under review

சமணமும் தமிழும்

From Tamil Wiki
Revision as of 14:40, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சமணமும் தமிழும்

சமணமும் தமிழும் (1954) மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய நூல். தமிழ்ப் பண்பாட்டுக்கும் இலக்கியத்திற்கும் சமண மதத்தின் பங்களிப்பை ஆராய்ந்து நிறுவும் முன்னோடி ஆய்வு.

எழுத்து வெளியீடு

மயிலை சீனி. வேங்கடசாமி 1940 முதல் இந்நூலை எழுத தொடங்கினார். 1954-ல் திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் இந்நூலை வெளியிட்டது. இந்நூலுக்கு முன்னோடியாக மயிலை சீனி.வேங்கடசாமி காந்தருவதத்தையின் இசைத்திருமணம் என்னும் நூலை டிசம்பர் 23, 1943-ல் வெளியிட்டார். அதில் சமணமும் தமிழும் என்னும் நூல் எழுதப்பட்டுக்கொண்டிருப்பது குறிப்பிடப்படுகிறது. இது முதல்நூல் என்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாம் பகுதி வெளிவரவில்லை. இந்நூலை எழுதிய பின் தமிழ்ச்சூழலில் இருந்து தனக்கு ஆதரவு இல்லாமையால் பெட்டியில் போட்டு வைத்திருந்ததாகவும் பத்தாண்டுகளுக்குப் பின் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக நிறுவனர் வ.சுப்பையா பிள்ளை கோரியதனால் பிரதியை தேடியபோது அவை செல்லரித்து போயிருந்தன என்றும், பல ஆண்டு உழைப்பு வீணானமையால் மீண்டும் எழுதியதாகவும், ஆனால் இரண்டாம் பகுதியை எழுதி முடிக்க முடியவில்லை என்றும் மயிலை சீனி வேங்கடசாமி முன்னுரையில் சொல்கிறார்.

உள்ளடக்கம்

சமணமும் தமிழும் சமணத்தின் வரலாறு, தத்துவம், அது தமிழகம் வந்து செழித்தது, வீழ்ச்சி அடைந்தது, அதன் பங்களிப்பு, இன்றுள்ள எச்சங்கள் ஆகியவற்றை ஆதாரங்களுடன் விளக்குகிறது.

  • சமணசமயம் தோன்றிய வரலாறு
  • சமணசமய தத்துவம்
  • சமண முனிவர் ஒழுக்கம்
  • ஆருகதரின் இல்லற ஒழுக்கம்
  • சமண சமயம் தமிழகம் வந்த வரலாறு
  • சமண சமயம் சிறப்படைந்த வரலாறு
  • சமயப்போர்
  • சமணசமயம் குன்றிய வரலாறு
  • இந்து மதத்தில் சமணக்கொள்கைகள்
  • சமண திருப்பதிகள்
  • இப்போதுள்ள சமண ஊர்களும் சமணரும்
  • ஆறுவகை உயிர்கள்
  • வடக்கிருத்தல்
  • சமண சமயத்தில் மகளிர் நிலை
  • சில புராணக் கதைகள்
  • ஆருகத சமயத்து பெண்பால் துறவிகள்
  • ஆருகத மதத்தை இந்து மதத்தில் சேர்க்கமுயன்றது
  • சமண சமய புகழ்ப்பாக்கள்
  • சிறப்புப் பெயரகாதி

விருது

1961-ல் இந்நூலுக்கு சிறந்த தமிழ் நூலுக்கான தமிழக அரசின் கேடயம் வழங்கப்பட்டது.

இலக்கிய இடம்

சமணமும் தமிழும் தமிழிலக்கியத்தில் சமணர்களின் பங்களிப்பை ஆராயும் முன்னோடி நூல். இவ்வகையில் இதுவே முதல் நூல் என்று மயிலை.சீனி வேங்கடசாமி முன்னுரையில் சொல்கிறார். பின்னாளில் பல நூல்களுக்கு வழிகோலிய ஆய்வு இது.

உசாத்துணை


✅Finalised Page