எயிற்போர்
எயிற்போர் நொச்சித்திணையின் துறைகளில் ஒன்று. மதிலிடத்தில் இருந்து நொச்சி மறவர் செய்யும் போரைக் கூறும் துறை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல்கூர்மையான போர்க் கருவியால் அரணைக் காக்கின்ற நொச்சி மறவரின் போர்ச் செயலைச் சிறப்பித்துப் பேசுவது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
அயில்படையின் அரண்காக்கும்
எயில்படைஞர் இகல்மிகுத்தன்று(5.6)
வெண்பா
மிகத்தாய செங்குருதி மேவரு மார்பின்
உகத்தாம் உயங்கியக் கண்ணும் - அகத்தார்
புறத்திடைப் போதம் தடம் புரிந்தார் பொங்கி
மறத்திடை மானம் மேற்கொண்டு (91)
பொருள்: மதிலின் உள்ளேயிருந்த நொச்சி மறவர்கள், தமது மார்பில் இரத்தம் ஒழுகவும் பொருட்படுத்தாதவர்களாய்ப் பொங்கி, மானமே பொருளெனக் கொண்டு எயிலின் வெளியே வந்து உழிஞை மறவரைக் கொல்வதற்கு விரும்பினார்கள்.
உசாத்துணை
நொச்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Mar-2025, 09:50:56 IST