யூசுப் ஜுலைகா
யூசுப் ஜுலைகா (1957) இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று. திருக்குர்ஆனில் இடம்பெறும் யூசுப் நபி பற்றியும் அவர் மீது விருப்புற்ற ஜுலைகா பற்றியும் கூறும் நூல். இதனை இயற்றியவர் சாரண பாஸ்கரன் என்னும் டி.எம். அஹமது. இந்நூல் 66 இயல்களையும் 864 பாடல்களையும் கொண்டது.
பிரசுரம், வெளியீடு
யூசுப் ஜுலைகா நூலை, யுனிவர்சல் பப்ளிஷஸ் நிறுவனம் 1957-ல், வெளியிட்டது. இந்நூலைத் தற்போது மீண்டும் மறுபதிப்புச் செய்துள்ளது.
ஆசிரியர் குறிப்பு
யூசுப் ஜுலைகா நூலை இயற்றியவர் சாரண பாஸ்கரன். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூரில், ஏப்ரல் 20, 1923-ல் பிறந்தார். இயற்பெயர் டி.எம். அஹமது. சாரண பாஸ்கரன் என்ற பெயரைச் சூட்டியவர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.
மணியோசை, சாபம், சங்கநாதம், நாடும் நாமும், மணிச்சரம், பிரார்த்தனை, சிந்தனைச்செல்வம், இதயக்குரல் போன்றவை சாரண பாஸ்கரன் இயற்றிய பிற கவிதை நூல்களாகும். கவிஞர் திலகம் என்று இவர் போற்றப்பட்டார்.
கதை
நூல் அமைப்பு
பாடல்கள்
மதிப்பீடு
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.