under review

சின்ன இப்றாகீம் முகய்தீன்

From Tamil Wiki
Revision as of 06:19, 16 March 2023 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சின்ன இப்றாகீம் முகய்தீன் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சின்ன இப்றாகீம் முகய்தீன் இலங்கை மன்னார் பகுதியில் பிறந்தார். எருக்கலம்பிட்டிக்கு விதானேயாக இருந்தார். அட்டாவதானம் கற்றார்.

இலக்கிய வாழ்க்கை

சின்ன இப்றாகீம் முகய்தீன் தனிப்பாடல்கள் பல பாடினார். இவர் அட்டாவதானம் செய்யும்போது பாடிய பாடல் ஒன்றை முகம்மது காசிம் என்ற புலவர் வேண்டுமென்றே பிழையாக எழுதிக்கொடுத்து அதில் குற்றம் உள்ளது எனச் சாதித்தார் என்றும், அதைத் தாங்கமுடியாது “ஆவென்னு மட்சரத் தாதியென்றறியாத" என்று தொடங்கும் பாடலொன்றைப் பாடினார் என்றும் நம்பப்படுகிறது. இவர் இயற்றிய பாடல்கள் கிடைக்கவில்லை

உசாத்துணை


✅Finalised Page