being created

மாறன் அகப்பொருள்

From Tamil Wiki
Revision as of 04:44, 15 October 2022 by Tamizhkalai (talk | contribs) (Created page with "'''மாறன் அகப்பொருள்''' ஒரு பாட்டியல் இலக்கண நூல். இது திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. மாறனலங்காரம், பாப்பாவினம் ஆகிய நூல்களை இயற்றியவரும் இவரே. இந்நூல்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மாறன் அகப்பொருள் ஒரு பாட்டியல் இலக்கண நூல். இது திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. மாறனலங்காரம், பாப்பாவினம் ஆகிய நூல்களை இயற்றியவரும் இவரே. இந்நூல் வைணவ ஆழ்வார்களில் ஒருவராகிய நம்மாழ்வார் மீது பாடப்பட்டது. பாண்டி நாட்டுச் சிற்றரசர் வழிவந்தவர் நம்மாழ்வார். பேரரசர்களுடைய பெயரைச் சிற்றரசர்களும் சூட்டிக்கொள்ளும் அக்கால வழக்கத்துக்கு அமைய நம்மாழ்வாரும் பாண்டிய மன்னர்களைக் குறிக்கும் மாறன் என்ற பெயராலும் அறியப்பட்டவர். இதனால் இப் பெயரைத் தழுவி இந்நூலுக்கு மாறன் அகப்பொருள் என்னும் பெயர் ஏற்பட்டது. இந்நூலை கி.பி 1552 ஆம் ஆண்டில் நூலாசிரியரின் ஆசிரியரான சீனிவாசசீயர் என்பவர் முன்னிலையில் அரங்கேற்றம் செய்ததாக இந்நூலின் பாயிரத்தில் இருந்து அறிய முடிகின்றது.










🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.