வே. இராமலிங்கம்
From Tamil Wiki
வே. இராமலிங்கம் (19ம் நூற்றாண்டு) இலங்கை தமிழறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். கோட்டுப்புராணம் முக்கியமான நூலாகும்.
வாழ்க்கைக் குறிப்பு
இராமலிங்கம் இலங்கையின் யாழ்ப்பாண உடுப்பிட்டியில் வேலுப்பிள்ளைக்கு மகனாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
நீதிமன்றங்களுக்குச் சென்று வழக்காடுவோர் நிலையயும் அல்லல்களையும், வழக்கறிஞர்களின் தந்திரங்களையும் பற்றிய நூலாக “கோட்டுப் புராணம்” நூலை எழுதினார். இதன் ஒரு சில பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது.
நூல்கள் பட்டியல்
- கோட்டுப் புராணம்
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
- சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
- http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2
- https://noolaham.net/project/10/963/963.html