being created

வைக்கம் முகமது பஷீர்

From Tamil Wiki

இந்தியாவின் மிகச்சிறந்த பத்து எழுத்தாளர்களின் பட்டியலில் ஒருவரென அனைவராலும் சுட்டிக் காட்டப்படும் ஒரு பெயர் வைக்கம் முகம்மது பஷீர். நவீன மலையாள இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்பாளியான பஷீர், இந்திய இலக்கியத்தை உலக மேடைக்கு கொண்டு சென்றவர். எளிமையான வார்த்தைகள், மிகைப்படுத்தல்கள் இல்லாத நடை, இயல்பு வாழ்க்கையோடுப் பின்னிப் பிணைந்திருக்கும் கதாபாத்திரங்கள் இவற்றால் அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் படைப்பாளியாகப் புகழ் பெற்றிருந்தார். வெளிப்படையான நையாண்டியும், சுயஎள்ளலும் அவரது எழுத்துக்கே உரியது. அவர் நாவல்களும், சிறுகதைகளும் எழுதியுள்ளார்.

1வாழ்க்கைக் குறிப்பு

1.1 பிறப்பு, இளமை

1908 -ம் ஆண்டு ஜனவரி 19-ம் நாள் கேரளாவில் உள்ள வைக்கம் தாலுகாவில் 'தலையோலப்பரம்பில்' ஆறு பிள்ளைகள் பிறந்த ஒரு குடும்பத்தில் மூத்த பிள்ளையாகப் பஷீர்பிறந்தார்.

அவருடைய தந்தையார் பெயர் காயி அப்துல் ரகுமான். அவருடைய தாயார் பெயர் குஞ்ஞாச்சுமா. அதே ஊரில் மலையாளப் பள்ளியில் ஆரம்பக்கல்வியும் பின்னர் வைக்கம் ஆங்கிலப் பள்ளியிலும் கற்றார். காந்திஜியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். மலபாருக்குச் சென்று இந்திய தேசியக் காங்கிரசில் சேர்ந்தார். 1930-ல் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டார். புரட்சி அமைப்புகளின் கொள்கைகளைப் பரப்பவே உஜ்ஜீவனம் என்ற வார இதழைத் தொடங்கி நடத்தினார்.'பிரபா’ என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதினார். இவரது பத்திரிகை தடை செய்யப்பட்டது. இவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதிலிருந்து தப்பிக்கவே இந்தியா முழுவதும் சுற்றித் திரிந்து நாடோடி போலக் கழித்தார். சிறுகதைகளும் நாவல்களும் எழுத ஆரம்பித்தார்.

2பங்களிப்பு

2.1பங்களித்த துறை 1 (எகா: இதழியல்)

2.2பங்களித்த துறை 2 (எகா: நாட்டாரியல்)

2.3பங்களித்த துறை 3 (எகா: சமூக சீர்திருத்தம்)

3விவாதங்கள்

4விருதுகள்

5இலக்கிய முக்கியத்துவம்.

6மரணம் / மறைவு

வைக்கம் முகமது பஷீர், 1994-ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி, தன்னுடைய 86-வது வயதில் மறைந்தார்.

7வாழ்க்கைப் பதிவுகள்

8அவர் பெயரிலான விருதுகள்

9மற்றவை

10படைப்புகள்

10.1நாவல்கள்

  • 1. காதல் கடிதம்
  • 2. பால்யகால சகி
  • 3. சப்தங்கள்
  • 4. எங்க உப்புப்பாவுக்கொரு ஆனையிருந்தது
  • 5. மரணத்தின் நிழலில்
  • 6. வாழ்க்கையின் நிழற் சுவடுகள்
  • 7. பாத்துமாவின் ஆடு
  • 8. மதிலுகள்
  • 9. தாரா ஸ்பெஷல்ஸ்
  • 10. மாந்திரிகப் பூனை
  • 11. காதலின் தினங்கள்
  • 12.காதல் கரப்பான்

10.2சிறுகதைகள்

  • ஜென்ம தினம்
  • நினைவுக் குறிப்பு
  • மூடர்களின் சொர்க்கம்
  • ஏழைகளின் விலைமாது
  • உலகப் புகழ்பெற்ற மூக்கு
  • பசி
  • ஒரு பகவத் கீதையும் சில முலைகளும்
  • ஆனை முடி
  • சிரிக்கும் மரப்பாச்சி
  • பூமியின் வாரிசுதாரர்கள்
  • சிங்கிடி முங்கன்
  • யா இலாஹி



10.3நாடகங்கள்

10.4சிறார் நூல்கள்

10.5வாழ்க்கை வரலாறுகள், நினைவுக் குறிப்புகள்

10.6மொழிபெயர்ப்புகள்

10.7மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

10.8பிற வடிவங்களில்

11உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.