சௌந்தரி கணேசன்

From Tamil Wiki
சௌந்தரி கணேசன்

சௌந்தரி கணேசன் ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர். ஊடகவியலாளராகப் பணியாற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சௌந்தரி கணேசன் இலங்கை யாழப்பாணம் வடமராட்சி கரவெட்டியில் கணேசன், மகேஸ்வரி இணையருக்குப் பிறந்தார். ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் பருத்தித்துறை மெதடிஸ்ட் பெண்கள் உயர்தர பாடசாலையிலும் பள்ளிக்கல்வி கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் சிறப்புப் பட்டம் பெற்றார். வெஸ்ரேன்சிட்னி பல்கலைக்கழகத்தில் கணக்கியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சாம்பியா, நியுசிலாந்து ஆகிய நாடுகளில் கணிதம் மற்றும் ரசாயனவியல் ஆசிரியராகப் பணியாற்றினார். தற்பொழுது சிட்னியில் கணக்கியல்துறையில் நிர்வாக மேலாளராகப் பணியாற்றுகிறார்.

ஊடகவியல்

சௌந்தரி கணேசன் ஆஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் அறிவிப்பாளராகவும் பணியாற்றினார். சிட்னியில் நடைபெறும் இலக்கிய நிகழ்ச்சி, சமூக அமைப்புக்களின் செயற்பாடுகளிலும் இணைந்து செயல்பட்டு வருகிறார். அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் 15 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சி தயாரித்து வழங்குகினார்.

இலக்கிய வாழ்க்கை

சௌந்தரி கணேசனின் கவிதைகள் வானொலி, வார இதழ்கள், முகநூல், இணையம் ஆகியவற்றில் வெளிவந்தன. 'நீர்த்திரை' என்ற கவிதைத் தொகுதியையும் இவர் வெளியிட்டுள்ளார்.

நூல் பட்டியல்

கவிதைத்தொகுப்பு
  • நீர்த்திரை

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Jun-2024, 04:58:12 IST