யாழன் சண்முகலிங்கம்
From Tamil Wiki
Revision as of 06:02, 26 September 2023 by Tamizhkalai (talk | contribs)
யாழன் சண்முகலிங்கம் (அப்பு ஆர்ச்சி) கணினித்தமிழ் அறிஞர். யாழன் 'தமிழ் சொற்பகுப்பி' என்ற மென்பொருளைப் பயன்படுத்தி பிரபலப்படுத்தினார்.
வாழ்க்கைக் குறிப்பு
யாழன் சண்முகலிங்கம் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். மென்பொருள் பொறியாளராக அமெரிக்காவில் பணியாற்றி அங்கு குடியுரிமை பெற்றார்.
தமிழ் கணிணிக்கு செய்த பங்களிப்புகள்
- ‘யாழன் தமிழ் சொற்பகுப்பி‘ என்ற தமிழ் மென்பொருளை 1995-ம் ஆண்டில் பயன்படுத்தி உலகளவில் தமிழர்களிடையே பிரபலப்படுத்தினார்.
- யாழன் விசைப்பலகையை 1993-ம் ஆண்டில் உருவாக்கி அதை தமிழர்களுக்கு அர்ப்பணித்தார்.
சிறப்பு
- 2010-ல் கோவையில் நடந்த உலக தமிழ் இணைய மாநாட்டு ஆய்வரங்குகளில் ஒன்றுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது.
உசாத்துணை
✅Finalised Page