கபிலரின் மலர்கள்
From Tamil Wiki
Revision as of 04:20, 14 July 2023 by Jagadeesan.hongkong (talk | contribs)
To read the article in English: Kabilarin Malargal.
கபிலரின் மலர்கள்: சங்க காலப் புலவராகிய கபிலர் பத்துப்பாட்டின் ஒரு பகுதியாகிய குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்களைப் பற்றி குறிப்பிடுகிறார். அவை ஆய்வாளர்களால் பட்டியலிடப்பட்டுள்ளன. (உ.வே.சாமிநாதையர் ஆய்வு.)
பார்க்க கபிலர்
மலர்களின் பட்டியல்
கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள்.
(பார்க்க குறிஞ்சிப் பாட்டு )
- காந்தள்
- ஆம்பல்
- அனிச்சம்
- குவளை
- குறிஞ்சி
- வெட்சி
- செங்கொடுவேரி
- தேமா (தேமாம்பூ)
- மணிச்சிகை (குன்றிமணி )
- உந்தூழ் (பெரு மூங்கில்)
- கூவிளம் (வில்வம்)
- எறுழ் ( எறுழம்பூ)
- சுள்ளி (முள் கனகாம்பரம்)
- கூவிரம்
- வடவனம் (துளசி)
- வாகை
- குடசம்
- எருவை (கோரை)
- செருவிளை(வெள்ளைக்காக்கணாம் பூ)
- கருவிளம்
- பயினி
- வானிஓமம்
- குரவம்
- பசும்பிடி
- வகுளம்(மகிழம்)
- காயா
- ஆவிரை (ஆவாரம்பூ)
- வேரல் (மூங்கில்)
- சூரல் பிரம்பு
- சிறுபூளை
- குறுநறுங்கண்ணி
- குருகிலை
- மருதம்
- கோங்கம் (நெல்லி)
- போங்கம்
- திலகம்
- பாதிரி
- செருந்தி
- அதிரல் (காட்டு மல்லி)
- சண்பகம்
- கரந்தை
- குளவி
- மாமரம் (மாம்பூ)
- தில்லை
- பாலை
- முல்லை
- கஞ்சங்குல்லை
- பிடவம்
- செங்கருங்காலி
- வாழை
- வள்ளி (பூசணி)
- நெய்தல்
- தாழை
- தளவம்
- தாமரை
- ஞாழல்
- மௌவல்
- கொகுடி(கொடி முல்லை)
- சேடல்
- செம்மல் முல்லை
- சிறுசெங்குரலி
- கோடல் வெண்காந்தள்
- கைதை (தாழையின் ஒருவகை)
- வழை
- காஞ்சி
- கருங்குவளை (மணிக் குலை)
- பாங்கர்
- மரவம், மராஅம் (கடம்பு)
- தணக்கம் (நுணா)
- ஈங்கை
- இலவம்
- கொன்றை
- அடும்பு
- ஆத்தி (திருவாத்தி)
- அவரை
- பகன்றை (கிலுகிலுப்பை)
- பலாசம் (முள்முருக்கு)
- பிண்டி (அசோகம்)
- வஞ்சி
- பித்திகம் (பிச்சி, சாதிமுல்லை)
- சிந்துவாரம் (நொச்சி)
- தும்பை
- துழாய் (நீலத்துளசி, கிருஷ்ணதுளசி)
- தோன்றி
- நந்தி
- நறவம்
- புன்னாகம் (புங்கம்)
- பாரம் (பருத்தி)
- பீரம் (பீர்க்கு)
- குருக்கத்தி
- ஆரம் (சந்தனம்)
- காழ்வை (அகில்)
- புன்னை
- நரந்தம் (நார்த்தம்)
- நாகம் (நாவல்)
- நள்ளிருணாறி
- குருந்தம் (காட்டு நாரத்தம்)
- வேங்கை
- புழகு (மலையெருக்கு)
உசாத்துணை
- குறிஞ்சி திணை மலர்கள்
- கபிலரின் மலர்கள் - தினமலர்
- தொல்காப்பியத்தில் தாவரங்கள் பி.சாவித்ரி
- கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் இரா. பஞ்சவர்ணம்
- தமிழரும் தாவரமும் - கு. வி. கிருஷ்ணமூர்த்தி
- சங்க இலக்கியத் தாவரங்கள் : கு. சீநிவாசன்
✅Finalised Page