க. ஏகாம்பரம்
From Tamil Wiki
Revision as of 14:37, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
க. ஏகாம்பரம் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் அறிஞர், ஆசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வல்லுவெட்டியில் பிறந்தார். இருபாலைச் சேனதிராய முதலியாரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். தென்னிந்தியாவுக்குச் சென்று திருத்தணிகைச் சரவணப் பெருமாள் ஐயரிடம் இலக்கண நூல்களைக் கற்றார். இவர் தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியராக இருந்தார்.
இலக்கிய வாழ்க்கை
க. ஏகாம்பரம் கந்தரந்தாதிக்கு உரையொன்று எழுதினார்.
நூல் பட்டியல்
- கந்தரந்தாதி உரை
உசாத்துணை
✅Finalised Page