வேலுப்பிள்ளை (வட்டுக்கோட்டை)
From Tamil Wiki
Revision as of 11:12, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
வேலுப்பிள்ளை (வட்டுக்கோட்டை) ( யாழ்ப்பாணத்து வடகோவை வேலுப்பிள்ளை) (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வேலுப்பிள்ளை 19-ம் நூற்றாண்டில் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
யாழ்ப்பாணத்து வடகோவை வேலுப்பிள்ளை தில்லையிலே கோவில் கொண்ட அம்பலவாண சுவாமிமீது அந்தாதித் தொடையில் உதடுகள் ஒட்டாமல் யமகமும் அமைந்த கடினமான நிரோட்டக யமகவந்தாதி என்னும் வகைமையில் திருத்தில்லை நிரோட்டக யமகவந்தாதி என்ற அந்தாதியை இயற்றினார். நூறு செய்யுள்களால் அமைந்த இந்நூலை கோப்பாய் ஆறுமுகச்செட்டியார் அவர்கள் 1892-ம் வருடம் பதிப்பித்து வெளியிட்டார்.
நூல்கள் பட்டியல்
- திருத்தில்லை நிரோட்டக யமக அந்தாதி
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967
✅Finalised Page