சுமதிநாதர்
சுமதிநாதர் சமண சமயத்தின் ஐந்தாவது தீர்த்தங்கரர். சமண சமய சாத்திரங்களின்படி உலக வாழ்வை துறந்த சித்த புருசர்.
புராணம்
சுமதிநாதர், இச்சுவாகு குலத்தில் மேகரதனுக்கும் ராணி சுமங்களாவுக்கும் மகனாக அயோத்தியில் பிறந்தார். அயோத்தியில் உள்ள கோஷல்பூரில் வைகாசி மாதத்தின் பிரகாசமான பாதியில் எட்டாவது நாளில் பிறந்தார். நீண்ட ஆயுட்காலத்திற்குப் பிறகு, அவர் 1000 ஆண்களுடன் சேர்ந்து வைஷாக மாதத்தின் பிரகாசமான பாதியின் 9-வது நாளில் தீட்சை எடுத்தார். 20 வருட தீட்சை மற்றும் உலக வாழ்க்கையைத் துறந்த பிறகு, சுமதிநாத் சித்திரை மற்றும் மாசி நட்சத்திரத்தின் பிரகாசமான பாதியின் பதினொன்றாம் நாளில் கேவல்ய ஞானத்தை அடைந்தார். சித்திரை மாதத்தின் பிரகாசமான பாதியின் ஒன்பதாம் நாளில், பகவான் சுமதிநாத், மற்ற 1000 துறவிகளுடன் சம்மேட் சிகரத்தில் (மலை) உலக வாழ்விலிருந்து விடுவிக்கப்பட்டு நிர்வாணத்தை அடைந்தார்.
அடையாளங்கள்
- உடல் நிறம்: பொன்னிறம்
- லாஞ்சனம்: கோட்டான்
- மரம்: பிரியங்கு மரம்
- உயரம்: 300 வில் (900 மீட்டர்)
- முக்தியின் போது வயது: 4,000,000 பூர்வ வருடங்கள்
- தலைமை சீடர்கள் (காந்தர்கள்):
- யட்சன்: தும்புரு
- யட்சினி: மாகாளி
கோயில்கள்
- பண்டாசர் ஜெயின் கோவில், பிகானேர்
- ஸ்ரீ தலஜா ஜி, தலஜா (பாவ் நகர்)
உசாத்துணை
- 05. Sumatinath Swami - ENCYCLOPEDIA OF JAINISM
- Sumatinath Bhagwan Tirthankara - Mahaviralayam Jain Museum
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.