ராஜமார்த்தாண்டன்
From Tamil Wiki
ராஜமார்த்தாண்டன் (1948 - 2009-) தமிழ் இலக்கிய விமர்சகர், கவிஞர், இதழாளர். சிற்றிதழ் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்ட ராஜமார்த்தாண்டன் தினமணி நாளிதழிலும் பணியாற்றினார். தமிழ்க் கவிதை குறித்து விமர்சனங்கள் எழுதியிருக்கிறார். நவீனத்தமிழ் கவிதைகளில் பெருந்தொகுப்பான ‘கொங்குதேர் வாழ்க்கை’ நூலின் ஆசிரியர்
பிறப்பு
ராஜமார்த்தாண்டன் கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி என்னும் ஊரில் 1948 ல் பிறந்தார்.
நூல்கள்
கவிதை
- அப்படியே நிற்கட்டும் அந்த மரம் (கவிதைகள், அஜிதா பதிப்பகம்)
- என் கவிதை (கவிதைகள்)
- ராஜமார்த்தாண்டன் கவிதைகள் (கவிதைகள், தமிழினி வெளியீடு)
- தொகைநூல்
- கொங்குதேர் வாழ்க்கை (நவீனக்கவிதைகள் தொகுப்பு பகுதி 2)
- விமர்சனம்
- புதுக்கவிதை வரலாறு
- புதுமைப்பித்தனும் கயிற்றரவும்
- பசுவய்யா கவிதைகள் திறனாய்வு