under review

வைத்தியநாதச் செட்டியார்

From Tamil Wiki
Revision as of 01:02, 5 September 2023 by Tamizhkalai (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வைத்தியநாதச் செட்டியார் (1753-1844) ஈழத்து தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

வைத்தியநாதச் செட்டியார் இலங்கை யாழ்ப்பாணம் அச்சுவேலியில் அரிகரபுத்திரச் செட்டியாரின் மகனாக 1753-ல் பிறந்தார். தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். நெல்லியவோடைத் தேவி மீது பக்தி கொண்டவர். நெல்லியவோடை அம்மன் கோயிலின் பூசகராய் இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

வைத்தியநாதச் செட்டியார் கவிதைகள் எழுதினார். நெல்லியோடைத் தேவிமீது தனிப் பாக்கள் பல இயற்றினார். 'நெல்லியவோடை அம்பாள் பிள்ளைக்கவி' என்ற பிரபந்தத்தை இயற்றினார்.

மறைவு

வைத்தியநாதச் செட்டியார் 1844-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • நெல்லியவோடை அம்பாள் பிள்ளைக்கவி

உசாத்துணை


✅Finalised Page