ம.பெ.ஸ்ரீனிவாசன்
From Tamil Wiki
ம.பெ.ஸ்ரீனிவாசன் ( 16 ஆகஸ்ட் 1943) (மபெசீ) வைணவ அறிஞர். தமிழாய்வாளர். தமிழ்ப்பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஆழ்வார்கள் பற்றிய அறிமுக நூல்களை எழுதியுள்ளார்
பிறப்பு, கல்வி
ம.பெர்.ஸ்ரீனிவாசன் சிவகங்கையை அடுத்துள்ள சேந்திஉடையநாதபுரம் என்னும் ஊரில் பெரியசாமி – சிட்டாள் இணையருக்கு 16 ஆகஸ்ட் 1943 ல் பிறந்தார்.
பொருளியல் பட்டப்படிப்புக்குப் பின்னர், பட்டமேற்படிப்பில் மதுரைத்தியாகராசர் கல்லூரியில் தமிழ்பயின்று, கல்லூரி ஆசிரியராக 34 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.