முத்தம்பெருமாள் (கணியான்)
கலைமாமணி பி. முத்தம்பெருமாள் (பிறப்பு: ஏப்ரல் 1, 1970) கணியான் கூத்துக் கலைஞர். நாங்குனேரி பி. வானமாமலை கணியானின் மகன். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மகுட கலைஞர்கள் நல சங்கத்தின் துணைத் தலைவராக உள்ளார்.
பிறப்பு, கல்வி
பி. முத்தம்பெருமாள் ஏப்ரல் 1, 1970 அன்று நாங்குனேரி அரசு மருத்துவமனையில் நாங்குனேரி பி. வானமாமலை, கோமதியம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். முத்தம் பெருமாளுடன் பிறந்தவர்கள் ஆறு பேர். மூன்று தம்பி, மூன்று தங்கை. முத்தம் பெருமாளின் பூர்வீகம் களக்காடு அருகே உள்ள பத்மனேரி. பத்மனேரி கொம்பு மாடன் இவரது குடும்பத்தின் குலதெய்வம்.
முத்தம்பெருமாள் நாங்குனேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். குடும்பத்தின் வறுமை நிலைக் காரணமாக அவரால் மேலே படிக்க இயலவில்லை.
தனி வாழ்க்கை
முத்தம் பெருமாள் 1988 ஆம் ஆண்டு பத்தொன்பதாம் வயதில் பானுமதியை திருமணம் செய்தார். முத்தம்பெருமாள், பானுமதி தம்பதியருக்கும் மூன்று குழந்தைகள். மூத்த மகன் சிவராமகிருஷ்ணன் பி.இ முடித்து ஹெ.டி.எப்.சி வங்கியில் கிளை நிர்வாகியாக உள்ளார். இரண்டு மகள்கள், கோகிலாதேவி (வக்கீல்), கார்த்திகேயாயினி (எம்.ஏ. படித்துக் கொண்டிருக்கிறார்).
முத்தம் பெருமாள் பத்தொன்பதாம் வயதில் தூத்துக்குடிக்கு ஆம்புலனஸ் ஓட்டும் பணிக்குச் சென்றார். அங்கிருந்து அரசு ரயில்வே பணியில் ஓட்டுனராக கோவாவில் சேர்ந்தார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.