under review

ஸ்ரீநிவாசகர்

From Tamil Wiki
Revision as of 11:14, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஸ்ரீநிவாசகர் (பொ.யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றின்ப கீதங்கள் பல பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

ஸ்ரீநிவாசகர் இராமநாதபுரத்தில் வசித்த பிராமணர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக கலகம் செய்து தூக்கிலிடப்பட்ட வெள்ளை மருதப்ப பொலிகார் இவரை ஆதரித்து வந்தார். வெள்ளை மருது அல்லது பெரிய மருது சிவகங்கை எனும் ஊரை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்.

இலக்கிய வாழ்க்கை

ஸ்ரீநிவாசகர் சிற்றின்ப கீதங்கள் பல பாடினார். சதிராட்டத்திற்குரிய பாடல் தொகுதி ஒன்றை இயற்றியதாக சைமன் காசிச்செட்டி குறிப்பிட்டார். இவரின் பாடல் தொகுதிகள் கிடைக்கவில்லை.

மறைவு

ஸ்ரீநிவாசகர் அக்டோபர் 1801-ல் திருப்பத்தூர் கோட்டையில் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார்.

உசாத்துணை


✅Finalised Page