standardised

வாஸந்தி: Difference between revisions

From Tamil Wiki
(category & stage updated)
(Moved to Standardised)
Line 1: Line 1:
[[File:Vaasanthi.jpg|thumb|வாசந்தி]]
[[File:Vaasanthi.jpg|thumb|வாசந்தி]]
வாஸந்தி ( வாசந்தி சுந்தரம்) (1941) எழுத்தாளர், கட்டுரையளர், இதழாளர் மற்றும் அரசியல் ஆய்வாளர். தமிழில் பொதுவாசிப்புக்குரிய நாவல்களை எழுதியிருக்கிறார்.சமகால அரசியல் நிகழ்வுகளை ஒட்டி எழுதிய நாவல்கள் புகழ்பெற்றவை. இந்தியா டுடே தமிழ் பதிப்பின் ஆசிரியராக பத்து ஆண்டுகள் பணியாற்றினார்.  
வாஸந்தி (வாசந்தி சுந்தரம்) (ஜூன் 26, 1941) எழுத்தாளர், கட்டுரையளர், இதழாளர் மற்றும் அரசியல் ஆய்வாளர். தமிழில் பொதுவாசிப்புக்குரிய நாவல்களை எழுதியிருக்கிறார். சமகால அரசியல் நிகழ்வுகளை ஒட்டி எழுதிய நாவல்கள் புகழ்பெற்றவை. இந்தியா டுடே தமிழ் பதிப்பின் ஆசிரியராக பத்து ஆண்டுகள் பணியாற்றினார்.  


==பிறப்பு,கல்வி==
==பிறப்பு,கல்வி==
பங்கஜம் என்ற இயற்பெயர் கொண்ட வாசந்தி கர்நாடகாவில் உள்ள தும்கூரில் 26 -ஜூன் 1941 அன்று  பிறந்தார்.மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் மற்றும் வரலாறு துறைகளில் பட்டம் பெற்றவர். நார்வே நாட்டின் ஆஸ்லோ பல்கலைக்கழகத்தில் முதுகலைச் சான்றிதழ் பெற்றவர்.
பங்கஜம் என்ற இயற்பெயர் கொண்ட வாசந்தி கர்நாடகாவில் உள்ள தும்கூரில் ஜூன் 26, 1941 அன்று  பிறந்தார். மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் மற்றும் வரலாறு துறைகளில் பட்டம் பெற்றவர். நார்வே நாட்டின் ஆஸ்லோ பல்கலைக்கழகத்தில் முதுகலைச் சான்றிதழ் பெற்றவர்.
    
    
==தனிவாழ்க்கை==
==தனிவாழ்க்கை==
கணவர் பெயர் சுந்தரம். இரு மகன்கள்
கணவர் பெயர் சுந்தரம். இரு மகன்கள்.


==இலக்கிய வாழ்க்கை==
==இலக்கிய வாழ்க்கை==
Line 26: Line 26:
வாசந்தியின் நாவல்கள் பொதுவாசிப்புக்குரியவை, பிரபல இதழ்களில் தொடர்கதைகளாக வெளிவந்தவை. பொதுவாசகர்கள் விரும்பும் காதல், மர்மம், தொடர்நிகழ்வுகள் ஆகியவை கொண்டவை. பெண்களின் உணர்வுகளை பதிவுசெய்யும் ஜெய்ப்பூர் நெக்லஸ் போன்ற பல நாவல்களை எழுதியிருக்கிறார். தமிழகத்தில் படித்து வேலைக்குச்செல்லும் பெண்களின் ஒரு தலைமுறை உருவாகி வந்தபோது பெண்விடுதலை சார்ந்த கருத்துக்களை, நவீன உலகத்திற்குரிய புதிய ஒழுக்கமதிப்பீடுகளை பெண்களுக்கு கொண்டுசென்ற பெண் எழுத்தாளர்களில் வாசந்தி முக்கியமானவர். ஆகவே ஒரு காலட்டத்தின் முன்னணி அடையாளமாக இருந்தார்
வாசந்தியின் நாவல்கள் பொதுவாசிப்புக்குரியவை, பிரபல இதழ்களில் தொடர்கதைகளாக வெளிவந்தவை. பொதுவாசகர்கள் விரும்பும் காதல், மர்மம், தொடர்நிகழ்வுகள் ஆகியவை கொண்டவை. பெண்களின் உணர்வுகளை பதிவுசெய்யும் ஜெய்ப்பூர் நெக்லஸ் போன்ற பல நாவல்களை எழுதியிருக்கிறார். தமிழகத்தில் படித்து வேலைக்குச்செல்லும் பெண்களின் ஒரு தலைமுறை உருவாகி வந்தபோது பெண்விடுதலை சார்ந்த கருத்துக்களை, நவீன உலகத்திற்குரிய புதிய ஒழுக்கமதிப்பீடுகளை பெண்களுக்கு கொண்டுசென்ற பெண் எழுத்தாளர்களில் வாசந்தி முக்கியமானவர். ஆகவே ஒரு காலட்டத்தின் முன்னணி அடையாளமாக இருந்தார்


அவருடைய சிலநாவல்கள் சமகால வரலாற்றை களமாகக் கொண்டவை, அப்பிரச்சினைகளை அரசியல் நிலைபாடற்ற பார்வையுடன் அணுகுபவை.. பஞ்சாப் காலிஸ்தான் கிளர்ச்சி, இலங்கை இனப்போராட்டம் என வெவ்வேறு களங்களில் அமைந்த கதைகள் நிதானமாக இருபக்கமும் பார்க்கும் அணுகுமுறை கொண்டவை. எல்லா குரல்களையும் பதிவுசெய்யும் தன்மைகொண்டவை. ஆனால் வரலாற்றை ஆராயும் தத்துவநோக்கு அற்றவை. ஆகவே இதழியலாளரின் தகவல்பதிவு பார்வை கொண்டவை. வரலாற்றுக் களங்களில் கதைகளை அமைத்ததிலும் பெண்ணியப் பார்வையை முன்வைத்ததிலும் வாசந்தி எழுத்தாளர் [[ராஜம் கிருஷ்ணன்]] -ன் வழித்தோன்றல்.
அவருடைய சிலநாவல்கள் சமகால வரலாற்றை களமாகக் கொண்டவை, அப்பிரச்சினைகளை அரசியல் நிலைபாடற்ற பார்வையுடன் அணுகுபவை.. பஞ்சாப் காலிஸ்தான் கிளர்ச்சி, இலங்கை இனப்போராட்டம் என வெவ்வேறு களங்களில் அமைந்த கதைகள் நிதானமாக இருபக்கமும் பார்க்கும் அணுகுமுறை கொண்டவை. எல்லா குரல்களையும் பதிவுசெய்யும் தன்மைகொண்டவை. ஆனால் வரலாற்றை ஆராயும் தத்துவநோக்கு அற்றவை. ஆகவே இதழியலாளரின் தகவல்பதிவு பார்வை கொண்டவை. வரலாற்றுக் களங்களில் கதைகளை அமைத்ததிலும் பெண்ணியப் பார்வையை முன்வைத்ததிலும் வாசந்தி எழுத்தாளர் [[ராஜம் கிருஷ்ணன்]]-ன் வழித்தோன்றல்.
 
== விருதுகள் ==
 
*2005 - தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் (வாஸந்தி சிறுகதைகள்)
* மொழியாக்கத்துக்கான பஞ்சாப் சாகித்திய அகாதெமி (மௌனப்புயல்)
* மொழியாக்கத்துக்கான உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது ( ஆகாச வீடுகள்)


== நூல்கள் ==
== நூல்கள் ==
Line 116: Line 122:


====== மொழியாக்கம் ======
====== மொழியாக்கம் ======
*‘The Guilty and Other Stories ( Indialog)
*The Guilty and Other Stories (Indialog)
*A Home in the Sky  
*A Home in the Sky  
*At the Cusp of Ages
*At the Cusp of Ages
Line 126: Line 132:
*A Home in the Sky  
*A Home in the Sky  
*The Lone Empress: A Portrait of Jayalalithaa
*The Lone Empress: A Portrait of Jayalalithaa
* 2005 தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் (வாஸந்தி சிறுகதைகள் )
* மொழியாக்கத்துக்கான பஞ்சாப் சாகித்திய அகாதெமி (மௌனப்புயல்)
* மொழியாக்கத்துக்கான உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது ( ஆகாச வீடுகள்)
==இணைப்புகள்==
==இணைப்புகள்==
* http://tamilonline.com/thendral/article.aspx?aid=4640
* http://tamilonline.com/thendral/article.aspx?aid=4640
*[https://siliconshelf.wordpress.com/2013/05/03/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/ சிலிகான் ஷெல்ஃப்] நிற்கநிழல்வேண்டும்
*[https://siliconshelf.wordpress.com/2013/05/03/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/ வாசந்தியின் “நிற்க நிழல் வேண்டும்” – சிலிகான் ஷெல்ஃப் (siliconshelf.wordpress.com)]  
*[https://siliconshelf.wordpress.com/tag/vaasanthi/ சிலிக்கான் ஷெல்ஃ கதைகள் பற்றி]
*[https://siliconshelf.wordpress.com/tag/vaasanthi/ சிலிக்கான் ஷெல்ஃ கதைகள் பற்றி]
*[https://patrikai.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/ அம்மா தடைசெய்யப்பட்ட புத்தகம் அல்ல- வாசந்தி]
*[https://patrikai.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/ அம்மா தடைசெய்யப்பட்ட புத்தகம் அல்ல - வாசந்தி]
*https://thamizhilakkiyaladywriters.blogspot.com/2020/04/21.html
*[https://thamizhilakkiyaladywriters.blogspot.com/2020/04/21.html தமிழ் இலக்கியம் வளர்த்த பெண் எழுத்தாளர்கள்: வாசந்தி (thamizhilakkiyaladywriters.blogspot.com)]
*[http://ninaivu.blogspot.com/2009/01/blog-post_03.html வே.சபாநாயகம் வாசந்தி கட்டுரைகள் பற்றி]
*[http://ninaivu.blogspot.com/2009/01/blog-post_03.html வே.சபாநாயகம் வாசந்தி கட்டுரைகள் பற்றி]
*Vaasanthi". The Times of India. 27 October 2016. Retrieved 1 August 2020.
*”Vaasanthi". The Times of India. 27 October 2016. Retrieved 1 August 2020.
* "Meet Tamil writer Vaasanthi, the first to pen novel on Punjab of 1984". 2 July 2017.
* "Meet Tamil writer Vaasanthi, the first to pen novel on Punjab of 1984". 2 July 2017.
* "Jayalalithaa had a knack of creating fear: Amma's biographer Vaasanthi". 19 January 2017.
* "Jayalalithaa had a knack of creating fear: Amma's biographer Vaasanthi". 19 January 2017.
Line 145: Line 146:
* "Karunanidhi a visionary and a reformist pushing for social justice: Biographer Vasanthi". outlookindia.com. Retrieved 30 December 2021.
* "Karunanidhi a visionary and a reformist pushing for social justice: Biographer Vasanthi". outlookindia.com. Retrieved 30 December 2021.
* Karunanidhi: The Definitive Biography; Vaasanthi; Juggernaut; Non-fiction;  
* Karunanidhi: The Definitive Biography; Vaasanthi; Juggernaut; Non-fiction;  
* https://youtu.be/MGy4EWsvzuY
* [https://youtu.be/MGy4EWsvzuY Novelist & Journalist Vaasanthi Special Interview - YouTube]
* https://youtu.be/66YlyVnDSE8
* [https://youtu.be/66YlyVnDSE8 The Hindu Lit for Life 2018: Women of Steel: Indira Gandhi and J Jayalalitha - YouTube]
* http://old.thinnai.com/?p=604042910
* [http://old.thinnai.com/?p=604042910 வாஷிங்டன் சந்திப்பு: எழுத்தாளர் வாஸந்தி | திண்ணை (thinnai.com)]
 
{{Standardised}}
 
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 18:15, 2 April 2022

வாசந்தி

வாஸந்தி (வாசந்தி சுந்தரம்) (ஜூன் 26, 1941) எழுத்தாளர், கட்டுரையளர், இதழாளர் மற்றும் அரசியல் ஆய்வாளர். தமிழில் பொதுவாசிப்புக்குரிய நாவல்களை எழுதியிருக்கிறார். சமகால அரசியல் நிகழ்வுகளை ஒட்டி எழுதிய நாவல்கள் புகழ்பெற்றவை. இந்தியா டுடே தமிழ் பதிப்பின் ஆசிரியராக பத்து ஆண்டுகள் பணியாற்றினார்.

பிறப்பு,கல்வி

பங்கஜம் என்ற இயற்பெயர் கொண்ட வாசந்தி கர்நாடகாவில் உள்ள தும்கூரில் ஜூன் 26, 1941 அன்று பிறந்தார். மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் மற்றும் வரலாறு துறைகளில் பட்டம் பெற்றவர். நார்வே நாட்டின் ஆஸ்லோ பல்கலைக்கழகத்தில் முதுகலைச் சான்றிதழ் பெற்றவர்.

தனிவாழ்க்கை

கணவர் பெயர் சுந்தரம். இரு மகன்கள்.

இலக்கிய வாழ்க்கை

வாசந்தி

கல்லூரிக் காலத்தில் இவர் எழுதிய சிறுகதை பிரபல தமிழ் வார பத்திரிக்கையில் வெளியானது. அப்போது குடும்பத்தினர் அளித்த ஊக்குவிப்பு இவரை இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்தது.பெங்களூரில் வசித்தபோது, ஜேன் ஆஸ்டன், ஜெயகாந்தன், அலெக்ஸாண்டர் டூமாஸ், சார்லஸ் டிக்கன்ஸ் எழுத்துகளை தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தார். இவருடைய ஆரம்ப கால நாவல்கள் அனைத்துமே பெண்களை மையப்படுத்தி எழுதப்பட்டவை. டெல்லிக்கு இடம் பெயர்ந்த பிறகு அரசியல் நாவல்கள் எழுத ஆரம்பித்தார்.

இவரது ஆங்கில கட்டுரைகள் த ஹிந்து, டெக்கான் ஹெரால்ட்,டெஹல்கா, ஸ்வாகத் மீடியா, ட்ரேன்ஸ் ஆசியா, இந்தியா டுடே உள்ளிட்ட பல பிரபல பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன.இவரது நாவல்கள் பெண்களின் பிரச்சினைகள், இனப் பிரச்சினைகள், அரசியல் நாவல்கள் - பஞ்சாப் பிரச்சினை, இலங்கைத் தமிழர்கள் மற்றும் பிஜி தீவுகளில் உள்ள இந்தியர்கள் என பல்வேறு தலைப்புக்களை பேசுபவை.

மனு பண்டாரி, வாசந்தி, மனோரமா
வாசந்தியின் சுயசரிதை

கலாச்சார பரிவர்த்தனை திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக, குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தார். இலங்கை பிரதமராக இருந்த சந்திரிகா குமாரதுங்க’வுடனான நேர்காணலுக்காக கொழும்புவிலிருந்து அப்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஜாஃப்னாவுக்கு சென்றார்

பெண் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை பற்றி எழுதிய புத்தகத்தை (Cut-outs, Caste and Cine Stars) பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டது. முன்னால் முதல்வர்கள் ஜெ. ஜெயலலிதா மற்றும் மு. கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார். இவரது பத்திரிகை கட்டுரைகள் நான்கு தொகுப்புக்களாகவும், பயணக் கட்டுரைகள் ஒரு தொகுப்பாகவும் வெளிவந்திருக்கின்றன.

இவரது பல படைப்புகள் மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், நார்வீஜியன், செக் மற்றும் டச் மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இரண்டு நாவல்கள் மலையாள சினிமாவாகியிருக்கின்றன.தனது இலக்கிய ஆக்கங்களில் செல்வாக்கு செலுத்தியவர்களாக சேக்ஸ்பியரையும், கம்பனையும் குறிப்பிடுகிறார்.

வாசந்தி தமிழின் புகழ்பெற்ற வார இதழ்களில் தொடர்ச்சியாக தொடர்கதைகளாக தன் நாவல்களை வெளியிட்டார். இந்துமதி, சிவசங்கரி, வாசந்தி மூவரும் எண்பதுகளில் தமிழின் மிக விரும்பப்பட்ட எழுத்தாளர்களாக இருந்தனர்.

இலக்கிய இடம்

வாசந்தியின் நாவல்கள் பொதுவாசிப்புக்குரியவை, பிரபல இதழ்களில் தொடர்கதைகளாக வெளிவந்தவை. பொதுவாசகர்கள் விரும்பும் காதல், மர்மம், தொடர்நிகழ்வுகள் ஆகியவை கொண்டவை. பெண்களின் உணர்வுகளை பதிவுசெய்யும் ஜெய்ப்பூர் நெக்லஸ் போன்ற பல நாவல்களை எழுதியிருக்கிறார். தமிழகத்தில் படித்து வேலைக்குச்செல்லும் பெண்களின் ஒரு தலைமுறை உருவாகி வந்தபோது பெண்விடுதலை சார்ந்த கருத்துக்களை, நவீன உலகத்திற்குரிய புதிய ஒழுக்கமதிப்பீடுகளை பெண்களுக்கு கொண்டுசென்ற பெண் எழுத்தாளர்களில் வாசந்தி முக்கியமானவர். ஆகவே ஒரு காலட்டத்தின் முன்னணி அடையாளமாக இருந்தார்

அவருடைய சிலநாவல்கள் சமகால வரலாற்றை களமாகக் கொண்டவை, அப்பிரச்சினைகளை அரசியல் நிலைபாடற்ற பார்வையுடன் அணுகுபவை.. பஞ்சாப் காலிஸ்தான் கிளர்ச்சி, இலங்கை இனப்போராட்டம் என வெவ்வேறு களங்களில் அமைந்த கதைகள் நிதானமாக இருபக்கமும் பார்க்கும் அணுகுமுறை கொண்டவை. எல்லா குரல்களையும் பதிவுசெய்யும் தன்மைகொண்டவை. ஆனால் வரலாற்றை ஆராயும் தத்துவநோக்கு அற்றவை. ஆகவே இதழியலாளரின் தகவல்பதிவு பார்வை கொண்டவை. வரலாற்றுக் களங்களில் கதைகளை அமைத்ததிலும் பெண்ணியப் பார்வையை முன்வைத்ததிலும் வாசந்தி எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்-ன் வழித்தோன்றல்.

விருதுகள்

  • 2005 - தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் (வாஸந்தி சிறுகதைகள்)
  • மொழியாக்கத்துக்கான பஞ்சாப் சாகித்திய அகாதெமி (மௌனப்புயல்)
  • மொழியாக்கத்துக்கான உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது ( ஆகாச வீடுகள்)

நூல்கள்

நாவல்கள்
  • கண்ணுக்குத் தெரியாத உலகங்கள்
  • ஸ்ருதி பேதங்கள்
  • வீடுவரை உறவு
  • யாதுமாகி
  • ஒரு சங்கமத்தை தேடி
  • நான் புத்தனில்லை
  • அம்மணி
  • கடை பொம்மைகள்
  • நிஜங்கள் நிழலாகும்போது
  • தீக்குள் விரலை வைத்தால்
  • பாலும் பாவையும்
  • ஜனனம்
  • வேர் பிடிக்கும் மண்
  • புதிய வானம்
  • ஆகாச வீடுகள்
  • ஆர்த்திக்கு முகம் சிவந்தது
  • அக்னி குஞ்சு
  • எல்லைகளின் விளிம்பில்
  • இடைவெளிகள் தொடர்கின்றன
  • இன்றே நேசியுங்கள்
  • காதலெனும் வானவில்
  • மீண்டும் நாளை வரும்
  • மூங்கில் பூக்கள்
  • நள்ளிரவு சூரியர்கள்
  • நழுவும் நேரங்கள்
  • நிஜங்கள் நிழலாகும் பொழுது
  • நிற்க நிழல் வேண்டும்
  • சந்தியா
  • சந்தன காடுகள்
  • சோப்புக் கட்டிகள்
  • வடிகால்
  • வல்லினமே மெல்லினமே
  • வீடு வரை உறவு
  • வேர்களை தேடி
  • யுகசந்தி
  • ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன
  • வசந்தம் கசந்தது
  • முத்துக்கள் பத்து
  • எட்டாத கிளைகள்
  • நிழல்கள்
  • சொந்தம் இல்லாத பந்தம்
  • பொய் முகம்
  • சிறகுகள்
  • நிழலாட்டம்
  • கதை கதையாம் காரணமாம்
  • நிஜங்கள்
  • சிந்திக்க ஒரு நொடி
  • ஆசை முகம் மறந்து போச்சே
  • முன்னேறு
  • கரிய மேகங்களில் ஒளிக்கீற்றுகள்
  • கரை சேராத ஓடங்கள்
  • தாகம்
  • மெளனப்புயல்
  • மாற வேண்டிய பாதைகள்
  • ஜெய்பூர் நெக்லஸ்
  • மனிதர்கள் பாதி நேரம் தூங்குகிறார்கள்
  • நிழல் தரும் தருவே
  • புரியாத அர்த்தங்கள்
  • காலம்
  • பறவைகள் பறக்கின்றன
  • வேண்டாத வரம்
  • பாதிப்புகள்
  • அவள் சொன்னது
  • மௌனத்தின் குரல்
  • தெய்வங்கள் எழுக
  • யுகங்கள் மாறும் போது
  • துரத்தும் நினைவுகள்,அழைக்கும் கனவுகள்
  • கதவில்லாத வீடு
  • மீட்சி
  • கடைசி வரை
  • பாதையோரத்து பூக்கள்
  • கிழக்கே ஓர் உலகம்
  • துணைவி
  • சிறை
  • வாக்கு மூலம்
  • விட்டு விடுதலையாகி
  • பார்வைகளும் பதிவுகளும்
  • காரணமில்லா காரியங்கள்
  • பொய்யில் பூத்த நிஜம்
  • நகரங்கள், மனிதர்கள், பண்பாடுகள்
  • இந்தியா என்னும் ஐதீகம்
  • வேர்பிடிக்கும் மண் ( சிறுகதைகள்)
  • நினைவில் பதிந்த சுவடுகள் ( தன்வரலாறு )
மொழியாக்கம்
  • The Guilty and Other Stories (Indialog)
  • A Home in the Sky
  • At the Cusp of Ages
ஆங்கிலம்
  • Amma: Jayalalithaa's Journey from Movie Star to Political Queen
  • Cut-outs, Caste and Cine Stars
  • Karunanidhi: The Definitive Biography
  • A Home in the Sky
  • The Lone Empress: A Portrait of Jayalalithaa

இணைப்புகள்


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.