ரந்தாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி
ரந்தாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ளது. இப்பள்ளி பண்டார் ஏக்காரில் அமைந்துள்ளது. இப்பள்ளியின் பதிவு எண் NBD 4084.
வரலாறு
ரந்தாவ் தோட்டத் தமிப்பள்ளி 1925லிருந்து செயல்பட்டுள்ளது என்றாலும் 1939 முதல்தான் விபரங்கள் கிடைக்கப்பட்டுள்ளன. மார்ஜேரி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ரந்தாவ் பள்ளிக்கு மாற்றலாகி வந்தபோது 2,3 ஆம் வகுப்புகள் தோட்ட ரப்ப ஆலையில் நடத்தப்பட்டன. அமரர் திரு. தில்லையம்பலம் அவர்களால் தோட்ட நிர்வாகத்தின் ஆதரவோடு பள்ளி மேல் மாடிக் கட்டிடம் கட்டப்பட்டது. அக்கட்டடத்தில் 1,2,3 ஆம் ஆண்டு வகுப்புகள் நடத்தப்பட்டன.
துணைக்கட்டடம்
இரண்டாவது துணைக்கட்டடமும் அலுவலக கட்டடமும் கணேஷராஜா அவர்கள் முயற்சியில் கட்டப்பட்டது. 4 வகுப்பறைகள் கொண்ட இணைக்கட்டடம் டத்தோஶ்ரீ முத்துப்பழனியப்பன் அவர்கள் ரந்தாவ் சட்டமன்ற உறுப்பினராகவும் மாநில ஆட்சி குழு உறுப்பினராகவும் இருந்தபோது அவர்கள் முயற்சியால் கட்டப்பட்டது.
இடமாற்றம்
புதிய இடத்தில் ரந்தாவ் தமிழ்ப்பள்ளி இடம் மாற்றம் கண்டது. பண்டார் ஏக்காரில் 5 ஏக்கர் நிலத்தில் இப்புதிய கட்டடம் 2003 ஆம் ஆண்டு முதல் செயல்படத்தொடங்கியது.
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.