வல்லிக்கண்ணன்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "This is a stub page. You can add content to this {{stub page}} Category:Tamil Content")
 
(corrections)
Line 1: Line 1:
This is a stub page. You can add content to this
This page is being created by Ka. Siva


{{stub page}}
{{stub page}}
வல்லிக்கண்ணன், சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர். பல இலக்கிய இதழ்களின் ஆசிரியராக செயல்புரிந்துள்ளார்.
== '''பிறப்பு''' ==
ரா.சு. கிருஷ்ணசாமி என்ற இயற்பெயர் கொண்ட வல்லிக்கண்ணனின் சொந்த ஊர் நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம். என்றாலும், அவர் பிறந்தது [[Tel:12111920|12.11.1920]] அன்று நாங்குநேரி அருகே உள்ள திசையன்விளை என்ற ஊரில்தான். வல்லிக்கண்ணனின் தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள்.  
== '''தனி வாழ்க்கை''' ==
வல்லிக்கண்ணின்  தந்தை அரசுப் பணியில் இருந்தார். பத்தாவது வயதில் தந்தையை இழந்ததால் வல்லிக்கண்ணன் பள்ளிக்கல்வி மட்டுமே படித்தார். பரமக்குடி வேளாண்மை அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றினார். இலக்கியத்தின் மேல் கொண்ட விருப்பத்தினால் அரசுப்பணியில் இருந்து விலகினார். தன் சொந்த ஊர் பெயரின் ஒரு பகுதியான  வல்லியையும், தன் பெயரிலுள்ள கிருஷ்ணனின் இன்னொரு பெயரான கண்ணனையும் இணைத்து "வல்லிக்கண்ணன்" என்ற புனைப்பெயரோடு முழுநேர இலக்கியப் பணிக்குள் நுழைந்தார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.
== '''இலக்கியப்பணி''' ==
முதலில்  புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த ‘திருமகள்’ பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தார். பின்னர், கோவையிலிருந்து வெளிவந்த ‘சினிமா உலகம்’, சென்னையில் ‘நவசக்தி’, துறையூரில் ‘கிராம ஊழியன்’ முதலிய பத்திரிகைகளில் பணியாற்றிவிட்டு சென்னைக்கு வந்தார். ‘ஹனுமன்’ பத்திரிகையில் சிறிது காலம் பணியாற்றிய பின், 1952 முதல் வணிகப் பத்திரிகைகளின் ஆதரவு இல்லாமல் சுதந்திர எழுத்தாளராகத் திகழ்ந்தார்.
பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன் ஆகியவர்களை வல்லிக்கண்ணன் தன் முன்னோடிகளாகக் கொண்டவர்.   பாரதிதாசனைப் பற்றி முதலில் விமர்சன நூல் எழுதியவர் வல்லிக்கண்ணன்தான். வல்லிக்கண்ணன் ஒரு பன்முக எழுத்தாளர். சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை, நாடகம், திரைப்படம், வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என்று பல்துறையிலும் நூல்கள் எழுதியுள்ளார்.
== '''திரைப்படம்''' ==
‘லைலா மஜ்னு’ திரைப்படத்தில் சில காட்சிகளுக்கு வசனம் எழுதியுள்ளார்.
== '''மதிப்பீடு''' ==
இலக்கியத்திற்காக அரசுப் பணியிலிருந்து விலகி, திருமணம் செய்து கொள்ளாமல் முழு நேர எழுத்துப் பணியில் இயங்கியது இலக்கியத்திற்குள் நுழைபவர்களுக்கு ஓர் ஊக்கத்தை அளிப்பதாகும். இவர் எழுதிய "சரஸ்வதி காலம்", "தமிழ்ப்புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்" மற்றும் "தமிழில் சிறு பத்திரிக்கைகள்" ஆகிய நூல்கள் அவர்கால இலக்கிய நிகழ்வுகளைக் கூறும் முக்கியமான நூல்களாகும்.
“வல்லிக்கண்ணனுக்கு இப்போது வயது எண்பது ஆகிறது. அவரது இலக்கிய வாழ்க்கை வணங்கத் தக்கதும், வழிபடத் தக்கதும் ஆகும். அவரைச் சுற்றி வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நேரினும் அந்த மாற்றங்களை, அறிவாலும் சிந்தனையாலும் ஆக்கபூர்வமாய் வெளியிடும் திறனாலும் தவிர, தன் அளவில் எத்தகைய பாதிப்புகளுக்கும் ஆளாகாத ஓர் ஆத்ம யோகி அவர்" என்று   வல்லிக்கண்ணனுக்கு 80 வயதானபோது வெளியிடப்பட்ட மலரில் ஜெயகாந்தன் கூறியுள்ளார்.
== '''மறைவு''' ==
9 நவம்பர் 2006 -இல் தன் 85- வது வயதில் வல்லிக்கண்ணன் மறைந்தார்.
== '''விருது''' ==
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ கட்டுரை நூல் 1978-க்கான சாகித்திய அகாடமி விருதைப் பெற்றது.
"''வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்"'' எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002- ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதை நூல் பரிசைப் பெற்றது.
== '''நூல்கள்''' ==
=== '''அ) கவிதை''' ===
1. அமர வேதனை - 1974
=== '''ஆ) சிறுகதை''' ===
1. கல்யாணி முதலிய கதைகள்-1944
2. நாட்டியக்காரி-1946
3. ஓடிப் போனவள் கதை (சொக்கலிங்கம்)-1946
4. மத்தாப்பு சுந்தரி-1948
5. வல்லிக்கண்ணன் கதைகள்-1954
6. ஆண்சிங்கம்-1964
7. வாழ விரும்பியவன்-1975
8. அருமையான துணை-1991
9. வல்லிக்கண்ணன் கதைகள் (வேறு தொகுப்பு)-1991
10. மனிதர்கள்-1991
11. சுதந்திரப் பறவைகள்-1994
12. பெரிய மனுஷி (பால புத்தக வரிசை) (பல மொழிகளில்)-1996
13. வல்லிக்கண்ணன் கதைகள் (வேறு + 1 கதைகள்)-2000
14. தோழி நல்ல தோழி தான்-2000
15. வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்-2002
16. புண்ணியம் ஆம் பாவம் போம் சிறுகதைகள்-2002
17. வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்-2003
=== '''இ) புதினம்''' ===
1. குஞ்சாலாடு (நையாண்டி பாரதி)- 1946
2. ராதை சிரித்தாள்-1948
3. ஒய்யாரி-1947
4. அவள் ஒரு எக்ஸ்ட்ரா-1949
5. அத்தை மகள்-1950
6. முத்தம்-1951
7. செவ்வானம் (கோரநாதன்)-1951
8. குமாரி செல்வா-1951
9. சகுந்தலா-1957
10. விடிவெள்ளி-1962
11. அன்னக்கிளி-1962
12. வசந்தம் மலர்ந்தது-1965
13. வீடும் வெளியும்-1967
14. ஒரு வீட்டின் கதை-1979
15. நினைவுச்சரம்-1980
16. அலைமோதும்
கடலோரத்தில்-1980
17. இருட்டு ராஜா-1985
18. மன்னிக்கத் தெரியாதவர் - 1991
19. துணிந்தவன் - 2000
=== '''ஈ) நாடகம்''' ===
1. நாசகாரக் கும்பல் (நையாண்டி பாரதி)-1948
2. விடியுமா-1948
=== '''உ) கட்டுரைகள்''' ===
1. உவமைநயம்-1945
2. கோயில் களை மூடுங்கள் (கோரநாதன்)-1946
3. ஈட்டிமுனை (கோரநாதன்)-1946
4. அடியுங்கள் சாவுமணி (மிவாஸ்கி)-1947
5. சினிமாவில் கடவுள்கள் (கோரநாதன்-1947)
6. கொடு கல்தா (கோரநாதன்)-1948
7. எப்படி உருப்படும்? (கோரநாதன்)-1948
8. கேட்பாரில்லை (கோரநாதன்)- 1949
9. அறிவின் கேள்வி (கோரநாதன்)- 1949
10. விவாகரத்து தேவைதானா?-1950
11. நல்ல மனைவியை அடைவது எப்படி?-1950
12. கல்யாணத்துக்குப் பிறகு காதல் புரியலாமா?-1950
13. கல்யாணம் இன்பம் கொடுப்பதா? துன்பத்தைக் கெடுப்பதா?-1950
14. முத்துக்குளிப்பு-1965
15. பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை-1981
16. சரஸ்வதி காலம்-1986
17. எழுத்தாளர்கள் பத்திரிகைகள் அன்றும் இன்றும்-1986
18. புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை)-1987
19. வாசகர்கள் விமர்சகர்கள்-1987
20. மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்-1987
21. வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்-1988
22. தமிழில் சிறு பத்திரிகைகள்-1991
23. ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்- 1995
24. தீபம் யுகம்-1999
25. எழுத்து சி.சு. செல்லப்பா-2002
26. தமிழ் வளர்த்த ஞானியார் அடிகள்-2003
27. தமிழில் சிறுபத்திரிகைகள்-2004
28. வல்லிக்கண்ணன் கட்டுரைகள் -மித்ர-2004
29. எழுத்துலக நட்சத்திரம் (தீபம்) நா. பார்த்த சாரதி - 2005
=== '''ஊ) திறனாய்வு / ஆராய்ச்சி''' ===
1. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 1977
=== '''எ) மொழி பெயர்ப்பு''' ===
1. டால்ஸ்டாய்-1956
2. கடலில் நடந்தது (கார்க்கி கட்டுரைகள்)-1956
3. சின்னஞ்சிறுபெண் (கார்க்கி கட்டுரைகள்)-1957
4. கார்க்கி கட்டுரைகள்-1957
5. தாத்தாவும் பேரனும் -1959
6. ராகுல் சாங்கிருத்யாயன்-1986
7. ஆர் மேனியன் சிறுகதைகள் 1991
8. சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் 1995
9. நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா 2005
=== '''ஏ) உரை நூல்கள்''' ===
=== '''ஐ) பிற''' ===
1. நம் நேரு-1954
2. விஜயலஷ்மி (வரலாறு)-1954
3. காலத்தின் குரல் (60 கேள்விகளுக்கு பதில்)-1980
4. வல்லிக்கண்ணன் கடிதங்கள்-1999
5. வாழ்க்கைச் சுவடுகள் (தன் வரலாறு)-2001
6. நிலைபெற்ற நினைவுகள்-2005
== '''உசாத்துணை''' ==
புத்தகம் பேசுது இதழ், 16, ஜூலை, 2010
இந்து தமிழ் திசை இணைய இதழ், 13.11.2020
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 15:41, 15 February 2022

This page is being created by Ka. Siva

Template:Stub page




வல்லிக்கண்ணன், சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர். பல இலக்கிய இதழ்களின் ஆசிரியராக செயல்புரிந்துள்ளார்.

பிறப்பு

ரா.சு. கிருஷ்ணசாமி என்ற இயற்பெயர் கொண்ட வல்லிக்கண்ணனின் சொந்த ஊர் நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம். என்றாலும், அவர் பிறந்தது [[1]] அன்று நாங்குநேரி அருகே உள்ள திசையன்விளை என்ற ஊரில்தான். வல்லிக்கண்ணனின் தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள்.  

தனி வாழ்க்கை

வல்லிக்கண்ணின்  தந்தை அரசுப் பணியில் இருந்தார். பத்தாவது வயதில் தந்தையை இழந்ததால் வல்லிக்கண்ணன் பள்ளிக்கல்வி மட்டுமே படித்தார். பரமக்குடி வேளாண்மை அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றினார். இலக்கியத்தின் மேல் கொண்ட விருப்பத்தினால் அரசுப்பணியில் இருந்து விலகினார். தன் சொந்த ஊர் பெயரின் ஒரு பகுதியான  வல்லியையும், தன் பெயரிலுள்ள கிருஷ்ணனின் இன்னொரு பெயரான கண்ணனையும் இணைத்து "வல்லிக்கண்ணன்" என்ற புனைப்பெயரோடு முழுநேர இலக்கியப் பணிக்குள் நுழைந்தார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இலக்கியப்பணி

முதலில்  புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த ‘திருமகள்’ பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தார். பின்னர், கோவையிலிருந்து வெளிவந்த ‘சினிமா உலகம்’, சென்னையில் ‘நவசக்தி’, துறையூரில் ‘கிராம ஊழியன்’ முதலிய பத்திரிகைகளில் பணியாற்றிவிட்டு சென்னைக்கு வந்தார். ‘ஹனுமன்’ பத்திரிகையில் சிறிது காலம் பணியாற்றிய பின், 1952 முதல் வணிகப் பத்திரிகைகளின் ஆதரவு இல்லாமல் சுதந்திர எழுத்தாளராகத் திகழ்ந்தார்.

பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன் ஆகியவர்களை வல்லிக்கண்ணன் தன் முன்னோடிகளாகக் கொண்டவர்.   பாரதிதாசனைப் பற்றி முதலில் விமர்சன நூல் எழுதியவர் வல்லிக்கண்ணன்தான். வல்லிக்கண்ணன் ஒரு பன்முக எழுத்தாளர். சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை, நாடகம், திரைப்படம், வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என்று பல்துறையிலும் நூல்கள் எழுதியுள்ளார்.

திரைப்படம்

‘லைலா மஜ்னு’ திரைப்படத்தில் சில காட்சிகளுக்கு வசனம் எழுதியுள்ளார்.

மதிப்பீடு

இலக்கியத்திற்காக அரசுப் பணியிலிருந்து விலகி, திருமணம் செய்து கொள்ளாமல் முழு நேர எழுத்துப் பணியில் இயங்கியது இலக்கியத்திற்குள் நுழைபவர்களுக்கு ஓர் ஊக்கத்தை அளிப்பதாகும். இவர் எழுதிய "சரஸ்வதி காலம்", "தமிழ்ப்புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்" மற்றும் "தமிழில் சிறு பத்திரிக்கைகள்" ஆகிய நூல்கள் அவர்கால இலக்கிய நிகழ்வுகளைக் கூறும் முக்கியமான நூல்களாகும்.

“வல்லிக்கண்ணனுக்கு இப்போது வயது எண்பது ஆகிறது. அவரது இலக்கிய வாழ்க்கை வணங்கத் தக்கதும், வழிபடத் தக்கதும் ஆகும். அவரைச் சுற்றி வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நேரினும் அந்த மாற்றங்களை, அறிவாலும் சிந்தனையாலும் ஆக்கபூர்வமாய் வெளியிடும் திறனாலும் தவிர, தன் அளவில் எத்தகைய பாதிப்புகளுக்கும் ஆளாகாத ஓர் ஆத்ம யோகி அவர்" என்று   வல்லிக்கண்ணனுக்கு 80 வயதானபோது வெளியிடப்பட்ட மலரில் ஜெயகாந்தன் கூறியுள்ளார்.

மறைவு

9 நவம்பர் 2006 -இல் தன் 85- வது வயதில் வல்லிக்கண்ணன் மறைந்தார்.

விருது

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ கட்டுரை நூல் 1978-க்கான சாகித்திய அகாடமி விருதைப் பெற்றது.

"வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002- ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதை நூல் பரிசைப் பெற்றது.

நூல்கள்

அ) கவிதை

1. அமர வேதனை - 1974

ஆ) சிறுகதை

1. கல்யாணி முதலிய கதைகள்-1944

2. நாட்டியக்காரி-1946

3. ஓடிப் போனவள் கதை (சொக்கலிங்கம்)-1946

4. மத்தாப்பு சுந்தரி-1948

5. வல்லிக்கண்ணன் கதைகள்-1954

6. ஆண்சிங்கம்-1964

7. வாழ விரும்பியவன்-1975

8. அருமையான துணை-1991

9. வல்லிக்கண்ணன் கதைகள் (வேறு தொகுப்பு)-1991

10. மனிதர்கள்-1991

11. சுதந்திரப் பறவைகள்-1994

12. பெரிய மனுஷி (பால புத்தக வரிசை) (பல மொழிகளில்)-1996

13. வல்லிக்கண்ணன் கதைகள் (வேறு + 1 கதைகள்)-2000

14. தோழி நல்ல தோழி தான்-2000

15. வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்-2002

16. புண்ணியம் ஆம் பாவம் போம் சிறுகதைகள்-2002

17. வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்-2003

இ) புதினம்

1. குஞ்சாலாடு (நையாண்டி பாரதி)- 1946

2. ராதை சிரித்தாள்-1948

3. ஒய்யாரி-1947

4. அவள் ஒரு எக்ஸ்ட்ரா-1949

5. அத்தை மகள்-1950

6. முத்தம்-1951

7. செவ்வானம் (கோரநாதன்)-1951

8. குமாரி செல்வா-1951

9. சகுந்தலா-1957

10. விடிவெள்ளி-1962

11. அன்னக்கிளி-1962

12. வசந்தம் மலர்ந்தது-1965

13. வீடும் வெளியும்-1967

14. ஒரு வீட்டின் கதை-1979

15. நினைவுச்சரம்-1980

16. அலைமோதும்

கடலோரத்தில்-1980

17. இருட்டு ராஜா-1985

18. மன்னிக்கத் தெரியாதவர் - 1991

19. துணிந்தவன் - 2000

ஈ) நாடகம்

1. நாசகாரக் கும்பல் (நையாண்டி பாரதி)-1948

2. விடியுமா-1948

உ) கட்டுரைகள்

1. உவமைநயம்-1945

2. கோயில் களை மூடுங்கள் (கோரநாதன்)-1946

3. ஈட்டிமுனை (கோரநாதன்)-1946

4. அடியுங்கள் சாவுமணி (மிவாஸ்கி)-1947

5. சினிமாவில் கடவுள்கள் (கோரநாதன்-1947)

6. கொடு கல்தா (கோரநாதன்)-1948

7. எப்படி உருப்படும்? (கோரநாதன்)-1948

8. கேட்பாரில்லை (கோரநாதன்)- 1949

9. அறிவின் கேள்வி (கோரநாதன்)- 1949

10. விவாகரத்து தேவைதானா?-1950

11. நல்ல மனைவியை அடைவது எப்படி?-1950

12. கல்யாணத்துக்குப் பிறகு காதல் புரியலாமா?-1950

13. கல்யாணம் இன்பம் கொடுப்பதா? துன்பத்தைக் கெடுப்பதா?-1950

14. முத்துக்குளிப்பு-1965

15. பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை-1981

16. சரஸ்வதி காலம்-1986

17. எழுத்தாளர்கள் பத்திரிகைகள் அன்றும் இன்றும்-1986

18. புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை)-1987

19. வாசகர்கள் விமர்சகர்கள்-1987

20. மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்-1987

21. வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்-1988

22. தமிழில் சிறு பத்திரிகைகள்-1991

23. ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்- 1995

24. தீபம் யுகம்-1999

25. எழுத்து சி.சு. செல்லப்பா-2002

26. தமிழ் வளர்த்த ஞானியார் அடிகள்-2003

27. தமிழில் சிறுபத்திரிகைகள்-2004

28. வல்லிக்கண்ணன் கட்டுரைகள் -மித்ர-2004

29. எழுத்துலக நட்சத்திரம் (தீபம்) நா. பார்த்த சாரதி - 2005

ஊ) திறனாய்வு / ஆராய்ச்சி

1. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 1977

எ) மொழி பெயர்ப்பு

1. டால்ஸ்டாய்-1956

2. கடலில் நடந்தது (கார்க்கி கட்டுரைகள்)-1956

3. சின்னஞ்சிறுபெண் (கார்க்கி கட்டுரைகள்)-1957

4. கார்க்கி கட்டுரைகள்-1957

5. தாத்தாவும் பேரனும் -1959

6. ராகுல் சாங்கிருத்யாயன்-1986

7. ஆர் மேனியன் சிறுகதைகள் 1991

8. சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் 1995

9. நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா 2005

ஏ) உரை நூல்கள்

ஐ) பிற

1. நம் நேரு-1954

2. விஜயலஷ்மி (வரலாறு)-1954

3. காலத்தின் குரல் (60 கேள்விகளுக்கு பதில்)-1980

4. வல்லிக்கண்ணன் கடிதங்கள்-1999

5. வாழ்க்கைச் சுவடுகள் (தன் வரலாறு)-2001

6. நிலைபெற்ற நினைவுகள்-2005

உசாத்துணை

புத்தகம் பேசுது இதழ், 16, ஜூலை, 2010

இந்து தமிழ் திசை இணைய இதழ், 13.11.2020