கிளி விடு தூது
From Tamil Wiki
To read the article in English: Kili Vidu Thoodu.
கிளி விடு தூது (பொ.யு 17-ம் நூற்றாண்டு) தூது சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த சிற்றிலக்கிய நூல்.
நூல் பற்றி
தருமபுர ஆதீனத்தின் சீடராய் இருந்தவரும் சொர்க்கபுரத்து மடாலயத்தை நிறுவியவருமான அழகிய திருச்சிற்றம்பல அடிகள் தன் ஞான ஆசிரியரான திருச்சிற்றம்பல தேசிகரின் மீது கிளிவிடு தூது பாடினார்.
தூதுப் பொருள்
தூது விடு பொருள் என்பது தூது செல்லும் பொருள். அழகிய திருச்சிற்றம்பல அடிகள் இந்நூலில் கிளியை தூதுப் பொருளாக பயன்படுத்தியுள்ளார்.
பாடல்
நேரிசை வெண்பா
ஐய னழகியசிற் றம்பலசம் பந்தன்மேல்
துய்ய கிளிவிடுதூ தோதுதற்குக் கையினிள
மானையெடுத் தானடிய ரூனமறுத் தானளித்த
ஆனைமுகத் தானைநினைப் பாம்
கலிவெண்பா
பூங்கமல மேலயனும் புள்ளின்மேல் விண்டுவுஞ்சென்
றூங்குகீழ் நாடி யுணர்வரியோன் - தேங்கமழுங்
உசாத்துணை
✅Finalised Page