ராஜமுத்திரை

From Tamil Wiki
Revision as of 17:01, 18 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "ராஜமுத்திரை (1965 ) சாண்டில்யன் எழுதிய வரலாற்று சாகசநாவல்.சேரர்களுக்கும் பாண்டியர்களுக்குமான போரை விவரிக்கிறது. எழுத்து, வெளியீடு ராஜமுத்திரை 1965 முதல் குமுதம் வார இதழில் தொடர்க...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ராஜமுத்திரை (1965 ) சாண்டில்யன் எழுதிய வரலாற்று சாகசநாவல்.சேரர்களுக்கும் பாண்டியர்களுக்குமான போரை விவரிக்கிறது.

எழுத்து, வெளியீடு

ராஜமுத்திரை 1965 முதல் குமுதம் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் 1967ல் வானதி பதிப்பகத்தால் நூலாக்கம் செய்யப்பட்டது.

கதைச்சுருக்கம்

இரண்டு பகுதிகள் கொண்டது இந்நாவல். முதல்பகுதியில் பாண்டியநாட்டின் செல்வத்திற்கு அடிப்படையாக திகழும் முத்துக்கள் தொடர்ச்சியாகக் கொள்ளை போகின்றன. அதை விசாரிக்கும்பொருட்டு தன் தம்பியான வீரபாண்டியனை கொற்கைக்கு அனுப்புகிறார் அரசரான சுந்தர பாண்டியன். வீரபாண்டியன் கொற்கைக்கு வந்து அங்கே நிகழ்வது சேரர்களின் சதி என்று தெரிந்துகொள்கிறான். அச்சதியைச் செய்யும் சேரமன்னன் வீரரவி கொற்கையில் இருப்பதை அறிந்து அவரை பிடிக்க முயல அவர் சுந்தரபாண்டியனின் மகள் முத்துக்குமரியை கடத்திக்கொண்டு சேரர்தலைநகர் பரலிக்குச் சென்றுவிடுகிறார்.

இரண்டாம் பகுதியில் பாண்டியர் பக்கத்து தளபதிகளில் ஒருவரான உதயபானு முத்துநகையை மீட்க சேரநாட்டுக்கு வருகிறான். சேரன் பெண்ணைக் கடத்தியதை விரும்பாத சேரநாட்டு அமைச்சனாகிய பரதபட்டன் அவன் மாறுவேடம்போட உதவுகிறான். முகத்தை விகாரமாக்கிக்கொண்டு பரலிக்கு வரும் உதயபானு அங்கே முத்துநகை இருக்கும் சிறைக்கே காவலனாக ஆகிறான். அவளுடன் காதல் கொள்கிறான். கொற்கை கோட்டையின் தலைவன் மகள் இளநங்கையுடன் காதல் கொண்ட வீரபாண்டியன் அங்கே கைவிடுபடைகளை உருவாக்குகிறான். போசளநாட்டு அரசன் சிங்கணன் வீரரவிக்கு ஆதரவாகச் செயல்பட அவனை அழிக்கிறான்.

செண்டுவெளி முற்றத்தில் செண்டு எறியும் போட்டியில் வென்று முத்துநகையை மணக்கும் உரிமையை வெல்கிறான் உதயபானு. அவன் யார் என தெரிந்ததும் போர்மூள்கிறது. வீரரவி கோடரிவீசிக் கொல்லப்படுகிறான். பாண்டியநாடு சேரநாட்டை வெல்கிறது. முத்துநகையை உதயபானுவும் இளநங்கையை வீரபாண்டியனும் மணக்கிறார்கள்.

வரலாற்றுப்பின்னணி

பாண்டியநாட்டின் இரண்டாம் எழுச்சிக் காலகட்டத்தில் சோழநாட்டை வென்ற இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனின் மறைவுக்குப் பின்னர் பட்டமேற்றவர் முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன். பாண்டிய மன்னர்களில் இவரே முதன்மையானவர் எனப்படுகிறார். ஆட்சிக்காலம் பொயு 1251 முதல் 1271 வரை. இவர் சோழமன்னர் மூன்றாம் ராஜேந்திர சோழனை போரில் தோற்க்கடித்து சோழப் பேரரசை முற்றிலுமாகக் கைப்பற்றி பிற்காலப் பாண்டியப் பேரரசை நிறுவியவர்.இவர் காலகட்டத்தில் சேர மன்னர் வீரரவி உதய மார்தண்டவர்மன் பரலி மாநகரை தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்தார். கொற்கைப்பகுதி முத்துக்களின் மீதான உரிமைக்காக வீரரவி உதய மார்தண்டவர்மனுக்கும் பாண்டியர்களுக்கும் போர் நடைபெற்றது. பாண்டியர்கள் படை கோட்டாற்றுக்கரை என்னும் இடத்தில் இருந்த சேரர்களின் கோட்டையைத் தாக்கியது. பரலியில் நடந்த இறுதிப் போரில் சேர மன்னன் வீரரவி உதயமார்த்தாண்டவர்மன் இறந்தான். இவ்வரலாறு கல்வெட்டுகள் வழியாக ஓரளவு தெரியவருகிறது

இலக்கிய இடம்

இது ஒரு சாகசநாவல். தொடர்கதை வடிவில் அமைந்தது. ஆகவே அத்தியாயம் தோறும் திருப்பங்கள் கொண்டது. மெய்யான நிலச்சித்திரமும் போர்ச்சித்திரமும் இந்நாவலில் இல்லை. ஏனென்றால் சேரர்தலைநகர் பரலி எந்த இடமென்று ஆய்வாளர்கள்