being created

வ. நஞ்சுண்டன்

From Tamil Wiki
Revision as of 16:22, 8 June 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added; Image Added:)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கவிஞர் வ. நஞ்சுண்டன்

வ. நஞ்சுண்டன் (ஜூன் 15, 1948 - ஏப்ரல் 13, 2014) கவிஞர், எழுத்தாளர். பொம்மலாட்டக் கலைஞர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். சிறார்களுக்கான பல படைப்புகளைத் தந்தார். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

வ. நஞ்சுண்டன், ஜூன் 15, 1948 அன்று, நாமக்கல் மாவட்டத்தின் பரமத்தி வேலூரை அடுத்து அனிச்சம்பாளையம் என்ற கிராமத்தில், வருணதேவன் - பழனியம்மாள் இணையருக்குப் பிறந்தார். நன்செய் இடையாறு தொடக்கப்பள்ளியில் தொடக்கக் கல்வி கற்றார். உயர்நிலைக் கல்வியை வேலூர் கந்தசாமி கண்டர் உயர்நிலைப்பள்ளியில் படித்தார். ஆசிரியர் பயிற்சி பெற்றார்.

தனி வாழ்க்கை

வ. நஞ்சுண்டன், பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். தலைமை ஆசிரியராகப் பணி ஓய்வு பெற்றார். மனைவி: கலாவதி. மகன்கள்: விஜய், செந்தில்குமார், சுரேஷ்குமார்.

இலக்கிய வாழ்க்கை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.