under review

சுப்பையர்

From Tamil Wiki

சுப்பையர் (மே. சுப்பையர்) (18-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சுப்பையர் யாழ்ப்பாணம் காரைநகரில் மேருகிரிக்கு மகனாக 18-ம் நூற்றாண்டில் பிறந்தார். இளமையில் தந்தையிடம் கல்வி பயின்று தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு ஆகிய மொழிகளில் அறிவுடையவராகத் திகழ்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

இசைக் கலையில் புலமை பெற்று விளங்கினார். நல்லை நாயக நான்மணிமாலை, காரைக் குறவஞ்சி ஆகிய நூல்களை இயற்றினார்

நூல்கள் பட்டியல்

குறவஞ்சி
  • காரைக் குறவஞ்சி
மாலை
  • நல்லை நான்மணிமாலை

உசாத்துணை


✅Finalised Page