under review

வா. குமாரசுவாமிப்பிள்ளை

From Tamil Wiki
Revision as of 17:19, 18 October 2022 by Ramya (talk | contribs) (Created page with "வா. குமாரசுவாமிப்பிள்ளை (ஜூலை 4, 1875-1936) ஈழத்து தமிழ்ப்புலவர், வழக்கறிஞர். யாழ்ப்பாணத்திலுள்ள பழைய ஏட்டுப் பிரதிகளை பதிப்பித்தார். == வாழ்க்கைக் குறிப்பு == வா. குமாரசுவாமிப்பிள்ளை இ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வா. குமாரசுவாமிப்பிள்ளை (ஜூலை 4, 1875-1936) ஈழத்து தமிழ்ப்புலவர், வழக்கறிஞர். யாழ்ப்பாணத்திலுள்ள பழைய ஏட்டுப் பிரதிகளை பதிப்பித்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

வா. குமாரசுவாமிப்பிள்ளை இலங்கை யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் டாக்டர் வ. வன்னித்தம்பி, தெய்வானைப்பிள்ளை இணையருக்கு மகனாக 1875-ல் பிறந்தார். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் மத்திய கல்வி பயின்றார். கல்கத்தாவில் உயர்தரக் கல்வி பயின்றார். 1896-ல் கலைமாணித் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.சட்டக்கல்வி பயின்றார்.

தனிவாழ்க்கை

1900 முதல் சிவில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1908-ல் சு. வயிரவப் பிள்ளையின் மகளான செல்லம் அவர்களைத் திருமணம் செய்துகொண்டார். இவருடைய மூத்த புதல்வரான வன்னியசிங்கமவர் கள் தமிழரசுக் கட்சியிலிருந்து நாட்டுக்காகப் பல பணிகள் புரிந்தவர்; இளைய புதல்வரான திரு. பாலசிங்கம் அரசாங்கத்தில் உயர்நிலைப் பதவியில் அமர்ந்திருக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

வா. குமாரசுவாமிப்பிள்ளை யாழ்ப்பாணத்திலுள்ள பழைய ஏட்டுப் பிரதிகளைத் தேடி, ஆராய்ச்சி செய்து, பிழைகள் திருத்தி அச்சேற்றினார். "தண்டிகைக் கனகராயன் பள்ளு" "கதிரைமலைப் பள்ளு ஆகிய இரு நூல்களையும் ஆராய்ந்து, ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் அச்சேற்றினார்.

மறைவு

வா. குமாரசுவாமிப்பிள்ளை 1936-ல் காலமானார்.

நூல் பட்டியல்

பதிப்பித்தவை
  • தண்டிகைக் கனகராயன் பள்ளு
  • கதிரைமலைப் பள்ளு

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.