under review

வசனசம்பிரதாயக் கதை: Difference between revisions

From Tamil Wiki
(changed single quotes)
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(7 intermediate revisions by the same user not shown)
Line 1: Line 1:
வசனசம்பிரதாயக் கதை (1775) [[நாட்டரசன்கோட்டை முத்துக்குட்டி ஐயர்]] எழுதிய, தமிழ் உரைநடைக்கும், கதைகூறல்முறைக்கும் உதாரணமாக அமையும் பழைய முறையிலான கதை. உரைநடையில் அமைந்தமையால் வசன சம்பிரதாயக்கதை என பெயர் பெற்றது. ஆனால் நவீன புனைகதைக்குரிய பண்புகளை அடையவில்லை. நாட்டார் வாய்மொழி இலக்கியத்தில் இருந்து நவீன இலக்கியம் நோக்கி வரும் வழியில் அமைந்த கதை இது என ஆய்வாளர் சிட்டி-சிவபாதசுந்தரம் வகுக்கிறார்கள்.
வசனசம்பிரதாயக் கதை (1775) [[நாட்டரசன்கோட்டை முத்துக்குட்டி ஐயர்]] எழுதிய, தமிழ் உரைநடைக்கும், கதைகூறல்முறைக்கும் உதாரணமாக அமையும் பழைய முறையிலான கதை. உரைநடையில் அமைந்தமையால் வசன சம்பிரதாயக்கதை என பெயர் பெற்றது. ஆனால் நவீன புனைகதைக்குரிய பண்புகளை அடையவில்லை. நாட்டார் வாய்மொழி இலக்கியத்தில் இருந்து நவீன இலக்கியம் நோக்கி வரும் வழியில் அமைந்த கதை இது என ஆய்வாளர் சிட்டி-சிவபாதசுந்தரம் வகுக்கிறார்கள்.
== எழுத்து, பதிப்பு ==
== எழுத்து, பதிப்பு ==
1775-ல் சிவகங்கை சமஸ்தான மன்னர் ரவிகுல முத்து வடுகநாத பெரிய உடையாத்தேவர் (1750-1780) தன் அவைக்கவிஞராகிய நாட்டரசன்கோட்டை முத்துக்குட்டி ஐயரிடம் சிவராத்திரி அன்று தான் இரவு முழுக்க தூங்காமலிருக்கும்படி ஒரு கதை சொல்லும்படி கோரினார். முத்துக்குட்டி ஐயர் சொன்ன கதையை அட்டணைக்காரர்கள் எழுதிக்கொண்டனர். குபேரனுக்குக் குடிகள் விண்ணப்பம் செய்வதுபோல ஒரு கதையை முத்துக்குட்டி ஐயர் சொன்னார். அது கதையை முத்துக் குட்டி ஐயரிடம் வாய் மொழியாகக் கேட்டவர் அதைச் சுவடிகளில் எழுதி வைத்தனர். திருவையாறில் வாழ்ந்த இசைப் புலவர் குஞ்சர பாரதியின் சகோதரர் நாகுபாரதி என்பவர் முத்துக்குட்டி ஐயர் சொன்னபடியே இந்நூலை மனப்பாடமாக நினைவில் வைத்திருந்தார். அவர் மகன் வைத்தியநாத பாரதி  அவரிடமிருந்து அக்கதை முழுதும் கேட்டுப் பிரதி செய்து தமது நண்பர் ராமசாமி தீட்சிதரின் உதவியுடன் வசன சம்பிரதாயக் கதை என்ற தலைப்பில் 1895-ஆம் ஆண்டு திருவையாற்றில் வெளியிட்டார் என்று சிட்டி-சிவபாதசேகரம் குறிப்பிடுகிறார்.
1775-ல் சிவகங்கை சமஸ்தான மன்னர் ரவிகுல முத்து வடுகநாத பெரிய உடையாத்தேவர் (1750-1780) தன் அவைக்கவிஞராகிய நாட்டரசன்கோட்டை முத்துக்குட்டி ஐயரிடம் சிவராத்திரி அன்று தான் இரவு முழுக்க தூங்காமலிருக்கும்படி ஒரு கதை சொல்லும்படி கோரினார். முத்துக்குட்டி ஐயர் சொன்ன கதையை அட்டணைக்காரர்கள் எழுதிக்கொண்டனர். குபேரனுக்குக் குடிகள் விண்ணப்பம் செய்வதுபோல ஒரு கதையை முத்துக்குட்டி ஐயர் சொன்னார். அது கதையை முத்துக் குட்டி ஐயரிடம் வாய் மொழியாகக் கேட்டவர் அதைச் சுவடிகளில் எழுதி வைத்தனர். திருவையாறில் வாழ்ந்த இசைப் புலவர் குஞ்சர பாரதியின் சகோதரர் நாகுபாரதி என்பவர் முத்துக்குட்டி ஐயர் சொன்னபடியே இந்நூலை மனப்பாடமாக நினைவில் வைத்திருந்தார். அவர் மகன் வைத்தியநாத பாரதி  அவரிடமிருந்து அக்கதை முழுதும் கேட்டுப் பிரதி செய்து தமது நண்பர் ராமசாமி தீட்சிதரின் உதவியுடன் வசன சம்பிரதாயக் கதை என்ற தலைப்பில் 1895-ம் ஆண்டு திருவையாற்றில் வெளியிட்டார் என்று சிட்டி-சிவபாதசேகரம் குறிப்பிடுகிறார்.
 
ஆய்வாளர் பெருமாள் முருகன் இந்நூல் மறுபதிப்பான கதையை இவ்வாறு சொல்கிறார்<ref>[https://www.hindutamil.in/news/opinion/columns/188028--2.html வசன சம்பிரதாயக் கதையின் இடம்-தமிழ் ஹிந்து]</ref> 'இந்த நூலைக் கண்டுபிடித்தவர் ஈழத்தைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் அவர்கள். கிரௌன் வடிவில் 76 பக்கங்களைக் கொண்டிருந்த இந்நூலை ஈழத்தில் பழைய புத்தகக் கடை ஒன்றில் சிதைந்த நிலையில் அவர் வாங்கினார். தம் உதவியாளரைக் கொண்டு உடனடியாகப் படி எடுத்தும் வைத்தார். மூலக்கதையை மட்டுமே அவ்வாறு எழுதி வைத்தார். அந்நூலில் இருந்த முக்கியத்துவம் வாய்ந்த சாற்றுகவிகள், முன்னுரைகள் ஆகியவற்றைப் படி எடுக்க இயலவில்லை. அவரும் அவருடன் இணை சேர்ந்து நூல் எழுதுபவரான சிட்டி என்னும் பெ.கோ.சுந்தர்ராஜனும் இந்நூலைப் பதிப்பிக்க எண்ணி 1980-ஆம் ஆண்டே முன்னுரை எழுதித் தயார் செய்துள்ளனர். ஆனால் நூல் வெளியிடப்படவில்லை. சிவபாதசுந்தரத்தின் இறப்பிற்குப் பிறகு அவருடைய நினைவுக்குக் காணிக்கையாக்கி இந்நூலையும் சிலப்பதிகார ஆராய்ச்சி என்னும் கட்டுரைத் தொகுப்பையும் இணைத்துக் 'கண்டெடுத்த கருவூலம்' (வாணி பதிப்பகம், கோவை) என்னும் தலைப்பில் 2004-ஆம் ஆண்டு சிட்டி வெளியிட்டுள்ளார்.’ இந்நூலை சிவபாதசுந்தரம் கண்டெடுத்ததையும் அவர் வெளியிட முயன்று பின்னர் சிட்டி வெளியிட்டதையும் வெங்கட் சாமிநாதன் எழுதியிருக்கிறார்.<ref> [https://siliconshelf.wordpress.com/2015/05/14/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%90%e0%ae%af%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88%e0%ae%a8/ 1775 -ல் எழுதப்பட்ட தமிழ் உரைநடைக் கதை]</ref>


ஆய்வாளர் பெருமாள் முருகன் இந்நூல் மறுபதிப்பான கதையை இவ்வாறு சொல்கிறார்<ref>[https://www.hindutamil.in/news/opinion/columns/188028--2.html வசன சம்பிரதாயக் கதையின் இடம்-தமிழ் ஹிந்து]</ref> 'இந்த நூலைக் கண்டுபிடித்தவர் ஈழத்தைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் அவர்கள். கிரௌன் வடிவில் 76 பக்கங்களைக் கொண்டிருந்த இந்நூலை ஈழத்தில் பழைய புத்தகக் கடை ஒன்றில் சிதைந்த நிலையில் அவர் வாங்கினார். தம் உதவியாளரைக் கொண்டு உடனடியாகப் படி எடுத்தும் வைத்தார். மூலக்கதையை மட்டுமே அவ்வாறு எழுதி வைத்தார். அந்நூலில் இருந்த முக்கியத்துவம் வாய்ந்த சாற்றுகவிகள், முன்னுரைகள் ஆகியவற்றைப் படி எடுக்க இயலவில்லை. அவரும் அவருடன் இணை சேர்ந்து நூல் எழுதுபவரான சிட்டி என்னும் பெ.கோ.சுந்தர்ராஜனும் இந்நூலைப் பதிப்பிக்க எண்ணி 1980-ம் ஆண்டே முன்னுரை எழுதித் தயார் செய்துள்ளனர். ஆனால் நூல் வெளியிடப்படவில்லை. சிவபாதசுந்தரத்தின் இறப்பிற்குப் பிறகு அவருடைய நினைவுக்குக் காணிக்கையாக்கி இந்நூலையும் சிலப்பதிகார ஆராய்ச்சி என்னும் கட்டுரைத் தொகுப்பையும் இணைத்துக் 'கண்டெடுத்த கருவூலம்' (வாணி பதிப்பகம், கோவை) என்னும் தலைப்பில் 2004-ம் ஆண்டு சிட்டி வெளியிட்டுள்ளார்.’ இந்நூலை சிவபாதசுந்தரம் கண்டெடுத்ததையும் அவர் வெளியிட முயன்று பின்னர் சிட்டி வெளியிட்டதையும் வெங்கட் சாமிநாதன் எழுதியிருக்கிறார்.<ref> [https://siliconshelf.wordpress.com/2015/05/14/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%90%e0%ae%af%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88%e0%ae%a8/ 1775 -ல் எழுதப்பட்ட தமிழ் உரைநடைக் கதை]</ref>
== ஆசிரியர் பற்றிய விவாதம் ==
== ஆசிரியர் பற்றிய விவாதம் ==
நூலாசிரியர் சிவகங்கை சமஸ்தான வித்வான் முத்துக்குட்டி ஐயர் பற்றி ஆவணப்படுத்தப்பட்ட செய்திகளேதும் இல்லை. அவர் பெயரில் சில தனிப்பாடல்கள் புழக்கத்தில் உள்ளன.முத்துகுட்டிப் புலவரின் தனிப்பாடல் ஒன்றை அவர் வம்சாவளியினரான நாகலிங்கம் என்பவர் கூற, கி.வா.ஜகந்நாதன் தன் ’இலங்கைக் காட்சிகள்’ நூலில் அத் தனிப்பாடலைத் தந்துள்ளார். அதில் அவர் சொல்லும் செய்தியின்படி நாகலிங்கம் ராமநாதபுரத்திலுள்ள பரத்தைவயல் என்னும் ஊரில் இருந்து இலங்கை சென்றவர். அவருடைய மூதாதைதான் முத்துக்குட்டி ஐயர்.:
நூலாசிரியர் சிவகங்கை சமஸ்தான வித்வான் முத்துக்குட்டி ஐயர் பற்றி ஆவணப்படுத்தப்பட்ட செய்திகளேதும் இல்லை. அவர் பெயரில் சில தனிப்பாடல்கள் புழக்கத்தில் உள்ளன.முத்துகுட்டிப் புலவரின் தனிப்பாடல் ஒன்றை அவர் வம்சாவளியினரான நாகலிங்கம் என்பவர் கூற, கி.வா.ஜகந்நாதன் தன் ’இலங்கைக் காட்சிகள்’ நூலில் அத் தனிப்பாடலைத் தந்துள்ளார். அதில் அவர் சொல்லும் செய்தியின்படி நாகலிங்கம் ராமநாதபுரத்திலுள்ள பரத்தைவயல் என்னும் ஊரில் இருந்து இலங்கை சென்றவர். அவருடைய மூதாதைதான் முத்துக்குட்டி ஐயர்.:


கையிலோ அரைக்காசுக் கிடமே இல்லை;   
கையிலோ அரைக்காசுக் கிடமே இல்லை;  


கடனென்றால் இருநூறு பொன்மேல் ஆச்சு;
கடனென்றால் இருநூறு பொன்மேல் ஆச்சு;
Line 15: Line 13:
''நெய்யிலே கைபோட்டுக் கொடுத்திட் டாலும்''
''நெய்யிலே கைபோட்டுக் கொடுத்திட் டாலும்''


''       நிர்வாகம் அரண்மனையார் அறிய மாட்டார்:''
''     நிர்வாகம் அரண்மனையார் அறிய மாட்டார்:''


''பையிலே பணமிருக்க நீயும் சும்மா''
''பையிலே பணமிருக்க நீயும் சும்மா''


''     பார்த்திருக்க நியாயமுண்டோ பரனே ஐயா,''
''   பார்த்திருக்க நியாயமுண்டோ பரனே ஐயா,''


''மையிலே தோய்ந்தவிழி உமையாள் பாகா,''
''மையிலே தோய்ந்தவிழி உமையாள் பாகா,''


''     மருதூரா, என்வரிக்கு வகைசெய் வாயே''
''   மருதூரா, என்வரிக்கு வகைசெய் வாயே''


நாகத்தின் படத்துக்குப் பையென்றும் பணமென்றும் பெயர் உண்டு. நாகம் அணிந்த மருதூரர் நாகநாதரைப் பார்த்து, 'உம்முடைய பையிலே பணம் இருக்க என் துயரைச் சும்மா பார்த்திருக்கலாமா?" என்று இரண்டு பொருள் அமையும்படி இக்கவிதை உள்ளது என்று கி.வ.ஜகந்நாதன் எழுதுகிறார்.நாட்டரசன் கோட்டைக் கண்ணுடையம்மன் பள்ளுப் பாடினவர் இவர் என்கிறார் கி.வா.ஜ.  
நாகத்தின் படத்துக்குப் பையென்றும் பணமென்றும் பெயர் உண்டு. நாகம் அணிந்த மருதூரர் நாகநாதரைப் பார்த்து, 'உம்முடைய பையிலே பணம் இருக்க என் துயரைச் சும்மா பார்த்திருக்கலாமா?" என்று இரண்டு பொருள் அமையும்படி இக்கவிதை உள்ளது என்று கி.வ.ஜகந்நாதன் எழுதுகிறார்.நாட்டரசன் கோட்டைக் கண்ணுடையம்மன் பள்ளுப் பாடினவர் இவர் என்கிறார் கி.வா.ஜ.  


டாக்டர் எஸ். எம். கமால், இராமநாதபுரம் மாவட்டம், வரலாற்றுக் குறிப்புகள், (பக். 181-183) நூலில் ’இராமநாதபுரம் சோமசுந்தர குருக்கள், முதுகுளத்தூர் சதாவதானம் சரவணப் பெருமாள் கவிராயர், திருப்புவனம் கந்தசாமிப் புலவர், சிறுகம்பை சர்க்கரைப். புலவர், பரத்தை வயல் முத்துக்குட்டிப் புலவர், வீரை ஆசுகவிராயர் ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள்’ என்று கூறும்பட்டியலில் பரத்தை வயல் முத்துக்குட்டிப் புலவர் பெயர் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இவர் பிராமணர் அல்ல. வேளாளர்களில் ஒரு பிரிவு. ஆகவே இந்த முத்துக்குட்டிப்புலவர் வசனசம்பிரதாய கதையை பாடியவராக இருக்க வாய்ப்பில்லை என ஆய்வாளர் நா.கணேசன் குறிப்பிடுகிறார்.
டாக்டர் எஸ். எம். கமால், இராமநாதபுரம் மாவட்டம், வரலாற்றுக் குறிப்புகள், (பக். 181-183) நூலில் ’இராமநாதபுரம் சோமசுந்தர குருக்கள், முதுகுளத்தூர் சதாவதானம் சரவணப் பெருமாள் கவிராயர், திருப்புவனம் கந்தசாமிப் புலவர், சிறுகம்பை சர்க்கரைப். புலவர், பரத்தை வயல் முத்துக்குட்டிப் புலவர், வீரை ஆசுகவிராயர் ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள்’ என்று கூறும்பட்டியலில் பரத்தை வயல் முத்துக்குட்டிப் புலவர் பெயர் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இவர் பிராமணர் அல்ல. வேளாளர்களில் ஒரு பிரிவு. ஆகவே இந்த முத்துக்குட்டிப்புலவர் வசனசம்பிரதாய கதையை பாடியவராக இருக்க வாய்ப்பில்லை என ஆய்வாளர் நா.கணேசன் குறிப்பிடுகிறார்.
== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
இராமநாதபுரம் மாவட்டத்தில் மழையில்லாமல் மக்கள் துன்பப்படுவதும், தெய்வங்களுக்கு பூஜைகள் செய்வதும், மழைபெய்து நெல்விளைந்து மக்களின் வாழ்க்கை செழிப்பதும் இந்த நூலின் உள்ளடக்கம். குபேர மகாராஜாஅவர்கள் சீர்பாதம் திக்கு நோக்கி தண்டம் பண்ணி… குடியான அனைவோரும் தண்டனிட்டு விண்ணப்பம்' என்பதே இதன் தொடக்கம். பெரும்பகுதி உருவகமாகவே சொல்லப்பட்டுள்ளது. "மேகணன் சேர்வைக்காரன் வருசகட்டளை கொடுத்துப் போகும்படி அச்சுதப்பெருமாளையங்கார் உத்தரவு பிறப்பித்திருந்தார்.ஆனால் ஒருவருஷம் வருஷ கட்டளை விசாரியாமலிருந்துவிட்டார். அப்போது மேகணன் சேர்வைக்காரன் உடன்படிக்கை தப்பி மறந்துவிட்டதென்னவென்று அடியேங்கள் விசாரித்தோம். மேகணன் சேர்வைக்காரனுக்கு மேல்காரியக்காரர்களான ஆதித்தமய்யன் என்றும் சோமசுந்தரய்யன் என்றும் இரண்டுபேருண்டு" இதில் மேகம், விஷ்ணு, சூரியன், சந்திரன் ஆகியோர் உருவகமாகச் சொல்லப்படுகிறார்கள்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் மழையில்லாமல் மக்கள் துன்பப்படுவதும், தெய்வங்களுக்கு பூஜைகள் செய்வதும், மழைபெய்து நெல்விளைந்து மக்களின் வாழ்க்கை செழிப்பதும் இந்த நூலின் உள்ளடக்கம். குபேர மகாராஜாஅவர்கள் சீர்பாதம் திக்கு நோக்கி தண்டம் பண்ணி… குடியான அனைவோரும் தண்டனிட்டு விண்ணப்பம்' என்பதே இதன் தொடக்கம். பெரும்பகுதி உருவகமாகவே சொல்லப்பட்டுள்ளது. "மேகணன் சேர்வைக்காரன் வருசகட்டளை கொடுத்துப் போகும்படி அச்சுதப்பெருமாளையங்கார் உத்தரவு பிறப்பித்திருந்தார்.ஆனால் ஒருவருஷம் வருஷ கட்டளை விசாரியாமலிருந்துவிட்டார். அப்போது மேகணன் சேர்வைக்காரன் உடன்படிக்கை தப்பி மறந்துவிட்டதென்னவென்று அடியேங்கள் விசாரித்தோம். மேகணன் சேர்வைக்காரனுக்கு மேல்காரியக்காரர்களான ஆதித்தமய்யன் என்றும் சோமசுந்தரய்யன் என்றும் இரண்டுபேருண்டு" இதில் மேகம், விஷ்ணு, சூரியன், சந்திரன் ஆகியோர் உருவகமாகச் சொல்லப்படுகிறார்கள்.
Line 35: Line 32:


நவக்கிரகங்களின் சிக்கலால் மழைபெய்யவில்லை. ஆசிரியர் கரியமாணிக்கமய்யன் (சனி) மங்களேஸ்வரய்யன் (செவ்வாய்) என ஆண்டு, திதி அனைத்தையுமே கதைக்குள் கதைமாந்தராகக் கொண்டுவந்துள்ளார்.
நவக்கிரகங்களின் சிக்கலால் மழைபெய்யவில்லை. ஆசிரியர் கரியமாணிக்கமய்யன் (சனி) மங்களேஸ்வரய்யன் (செவ்வாய்) என ஆண்டு, திதி அனைத்தையுமே கதைக்குள் கதைமாந்தராகக் கொண்டுவந்துள்ளார்.
== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
இந்நூல் 1775- ல் இந்தியாவை பெரும்பஞ்சம் பிடித்தாட்டிய காலத்தில் எழுதப்பட்டது. இந்தியப் பஞ்சம் பற்றிய இலக்கிய ஆவணங்களில் இது முக்கியமானது. சரவணையா எழுதிய மேழி விளக்கம்,  தச்சநல்லூர் வள்ளியப்ப பிள்ளை மகன் அழகிய சொக்கநாத பிள்ளை எழுதிய திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி (1927) சிவகங்கை சமஸ்தான வித்வான் பிரமனூர், மிராசு கணக்கு வில்லியப்ப பிள்ளை இயற்றிய பஞ்சலட்சணத் திருமுக விலாசம் போன்ற நூல்களின் வரிசையில் வைக்கப்படவேண்டியது இந்நூல்
இந்நூல் 1775- ல் இந்தியாவை பெரும்பஞ்சம் பிடித்தாட்டிய காலத்தில் எழுதப்பட்டது. இந்தியப் பஞ்சம் பற்றிய இலக்கிய ஆவணங்களில் இது முக்கியமானது. சரவணையா எழுதிய மேழி விளக்கம், தச்சநல்லூர் வள்ளியப்ப பிள்ளை மகன் அழகிய சொக்கநாத பிள்ளை எழுதிய திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி (1927) சிவகங்கை சமஸ்தான வித்வான் பிரமனூர், மிராசு கணக்கு வில்லியப்ப பிள்ளை இயற்றிய பஞ்சலட்சணத் திருமுக விலாசம் போன்ற நூல்களின் வரிசையில் வைக்கப்படவேண்டியது இந்நூல்
== அடிக்குறிப்புகள் ==
<references />


== இணைப்புகள் ==
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
<references />{{finalised}}

Latest revision as of 10:18, 24 February 2024

வசனசம்பிரதாயக் கதை (1775) நாட்டரசன்கோட்டை முத்துக்குட்டி ஐயர் எழுதிய, தமிழ் உரைநடைக்கும், கதைகூறல்முறைக்கும் உதாரணமாக அமையும் பழைய முறையிலான கதை. உரைநடையில் அமைந்தமையால் வசன சம்பிரதாயக்கதை என பெயர் பெற்றது. ஆனால் நவீன புனைகதைக்குரிய பண்புகளை அடையவில்லை. நாட்டார் வாய்மொழி இலக்கியத்தில் இருந்து நவீன இலக்கியம் நோக்கி வரும் வழியில் அமைந்த கதை இது என ஆய்வாளர் சிட்டி-சிவபாதசுந்தரம் வகுக்கிறார்கள்.

எழுத்து, பதிப்பு

1775-ல் சிவகங்கை சமஸ்தான மன்னர் ரவிகுல முத்து வடுகநாத பெரிய உடையாத்தேவர் (1750-1780) தன் அவைக்கவிஞராகிய நாட்டரசன்கோட்டை முத்துக்குட்டி ஐயரிடம் சிவராத்திரி அன்று தான் இரவு முழுக்க தூங்காமலிருக்கும்படி ஒரு கதை சொல்லும்படி கோரினார். முத்துக்குட்டி ஐயர் சொன்ன கதையை அட்டணைக்காரர்கள் எழுதிக்கொண்டனர். குபேரனுக்குக் குடிகள் விண்ணப்பம் செய்வதுபோல ஒரு கதையை முத்துக்குட்டி ஐயர் சொன்னார். அது கதையை முத்துக் குட்டி ஐயரிடம் வாய் மொழியாகக் கேட்டவர் அதைச் சுவடிகளில் எழுதி வைத்தனர். திருவையாறில் வாழ்ந்த இசைப் புலவர் குஞ்சர பாரதியின் சகோதரர் நாகுபாரதி என்பவர் முத்துக்குட்டி ஐயர் சொன்னபடியே இந்நூலை மனப்பாடமாக நினைவில் வைத்திருந்தார். அவர் மகன் வைத்தியநாத பாரதி அவரிடமிருந்து அக்கதை முழுதும் கேட்டுப் பிரதி செய்து தமது நண்பர் ராமசாமி தீட்சிதரின் உதவியுடன் வசன சம்பிரதாயக் கதை என்ற தலைப்பில் 1895-ம் ஆண்டு திருவையாற்றில் வெளியிட்டார் என்று சிட்டி-சிவபாதசேகரம் குறிப்பிடுகிறார்.

ஆய்வாளர் பெருமாள் முருகன் இந்நூல் மறுபதிப்பான கதையை இவ்வாறு சொல்கிறார்[1] 'இந்த நூலைக் கண்டுபிடித்தவர் ஈழத்தைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் அவர்கள். கிரௌன் வடிவில் 76 பக்கங்களைக் கொண்டிருந்த இந்நூலை ஈழத்தில் பழைய புத்தகக் கடை ஒன்றில் சிதைந்த நிலையில் அவர் வாங்கினார். தம் உதவியாளரைக் கொண்டு உடனடியாகப் படி எடுத்தும் வைத்தார். மூலக்கதையை மட்டுமே அவ்வாறு எழுதி வைத்தார். அந்நூலில் இருந்த முக்கியத்துவம் வாய்ந்த சாற்றுகவிகள், முன்னுரைகள் ஆகியவற்றைப் படி எடுக்க இயலவில்லை. அவரும் அவருடன் இணை சேர்ந்து நூல் எழுதுபவரான சிட்டி என்னும் பெ.கோ.சுந்தர்ராஜனும் இந்நூலைப் பதிப்பிக்க எண்ணி 1980-ம் ஆண்டே முன்னுரை எழுதித் தயார் செய்துள்ளனர். ஆனால் நூல் வெளியிடப்படவில்லை. சிவபாதசுந்தரத்தின் இறப்பிற்குப் பிறகு அவருடைய நினைவுக்குக் காணிக்கையாக்கி இந்நூலையும் சிலப்பதிகார ஆராய்ச்சி என்னும் கட்டுரைத் தொகுப்பையும் இணைத்துக் 'கண்டெடுத்த கருவூலம்' (வாணி பதிப்பகம், கோவை) என்னும் தலைப்பில் 2004-ம் ஆண்டு சிட்டி வெளியிட்டுள்ளார்.’ இந்நூலை சிவபாதசுந்தரம் கண்டெடுத்ததையும் அவர் வெளியிட முயன்று பின்னர் சிட்டி வெளியிட்டதையும் வெங்கட் சாமிநாதன் எழுதியிருக்கிறார்.[2]

ஆசிரியர் பற்றிய விவாதம்

நூலாசிரியர் சிவகங்கை சமஸ்தான வித்வான் முத்துக்குட்டி ஐயர் பற்றி ஆவணப்படுத்தப்பட்ட செய்திகளேதும் இல்லை. அவர் பெயரில் சில தனிப்பாடல்கள் புழக்கத்தில் உள்ளன.முத்துகுட்டிப் புலவரின் தனிப்பாடல் ஒன்றை அவர் வம்சாவளியினரான நாகலிங்கம் என்பவர் கூற, கி.வா.ஜகந்நாதன் தன் ’இலங்கைக் காட்சிகள்’ நூலில் அத் தனிப்பாடலைத் தந்துள்ளார். அதில் அவர் சொல்லும் செய்தியின்படி நாகலிங்கம் ராமநாதபுரத்திலுள்ள பரத்தைவயல் என்னும் ஊரில் இருந்து இலங்கை சென்றவர். அவருடைய மூதாதைதான் முத்துக்குட்டி ஐயர்.:

கையிலோ அரைக்காசுக் கிடமே இல்லை;

கடனென்றால் இருநூறு பொன்மேல் ஆச்சு;

நெய்யிலே கைபோட்டுக் கொடுத்திட் டாலும்

நிர்வாகம் அரண்மனையார் அறிய மாட்டார்:

பையிலே பணமிருக்க நீயும் சும்மா

பார்த்திருக்க நியாயமுண்டோ பரனே ஐயா,

மையிலே தோய்ந்தவிழி உமையாள் பாகா,

மருதூரா, என்வரிக்கு வகைசெய் வாயே

நாகத்தின் படத்துக்குப் பையென்றும் பணமென்றும் பெயர் உண்டு. நாகம் அணிந்த மருதூரர் நாகநாதரைப் பார்த்து, 'உம்முடைய பையிலே பணம் இருக்க என் துயரைச் சும்மா பார்த்திருக்கலாமா?" என்று இரண்டு பொருள் அமையும்படி இக்கவிதை உள்ளது என்று கி.வ.ஜகந்நாதன் எழுதுகிறார்.நாட்டரசன் கோட்டைக் கண்ணுடையம்மன் பள்ளுப் பாடினவர் இவர் என்கிறார் கி.வா.ஜ.

டாக்டர் எஸ். எம். கமால், இராமநாதபுரம் மாவட்டம், வரலாற்றுக் குறிப்புகள், (பக். 181-183) நூலில் ’இராமநாதபுரம் சோமசுந்தர குருக்கள், முதுகுளத்தூர் சதாவதானம் சரவணப் பெருமாள் கவிராயர், திருப்புவனம் கந்தசாமிப் புலவர், சிறுகம்பை சர்க்கரைப். புலவர், பரத்தை வயல் முத்துக்குட்டிப் புலவர், வீரை ஆசுகவிராயர் ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள்’ என்று கூறும்பட்டியலில் பரத்தை வயல் முத்துக்குட்டிப் புலவர் பெயர் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இவர் பிராமணர் அல்ல. வேளாளர்களில் ஒரு பிரிவு. ஆகவே இந்த முத்துக்குட்டிப்புலவர் வசனசம்பிரதாய கதையை பாடியவராக இருக்க வாய்ப்பில்லை என ஆய்வாளர் நா.கணேசன் குறிப்பிடுகிறார்.

உள்ளடக்கம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் மழையில்லாமல் மக்கள் துன்பப்படுவதும், தெய்வங்களுக்கு பூஜைகள் செய்வதும், மழைபெய்து நெல்விளைந்து மக்களின் வாழ்க்கை செழிப்பதும் இந்த நூலின் உள்ளடக்கம். குபேர மகாராஜாஅவர்கள் சீர்பாதம் திக்கு நோக்கி தண்டம் பண்ணி… குடியான அனைவோரும் தண்டனிட்டு விண்ணப்பம்' என்பதே இதன் தொடக்கம். பெரும்பகுதி உருவகமாகவே சொல்லப்பட்டுள்ளது. "மேகணன் சேர்வைக்காரன் வருசகட்டளை கொடுத்துப் போகும்படி அச்சுதப்பெருமாளையங்கார் உத்தரவு பிறப்பித்திருந்தார்.ஆனால் ஒருவருஷம் வருஷ கட்டளை விசாரியாமலிருந்துவிட்டார். அப்போது மேகணன் சேர்வைக்காரன் உடன்படிக்கை தப்பி மறந்துவிட்டதென்னவென்று அடியேங்கள் விசாரித்தோம். மேகணன் சேர்வைக்காரனுக்கு மேல்காரியக்காரர்களான ஆதித்தமய்யன் என்றும் சோமசுந்தரய்யன் என்றும் இரண்டுபேருண்டு" இதில் மேகம், விஷ்ணு, சூரியன், சந்திரன் ஆகியோர் உருவகமாகச் சொல்லப்படுகிறார்கள்.

"அடியேங்களை இந்தப்படி வரிசைகுடிகளாக வைத்து ஆதரிக்கிற இராஜவர்க்கங்கள் மகாவிஷ்ணு பிம்பமென்கிறது சுபாவமே. அதுவல்லாமல் ஒருநிதானத்திலே எங்கள் துரையவர்கள் ஸ்ரீமது ராஜமானிய ராஜ ஸ்ரீ சிவகங்கை கர்த்தாக்கள் தங்களுக்கு அதிகமென்று சொல்லலாம். அதெப்படியென்றால் தாங்கள் ஆதி பரமேஸ்வரனை நோக்கித் தபசு பண்ணுகிறபோது போன கண்ணுக்குப் பொற்கண் வெகுமதி வாங்கினீர்கள். அடியேங்கள் துரையவர்கள் அந்தப் பரமேஸ்வரனுக்கு கண்ணுக்குக் கண்ணாயிருக்கிற சூரிய வங்கிஷத்திலே பிறந்தவர்களானதினாலே எங்கள் துரையவர்கள் அதிகம். …."என்னும் பாணியில் உரையாடல்கள் அமைந்துள்ளன.

நவக்கிரகங்களின் சிக்கலால் மழைபெய்யவில்லை. ஆசிரியர் கரியமாணிக்கமய்யன் (சனி) மங்களேஸ்வரய்யன் (செவ்வாய்) என ஆண்டு, திதி அனைத்தையுமே கதைக்குள் கதைமாந்தராகக் கொண்டுவந்துள்ளார்.

இலக்கிய இடம்

இந்நூல் 1775- ல் இந்தியாவை பெரும்பஞ்சம் பிடித்தாட்டிய காலத்தில் எழுதப்பட்டது. இந்தியப் பஞ்சம் பற்றிய இலக்கிய ஆவணங்களில் இது முக்கியமானது. சரவணையா எழுதிய மேழி விளக்கம், தச்சநல்லூர் வள்ளியப்ப பிள்ளை மகன் அழகிய சொக்கநாத பிள்ளை எழுதிய திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி (1927) சிவகங்கை சமஸ்தான வித்வான் பிரமனூர், மிராசு கணக்கு வில்லியப்ப பிள்ளை இயற்றிய பஞ்சலட்சணத் திருமுக விலாசம் போன்ற நூல்களின் வரிசையில் வைக்கப்படவேண்டியது இந்நூல்

அடிக்குறிப்புகள்


✅Finalised Page