under review

கோனேரியப்ப முதலியார்

From Tamil Wiki
Revision as of 11:13, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கோனேரியப்ப முதலியார் (குகனேரியப்ப நாவலர்)(பொ.யு. 18-ம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

கோனேரியப்ப முதலியார் குகனேரியப்ப நாவலர் என்றும் அழைக்கப்பட்டார். தொண்டை நாட்டுக் காஞ்சிபுரத்தில் பிள்ளைப்பாளையம் என்னும் ஊரில் செங்குந்தர் மரபில் சிவானந்த முதலியாரின் மகனாகப் பிறந்தார். இவர் கச்சியப்ப சிவாச்சாரியாரை குருவாகக் கொண்டவர் என்றும் அவர் கட்டளைப்படி உபதேசக் காண்டத்தைப் பாடினார் என்பதற்கும் ஆதாரமில்லை.

இலக்கிய வாழ்க்கை

கோனேரியப்ப முதலியார் கந்தபுராணத்தின் ஏழாவது காண்டத்தை தமிழில் செய்தார். பல படலங்களும், விருத்தங்களும் கொண்டவை. நாலாயிரத்து முந்நூற்றி நாற்பத்தியெட்டு செய்யுட்கள் உள்ளன. 1887-ல் உபதேசகாண்டத்தின் மூலம் பதிப்பிக்கப்பட்டது.

பாடல் நடை

செய்ய தாமரை மடந்தைநா யகனமார்க்
குடந்தயல் சிதைந்தனன்
வெய்ய வெம்புலி நிசாசரற் கமருடைந்து
வேதனு மறைந்தனன்
வய மெங்கணு மரந்தைகொண் டுறுபதந்
துறந்துயிர் வருந்தினார்
தெய்வவெண்கயிலை சென்றிருந்து சிவனுக்
கருச்சனை திருத்தினார்

உசாத்துணை


✅Finalised Page