under review

வி. சாமிநாதபிள்ளை

From Tamil Wiki
Revision as of 10:19, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வி. சாமிநாதபிள்ளை (பொ.யு 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியப்புலவர். திருவோத்தூர் இளமுலையம்பிகை அந்தாதி முக்கியமான படைப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

கருந்திட்டைக்குடி வி. சாமிநாதபிள்ளை என்று அழைக்கப்பட்டார். ஆறுமுக நாவலரின் மாணவர். தஞ்சை எஸ்.பி.ஜி கல்லூரித் தலைமையாசிரியராயிருந்த விஸ்வலிங்கத்திற்கு மகனாகப் பிறந்தார். பத்தாவது வரை ஆங்கிலக் கல்வி பயின்றார். தன் தந்தையிடத்திலும், தமிழ்ப்புலவர்களிடத்திலும் தமிழ்க்கல்வி பயின்றார். வட ஆர்க்காடு மாவட்டத்தில் முப்பது ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார். துறவற வாழ்க்கை போல் வாழ்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

சாமிநாதபிள்ளை திருவோத்தூர் இளமுலையம்பிகை மீது அந்தாதி பாடினார். தனிப்பாடல்கள் பல இயற்றினார். வேதமொழிபெயர்ப்பாளர் சிவாநந்த அடிகள் எழுதிய 'திருவொற்றியூர் மான்மிய உரைநடை'க்கு சிறப்புப்பாயிரம் எழுதினார்.

நூல் பட்டியல்

  • திருவோத்தூர் இளமுலையம்பிகை அந்தாதி

உசாத்துணை


✅Finalised Page