வரதர்

From Tamil Wiki
Revision as of 23:45, 24 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "தி.ச.வரதராசன் என்ற இயற்பெயர் கொண்ட வரதர், யாழ்ப்பாணத்திலுள்ள பொன்னாலை என்ற கிராமத்தில் 01-07-1924 அன்று பிறந்தார். இவரது தந்தை பெயர் தியாகர் சண்முகம். தாய்பெயர் சின்னத்தங்கம். இவர்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தி.ச.வரதராசன் என்ற இயற்பெயர் கொண்ட வரதர்,

யாழ்ப்பாணத்திலுள்ள பொன்னாலை என்ற கிராமத்தில்

01-07-1924 அன்று பிறந்தார். இவரது தந்தை பெயர் தியாகர்

சண்முகம். தாய்பெயர் சின்னத்தங்கம்.

இவர் தனது கல்வியை பொன்னாலை அமெரிக்க மி~ன்

தமிழ்ப்பாடசாலை, மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை,

சுழிபுரம் ஐக்கிய சங்க வித்தியாசாலை, காரைநகர்

சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகியவற்றில் பெற்றுள்ளார்.

வரதரது மனைவிபெயர் மகாதேவியம்மா. இவர்களுக்கு

செந்தாமரை, தேன்மொழி, மலர்விழி ஆகியோர் புதல்விகள்.இவர் இளமையிலே

பொன்னாலையில் இருந்த சமூகத்தொண்டு நிலையம்

வெளியிட்ட சமூகத்தொண்டன் கையெழுத்து இதழின்

ஆசிரியராக இருந்தார். பின்னர் அவர் மாணவராய் இருந்த

மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையின் மாணவர் தேர்ச்சிச்

சங்கம் வெளியிட்ட கையெழுத்து இதழின் ஆசிரியராகவும்

பணியாற்றினார். அதுமட்டுமன்றி கையெழுத்து இதழ்களின்

ஓவியராகவும் விளங்கினார.;

அச்சில் வெளிவந்த வரதரது முதலாவது கட்டுரை

ஈழகேசரி பத்திரிகையின் கல்வி அனுபந்தம் என்ற பகுதியில்

1939ஆம் ஆண்டு வெளிவந்தது. அப்போது அவருக்கு

வயது 15 மட்டுமே. தொடர்ந்து 1940இல் ஈழகேசரி ஆண்டு

மலரில் இவரது முதலாவது சிறுகதை 'கல்யாணியின்

காதல்" வெளிவந்தது.

13-06-1943இல் வரதர் எழுதிய முதலாவது கவிதை 'ஓர்

இரவினிலே" ஈழகேசரியில் வெளியாகியது. இக்கவிதையே

ஈழத்தில் வெளிவந்த முதலாவது புதுக்கவிதை ஆகும்.

ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியில் ஈழகேசர

புதிய இலக்கியத் துறையில் ஓரளவே அக்கறை

காட்டியது. இதனால் நவீன இலக்கியத்துக்கான சஞ்சிகை

ஒன்றை வெளியிடவேண்டும் என்ற எண்ணம் ஈழகேசரியில்

இளம் எழுத்தாளர்களாக எழுதிக் கொண்டிருந்த வரதருக்கும்

அவரது நண்பர்களான அ.செ. முருகானந்தன், நாவற்குழியூர்

நடராசன், பண்டிதர் ச.பஞ்சாட்சர சர்மா போன்றோருக்கும

சிலர் இணைந்து தமிழ்

இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் என்ற அமைப்பை 13-06-1943

அன்று உருவாக்கினார்கள். இச்சங்கத்தின் பிதாமகர் வரதர்

ஆவார். இதுவே ஈழத்தின் முதலாவது தமிழ் எழுத்தாளர்

சங்கமாகும். நவீனத் தமிழிலக்கியத்தின் வரலாற்றில் ஓர்

இலக்கியம்பற்றிய ஒரு குறிப்பிட்ட கருத்துநிலையோடு

தொழிற்பட்டுவந்த முதலாவது இயக்கம் மறுமலர்ச்சி

இயக்கமாகும்.

இச்சங்கத்தினால் மறுமலர்ச்சி என்ற சஞ்சிகையை

நடத்தவும் தீர்மானித்து அதற்கு ஆசிரியராக வரதரைத்

தேர்ந்தெடுத்தார்கள். அப்போது வரதருக்கு வயது 19.

ஆரம்பத்தில் மறுமலர்ச்சி கையெழுத்துப் பத்திரிகையாக

வெளிவந்தது. அதனை அச்சு இதழாக்க வேண்டும் என்ற

கனவு வரதருக்கு இருந்தது. 1946 மார்ச் மாதத்திலிருந்து

1948 ஒக்டோபர் மாதம் வரை 23 இதழ்கள் அச்சு இதழ்களாக

வெளிவந்தன. மறுமலர்ச்சி இதழ் ஈழத்தின் முதலாவது நவீன

இலக்கியச் சிற்றிதழ் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டது.

மறுமலர்ச்சி இதழின் இணை ஆசிரியர்களாக முதலில்

வரதரும். அ.செ. முருகானந்தனும் இருந்தனர். 1948இன்

ஆறாவது இதழிலிருந்து இணை ஆசிரியர்களாக வரதரும்

பண்டிதர் ச. பஞ்சாட்சர சர்மாவும் விளங்கினர்.

'மஹாகவி பாரதியாருக்குப்பின் தமிழகத்i'மறுமலர்ச்சி இதழுடன் இலக்கியப்பணி தொடங்கிய

வரதர், இதழ்கள் இலக்கிய வளர்ச்சிக்கு உதவுவன என்பதை

உணர்ந்து பலவற்றை வெளியிட்டு வந்துள்ளார். அவை, வரதர்

புத்தாண்டு மலர்(1949), ஆனந்தன்(1952), தேன்மொழி(1955),

வெள்ளி (1957), புதினம்(1961), அறிவுக்களஞ்சியம்(1992)

என்பனவாம்.

இவற்றுள் கவிதைக்காக வரதர் நடத்திய இதழ்

தேன்மொழி என்பதாகும். 1955 இலிருந்து மாதம் ஒருமுறை

வந்த இந்த இதழ் ஈழத்தின் முதலாவது தமிழ்க்கவிதை இதழ்

என்ற பெருமைக்குரியது. இந்த இதழின் நிர்வாக ஆசிரியராக

வரதரும் இணை ஆசிரியராக மஹாகவியும் விளங்கினர்.

1996இல் வரதர் எழுதி வீரகேசரியில் வெளிவந்த

'யாழ்ப்பாணத்தார் கண்ணீர்" (குறுங்காவியம்) பின்னர்

நூலாகவும் வெளிவந்தது. 1995 ஒக்ரோபர் 30ஆம் திகதி

வலிகாமம் மக்கள் அனைவரும் தாம் வாழ்ந்த வீடுகளையும்

தேடிய தேட்டங்களையும் கைவிட்டு எதிலிகளாக

இடம்பெயர்ந்த சோகவரலாறு வரதரின் நீண்ட கவிதையாக


வரதர் எல்லாமாக 29 சிறுகதைகளை எழுதினார்.

அவற்றுள் அவருக்கு அதிக புகழைத் தந்தது கற்பு என்ற

சிறுகதை. இக்கதை ஐம்பது வருடங்களுக்கு முன்னரே

வெளிவந்த பெண்ணியச் சிந்தனைகொண்ட கதையாகும்.

வரதரின் தேர்ந்தெடுக்கப ;பட்ட சிறுகதைகள் அடங்கிய

தொகுதி கயமைமயக்கம் 1960இல் வெளிவந்தது.

வரதர் மூன்று குறுநாவல்களை எழுதியுள்ளார். அவை

(1) வென்றுவிட்டாயடி இரத்தினா (2)உணர்ச்சி ஓட்டம் (3)

தையலம்மா என்பனவாம்.

வரதர் ஒரு நாவலையும் எழுதியுள்ளார். காவோலையின்

பசுமை என்ற அவர் எழுதிய நாவல் ஞாயிறு தினகரன்

இதழில் 1998இல் தொடர்கதையாக வெளிவந்தது.

வரதரின் நூல்களாக பின்வரும் ஏழு நூல்கள்

வெளிவந்துள்ளன. அவையாவன (1) நாவலர் (2) வாழ்கநீ

சங்கிலி மன்னா (3) கயமை மயக்கம் (4) மலரும் நினைவுகள்

(5) பாரதக்கதை (6) யாழ்பாணத்தார் கண்ணீர் (7) சிறுகதைப்

பட்டறிவுக்குறிப்புகள் என்பனவாம்.

வரதரின் சுயசரிதை போன்று அமைந்த மலரும் நினைவுகள்

நூல் பற்றி பேராசிரியர் சிவலிங்கராஜா குறிப்பிடுகையில்,

'40, 50களின் யாழ்ப்பாணச் சமூகத்தின் வரலாற்றுக்

கோலங்களை மலரும் நினைவுகளாக ஆக்கித் தந்திருக்கிறார்

வரதர். பண்பாட்டு விழுமியங்களைப் பகுத்தாய்வு செய்யும்

சமூகவியல் ஆய்வாளர்களுக்கு ஒரு கையேடாக மலரும்

நினைவுகள் அமைந்துள்ளது எனலாம்" என்கிறார்.

வரதர் தொழில் முறையில் அச்சக முகாமையாளராகவும்,

நூல் வெளியீட்டாளராகவும் பணிபுரிந்தவர். அவர் அச்சு

இயந்திரப் பயன்பாட்டை அச்சுத் தொழிலாகக் கருதாதுஅச்சுக் கலையாகப் பயன்படுத்தும் மனநிலையைக்

கொண்டிருந்தார். அவரது வெளியீட்டகத்தின் மூலம்

33 நூல்கள் வெளிவந்தன. அவற்றுள் பண்டிதமணி

சி. கணபதிப்பிள்ளையின் இலக்கியவழி, பேராசிரியர்

கைலாசபதியின் இலக்கியமும் திறனாய்வும், செங்கை

ஆழியானின் ஈழத்துச்சிறுகதை வரலாறு மற்றும் மஹாகவி,

சாந்தன், முருகையன். சோமகாந்தன் ஆகியோரின்

நூல்கள் உட்பட பல தரம்மிக்க எழுத்தாளர்களின் நூல்களை

அவர் வெளியிட்டுள்ளார். பதினைந்து வயதுக்கு உட்பட்ட

சிறார்களுக்கு வரதர் கதைமலர் தொடரில் தொடர்ந்து

ஐந்து நூல்களை வெளியிட்டார். வரதரின் பலகுறிப்பு

தமிழ் மக்களுக்குத் தேவையான பலவித விடயங்களைத்

தொகுத்துத் தந்தது. இதனை ஆண்டுக்கு ஒன்றாக நான்கு

பதிப்புகளை அவர் வெளியிட்டார்.

வரதரின் மறுமலர்ச்சி சஞ்சிகையில் வெளிவந்த 64

சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 சிறுகதைகளை,

செங்கை ஆழியான் மறுமலர்ச்சிச் சிறுகதைகள் என்ற

மகுடத்தில் தொகுத்து நூலாக்கியுள்ளார் (1997).

அதேபோன்று 51 கவிதைகள் அனைத்தையும் தொகுத்து

செல்லத்துரை சுதர்சன் அவர்கள் மறுமலர்ச்சிக் கவிதைகள்

என்ற மகுடத்தில் நூலாக்கியுள்ளார் (2006);. மறுமலர்ச்சி

சஞ்சிகையின் இணை ஆசிரியர் பஞ்சாட்சர சர்மா அவர்களது

புத்திரர் கோப்பாய் சிவம் அவர்களும் திரு. செல்லத்துரை

சுதர்சனும் இணைந்து மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பினை

வெளிக்கொணர்துள்ளனர் (2016). இம்முயற்சிகள் யாவும்

மறுமலர்ச்சி சஞ்சிகையின் முக்கியத்துவத்தை எடுத்தியம்

புவனவாக உள்ளன.

ஈழத்தின் முதலாவது தமிழ் எழுத்தாளர் சங்கத்தை

அமைத்து இலக்கியம் பற்றிய ஒரு குறிப்பிட்ட கருத்து

நிலையோடு தொழிற்பட்ட முதலாவது இலக்கிய இயக்கமாக 21-12-2006 அன்று அமரரானார். ஈழத்து

இலக்கிய உலகில் அவரது நாமம் என்றும் நிலைத்திருக்கும