சிலப்பதிகாரம்
From Tamil Wiki
தமிழில் தோன்றிய முதல் காப்பியம் சிலப்பதிகாரம். ஐம்பெருங்காப்பியங்களுள் இது முதன்மையானதாகக் கருதப்படுகிறது. இதனை இயற்றியவர் இளங்கோவடிகள். இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ்க் காப்பியம் இது. மூவேந்தர்களையும் கதைத்தொடர்பால் ஒருங்கிணைத்து, புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் எனச் சோழ, பாண்டிய, சேர நாட்டுத் தலைநகரங்களையே காண்டத் தலைப்பாகக் கொண்டுள்ளது. ‘உரையிடைப்பட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்றும் சிலப்பதிகாரம் குறிப்பிடப்படுகிறது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.