ராஜதிலகம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "ராஜதிலகம் (1975) சாண்டில்யன் எழுதிய வரலாற்றுச் சாகச நாவல்.")
 
No edit summary
Line 1: Line 1:
ராஜதிலகம் (1975) சாண்டில்யன் எழுதிய வரலாற்றுச் சாகச நாவல்.
ராஜதிலகம் (1975) சாண்டில்யன் எழுதிய வரலாற்றுச் சாகச நாவல். காஞ்சிபுரத்தை சாளுக்கியர்கள் கைப்பற்றிய வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டது.
 
== எழுத்து, வெளியீடு ==
1975ல் இந்நாவலை [[சாண்டில்யன்]] குமுதம் இதழில் தொடராக எழுதினார். பின்னர் வானதி பதிப்பகம் நூலாக்கியது.
 
வரலாற்றுப் பின்புலம்
 
கதைச்சுருக்கம்
 
காஞ்சிபுரத்தை சாளுக்கிய மன்னன் விக்ரமாதித்யன் கைப்பற்றி ஆட்சிசெய்துவருகிறான். போர் நடந்தால் காஞ்சியின் சிற்பங்கள் அழியும் என்பதனால் பல்லவ மன்னன் பரமேஸ்வர வர்மன் படையுடன் வெளியேறி தங்கியிருக்கிறான். அவன் மகன் ராஜசிம்ம பல்லவன் மாமல்லபுரத்தில் கலைக்கோயில்களை உருவாக்குவதில் ஈடுபட்டிருக்கிறான். ராஜசிம்ம பல்லவன் பல்லவப்படைகளை நடத்தினால் அவர்கள் வெல்லக்கூடும் என்பதனால் சாளுக்கிய அமைச்சர் ஸ்ரீராமபுண்யவல்லபர் அவனை சிறைசெய்ய முயல்கிறார். ஆனால் நேருக்குநேர் போர் நடக்கட்டும் என அவனை தப்பவிடுகிறான் விக்ரமாதித்யன்.
 
மாமல்லபுரத்தில் இருந்து மைவிழிச்செல்வி என்னும் காதலியுடன் தப்பிச்செல்லும் ராஜசிம்மன் தன் சீன நண்பன் யாங் சின்னுடன் காஞ்சிசென்று அங்கே ஆச்சாரிய தண்டியைச் சந்திக்கிறான். கங்கமன்னன் பூவிக்ரமனின் மகள் ரங்கபதாகாதேவி அங்கே இருக்கிறாள். அவளையும் அவன் விரும்புகிறான். சாளுக்கியர்களின் நண்பனான கங்கமன்னனுடன் பரமேஸ்வர வர்மன் போர்புரிய நேர்கிறது. அதை தடுக்க முயன்ற ராஜசிம்மனை ஸ்ரீராமபுண்யவல்லபர் தடுத்து சிறைவைத்துவிடுகிறார். போரில் தோற்று பரமேஸ்வர வர்மன் காயம்படுகிறார். தப்பிவரும் ராஜசிம்மன் தந்தையை காப்பாற்றுகிறான். யாங் சின் அக்குபஞ்சர் முறைப்படி மன்னனுக்கு மருத்துவம் பார்த்து காப்பாற்றுகிறார்.

Revision as of 22:04, 18 March 2022

ராஜதிலகம் (1975) சாண்டில்யன் எழுதிய வரலாற்றுச் சாகச நாவல். காஞ்சிபுரத்தை சாளுக்கியர்கள் கைப்பற்றிய வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டது.

எழுத்து, வெளியீடு

1975ல் இந்நாவலை சாண்டில்யன் குமுதம் இதழில் தொடராக எழுதினார். பின்னர் வானதி பதிப்பகம் நூலாக்கியது.

வரலாற்றுப் பின்புலம்

கதைச்சுருக்கம்

காஞ்சிபுரத்தை சாளுக்கிய மன்னன் விக்ரமாதித்யன் கைப்பற்றி ஆட்சிசெய்துவருகிறான். போர் நடந்தால் காஞ்சியின் சிற்பங்கள் அழியும் என்பதனால் பல்லவ மன்னன் பரமேஸ்வர வர்மன் படையுடன் வெளியேறி தங்கியிருக்கிறான். அவன் மகன் ராஜசிம்ம பல்லவன் மாமல்லபுரத்தில் கலைக்கோயில்களை உருவாக்குவதில் ஈடுபட்டிருக்கிறான். ராஜசிம்ம பல்லவன் பல்லவப்படைகளை நடத்தினால் அவர்கள் வெல்லக்கூடும் என்பதனால் சாளுக்கிய அமைச்சர் ஸ்ரீராமபுண்யவல்லபர் அவனை சிறைசெய்ய முயல்கிறார். ஆனால் நேருக்குநேர் போர் நடக்கட்டும் என அவனை தப்பவிடுகிறான் விக்ரமாதித்யன்.

மாமல்லபுரத்தில் இருந்து மைவிழிச்செல்வி என்னும் காதலியுடன் தப்பிச்செல்லும் ராஜசிம்மன் தன் சீன நண்பன் யாங் சின்னுடன் காஞ்சிசென்று அங்கே ஆச்சாரிய தண்டியைச் சந்திக்கிறான். கங்கமன்னன் பூவிக்ரமனின் மகள் ரங்கபதாகாதேவி அங்கே இருக்கிறாள். அவளையும் அவன் விரும்புகிறான். சாளுக்கியர்களின் நண்பனான கங்கமன்னனுடன் பரமேஸ்வர வர்மன் போர்புரிய நேர்கிறது. அதை தடுக்க முயன்ற ராஜசிம்மனை ஸ்ரீராமபுண்யவல்லபர் தடுத்து சிறைவைத்துவிடுகிறார். போரில் தோற்று பரமேஸ்வர வர்மன் காயம்படுகிறார். தப்பிவரும் ராஜசிம்மன் தந்தையை காப்பாற்றுகிறான். யாங் சின் அக்குபஞ்சர் முறைப்படி மன்னனுக்கு மருத்துவம் பார்த்து காப்பாற்றுகிறார்.