ஹென்றி மார்ட்டின்
ஹென்றி மார்ட்டின் ( 1811 - மார்ச் 31, 1861) யாழ்பாணத்தின் தொடக்ககால கல்வியாளர், இதழாளர், வட்டுக்கோட்டை குருமடத்துடன் தொடர்புடையவர். தமிழ், ஆங்கில மொழி அறிஞர்
பிறப்பு,கல்வி
ஹென்றி மார்ட்டின், 1811 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண நகரில் உள்ள சுண்டிக்குளியில் பிறந்தார். தொடக்கக் கல்வியைத் தெல்லிப்பழையில் அமைந்திருந்த அமெரிக்க மிசன் தருமப் பாடசாலையில் பெற்ற பின் தொடர்ந்து வட்டுக்கோட்டை குருமடத்திலும் கல்வி கற்றார்.
தனிவாழ்க்கை
ஜான் மார்ட்டின் வட்டுக்கோட்டை குருமடத்திலேயே ஆசிரியராகப் பணியில் அமர்ந்தார். 1941 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இலங்கையின் முதல் தமிழ்ப் பத்திரிகையும், யாழ்ப்பாணத்தின் முதல் செய்திப் பத்திரிகையுமான உதயதாரகையின் முதல் ஆசிரியராகப் பணி புரிந்தார். இவர் அதன் ஆங்கிலப் பிரிவின் ஆசிரியர்
1843 ல், வட்டுக்கோட்டைச் செமினரியில் இருந்து விலகி, அரசாங்கக் களஞ்சியப் பொறுப்பாளர் என்னும் பதவியில் அமர்ந்தார். அத்துடன், உயர் நீதிமன்ற வழக்குகள் நடைபெறும் காலங்களில் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். அச்சியந்திரம் ஒன்றை வாங்கும் முயற்சியில் 1861 ஆம் ஆண்டு சென்னைக்குச் சென்ற இவர் திரும்பிவந்து சில நாட்களிலேயே காலமானார்.
உசாத்துணை
- மார்ட்டின், ஜோன். எச்.; Notes on Jaffna, Chronological, Historical, Biographical; தெல்லிப்பழை, இலங்கை, 1923. (மறுபதிப்பு: ஏசியன் எஜுகேஷனல் சர்வீசஸ், புது டில்லி, 2003).