லஷ்மி சிவக்குமார்
From Tamil Wiki
லஷ்மி சிவக்குமார் (தி. சிவக்குமார்) (டிசம்பர் 19, 1975) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். தொடர்ந்து சிறுகதைகள், நாவலகள் எழுதிவருகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
இயற்பெயர் சிவக்குமார். லஷ்மி சிவக்குமார் தஞ்சாவூரில் சுப்புலட்சுமி, திருநாவுக்கரசு இணையருக்கு டிசம்பர் 19, 1975இல் பிறந்தார். பன்னிரெண்டாவது வரை பள்ளிக்கல்வி பயின்றார். முடிவிலி வெளியீடு பதிப்பகம் நடத்துகிறார்.
இலக்கிய வாழ்க்கை
லஷ்மி சிவக்குமாரின் முதல் படைப்பு ‘இப்படிக்கு... கண்ணம்மா’ நாவல். நாவலகள், சிறுகதைகள் எழுதியுள்ளார்.
விருது
- டாக்டர் ஜி ஆர் தாமோதரன் நினைவு இலக்கிய பரிசுப்போட்டியில் போர்த்துகீசியனின் விரல் நாவலுக்ககாக விருது பெற்றார்.
நூல்கள் பட்டியல்
நாவல்
- இப்படிக்கு... கண்ணம்மா
- நியமம்
- போர்த்துகீசியனின் விரல்கள்
சிறுகதை
- லங்கூர்
இணைப்புகள்
- லஷ்மி சிவக்குமார் புத்தகங்கள்