வைக்கம் முகமது பஷீர்
இந்தியாவின் மிகச்சிறந்த பத்து எழுத்தாளர்களின் பட்டியலில் ஒருவரென அனைவராலும் சுட்டிக் காட்டப்படும் ஒரு பெயர் வைக்கம் முகம்மது பஷீர். நவீன மலையாள இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்பாளியான பஷீர், எளிமையான வார்த்தைகள், மிகைப்படுத்தல்கள் இல்லாத நடை, இயல்பு வாழ்க்கையோடுப் பின்னிப் பிணைந்திருக்கும் கதாபாத்திரங்கள் இவற்றால் அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் படைப்பாளியாகப் புகழ் பெற்றிருந்தார். வெளிப்படையான நையாண்டியும், சுயஎள்ளலும் அவரது எழுத்துக்கே உரியது. அவர் நாவல்களும், சிறுகதைகளும் எழுதியுள்ளார்.
1வாழ்க்கைக் குறிப்பு
1.1 பிறப்பு, இளமை
1908 -ம் ஆண்டு ஜனவரி 19-ம் நாள் கேரளாவில் உள்ள வைக்கம் தாலுகாவில் 'தலையோலப்பரம்பில்' ஆறு பிள்ளைகள் பிறந்த ஒரு குடும்பத்தில் மூத்த பிள்ளையாகப் பஷீர்பிறந்தார்.
பஷீரின் தந்தையார் பெயர் காயி அப்துல் ரகுமான், தாயார் பெயர் குஞ்ஞாச்சுமா. அதே ஊரில் மலையாளப் பள்ளியில் ஆரம்பக்கல்வியும் பின்னர் வைக்கம் ஆங்கிலப் பள்ளியிலும் கற்றார். காந்திஜியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். மலபாருக்குச் சென்று இந்திய தேசியக் காங்கிரசில் சேர்ந்தார். 1930-ல் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டார். புரட்சி அமைப்புகளின் கொள்கைகளைப் பரப்பவே உஜ்ஜீவனம் என்ற வார இதழைத் தொடங்கி நடத்தினார்.'பிரபா’ என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதினார். பஷீரின் பத்திரிகை தடை செய்யப்பட்டது. இவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதிலிருந்து தப்பிக்கவே இந்தியா முழுவதும் சுற்றித் திரிந்து நாடோடி போலக் கழித்தார். சிறுகதைகளும் நாவல்களும் எழுத ஆரம்பித்தார்.
5இலக்கிய முக்கியத்துவம்.
6மரணம் / மறைவு
வைக்கம் முகமது பஷீர், 1994-ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி, தன்னுடைய 86-வது வயதில் மறைந்தார்.
7 வாழ்க்கை வரலாறு நூல்
பஷீர் தனிவழியிலோர் ஞானி, என்கிற அவரது வாழ்க்கை வரலாறு நூல் பேராசிரியர் எம்.கே.ஸாநுவால் எழுதப்பட்டது. இதை தமிழில் யூமா வாசுகி மொழிபெயர்க்க பாரதி புத்தகாலயம் வெளியிட்டது.
8அவர் பெற்ற விருதுகள்
- பத்மஸ்ரீ விருது (1982)
- கேரள சாகித்ய அக்காதமி விருது
- மத்திய சாகித்ய அக்காதமி விருது
- வள்ளத்தோள் விருது 1993
9மற்றவை
10படைப்புகள்
10.1நாவல்கள்
- 1. காதல் கடிதம்
- 2. பால்யகால சகி
- 3. சப்தங்கள்
- 4. எங்க உப்புப்பாவுக்கொரு ஆனையிருந்தது
- 5. மரணத்தின் நிழலில்
- 6. வாழ்க்கையின் நிழற் சுவடுகள்
- 7. பாத்துமாவின் ஆடு
- 8. மதிலுகள்
- 9. தாரா ஸ்பெஷல்ஸ்
- 10. மாந்திரிகப் பூனை
- 11. காதலின் தினங்கள்
- 12.காதல் கரப்பான்
10.2சிறுகதைகள்
- ஜென்ம தினம்
- போலீஸ்காரனின் மகள்
- ஐசுக்குட்டி
- நினைவுக் குறிப்பு
- அம்மா
- மூடர்களின் சொர்க்கம்
- ஏழைகளின் விலைமாது
- உலகப் புகழ்பெற்ற மூக்கு
- ஒரு சிறைப்பறவையின் புகைப்படம்
- பசி
- நீலவெளிச்சம்
- ஒரு பகவத் கீதையும் சில முலைகளும்
- ஆனை முடி
- அனல் ஹக்
- சிரிக்கும் மரப்பாச்சி
- செகண்ட் ஹாண்ட்
- பூமியின் வாரிசுதாரர்கள்
- பூவன்பழம்
- சிங்கிடி முங்கன்
- புனிதரோமம்
- யா இலாஹி
- கள்ள நோட்டு
- மனைவியின் காதலன்
- பூ நிலவில்
- நிலவைக் காணும்போது
- அபூர்வ தருணங்கள்
- முதல் முத்தம்
- ஆளரவமற்ற வீடு
- ஏழைகளின் விலைமாது
- கால் சுவடு
- இடியன் பணிக்கர்
- இரட்டிப்பு
- வளையிட்ட கை
- தங்கம்
- பூமியின் வாரிசுதாரர்கள்
- நூறுரூபாய் நோட்டு
- எனது நைலான் குடை
- பர்ர்ர் . . . !
- சிரிக்கும் மரப்பாச்சி
- தங்க மாலை
- எட்டுக்காலி மம்மூஞ்ஞு
- ரேடியோகிராம் என்னும் ரதம்
- ஒரு கணவனும் மனைவியும்
- மனைவியைத் திருடிச்செல்ல ஆள் தேவை
- நோட்டு
10.3 திரைக்கதை
- பார்கவி நிலையம்
10.4 மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்
- உலகப் புகழ்பெற்ற மூக்கு
- பாத்துமாவின் ஆடு
- பால்யகால சகி
- மதில்கள்
11உசாத்துணை
சு.பொ. அகத்தியலிங்கம் (25 மே 2014). "படைப்பாளியின் உள்மனதை ஊடுருவி". தீக்கதிர் தமிழ் நாளிதழ்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.