வைரமுத்து
வைரமுத்து (பிறப்பு: ஜூலை 13, 1953) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
வைரமுத்து தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் ராமசாமி, அங்கம்மாள் இணையருக்கு ஜூலை 13, 1953-இல் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார்.
தனிவாழ்க்கை
வைரமுத்து பொன்மணியை மணந்தார். மகன்கள் மதன் கார்க்கி, கபிலன்.
திரை வாழ்க்கை
நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் 2009 சனவரி மாதம் வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ.ஆர். ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கிய பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன. 980இல் "நிழல்கள்" திரைப்படத்தில் இது ஒரு பொன்மாலைப் பொழுது எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
விருதுகள்
- கலைமாமணி விருது (1990)
- கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது (2003)
- பத்ம பூஷன் விருது (2014)
- சிறந்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருது (ஆறு முறை)
நூல் பட்டியல்
கவிதைத் தொகுப்பு
- வைகறை மேகங்கள்
- திருத்தி எழுதிய தீர்ப்புகள்
- இன்னொரு தேசியகீதம்
- எனது பழைய பனையோலைகள்
- கவிராஜன் கதை
- இரத்த தானம்
- இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
- தமிழுக்கு நிறமுண்டு
- பெய்யெனப் பெய்யும் மழை
- எல்லா நதிகளிலும் எங்கள் ஓடங்கள்
- கொடி மரத்தின் வேர்கள்
நாவல்
- வானம் தொட்டுவிடும் தூரம்தான்
- மீண்டும் என் தொட்டிலுக்கு
- வில்லோடு வா நிலவே
- சிகரங்களை நோக்கி
- ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்
- காவி நிறத்தில் ஒரு காதல்
- தண்ணீர் தேசம்
- கள்ளிக்காட்டு இதிகாசம்
- கருவாச்சி காவியம்
- மூன்றாம் உலகப்போர்
கட்டுரைகள்
- இதுவரை நான் (தன்வரலாறு)
- கல்வெட்டுக்கள்
- என் ஜன்னலின் வழியே
- நேற்று போட்ட கோலம்
- ஒரு மெளனத்தின் சப்தங்கள்
- சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்
- வடுகபட்டி முதல் வால்கா வரை
- இதனால் சகலமானவர்களுக்கும்
- இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
- கொஞ்சம் தேனீர் நிறைய வானம்
- தமிழாற்றுப்படை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.