under review

ஸ்ரீலேக்கா பேரின்பகுமார்

From Tamil Wiki
Revision as of 16:00, 7 March 2024 by Ramya (talk | contribs)

ஸ்ரீலேக்கா பேரின்பகுமார் (பிறப்பு: மே 14, 1977) ஈழத்துப் பெண் எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஸ்ரீலேக்கா பேரின்பகுமார் இலங்கை யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் தருமலிங்கம், லோகேஸ்வரி இணையருக்கு மே 14, 1977-ல் பிறந்தார். சுன்னாகம் மயிலணி சைவ மகாவித்தியாலயத்தில் ஆரம்ப கல்வி கற்றார். இடைநிலை, உயர்கல்வியை தெல்லிப்பளை யுனியன் கல்லூரியில் கற்றார். யாழ்ப்பணப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு கலைமாணிப் பட்டம் பெற்றார். மன்னார் தேசிய கல்வி நிறுவகத்தில் கல்வியியல் டிப்ளோமா பட்டம் பெற்றார். ஆசிரியராகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

ஸ்ரீலேக்கா பேரின்பகுமார் கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம், நாடக இலக்கியம், நாவல் எழுதினார். இவரின் படைப்புகள் தாயகம், கலைமுகம் இதழ்களிலும் வலம்புரி நாளிதழிலும் வெளிவந்தன.

நூல் பட்டியல்

  • வேப்பங்குச்சி (சிறுகதைத் தொகுப்பு)
  • மழையும் இங்கு சாரல் அடிக்கும் (சிறுகதைத் தொகுப்பு)
  • கிணற்றங்கரை (நாடகங்கள்)
  • மயில் இறகு (சிறுவர் இலக்கியம்)
  • கிண்கிணி நாதங்கள் (சிறுவர் நாடகங்கள்)
  • கண்மணியே கவி பாடு (சிறுவர் பாடல்கள்)

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.