being created

மாமலர் (வெண்முரசு நாவலின் பகுதி - 13): Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
mNo edit summary
Line 1: Line 1:
{{being created}}
{{being created}}
[[File:B07G7BVKLP.01. SCLZZZZZZZ SX500 .jpg|thumb|'''மாமலர்''' (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 13)]]
[[File:B07G7BVKLP.01. SCLZZZZZZZ SX500 .jpg|thumb|'''மாமலர்''' (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 13)]]
'''மாமலர்''' (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 13)
'''மாமலர்''' (‘[https://littamilpedia.org/index.php/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81 வெண்முரசு]’ நாவலின் பகுதி - 13) முழுக்க முழுக்க கனவு சார்ந்தது. கனவால் மட்டுமே தொட்டறியக் கூடிய ஒரு மலரின் மணம் பற்றிய தேடலை மையமாகக் கொண்டது. இதில் முக்காலமும் (சென்றவை, நிகழ்பவை, வருபவை) கலைந்து கலைந்து மீண்டும் கூடுகின்றன. பீமன் அவற்றை அறிய முயற்சிசெய்து, தவித்து, நீண்ட நெடிய காலப்பயணத்தை மேற்கொண்டு, இறுதியில் தன்னளவில் மட்டுமே மெய்மையை அறிந்து, திரும்பிவருகிறான்.


== பதிப்பு ==
== பதிப்பு ==
Line 12: Line 12:


== ஆசிரியர் ==
== ஆசிரியர் ==
‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.
‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் [https://littamilpedia.org/index.php/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D ஜெயமோகன்]. இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.


== கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம் ==
== கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம் ==
‘கல்யாண சௌந்திகம்’ தான் மாமலரின் மையம். அதைப் பற்றிய முழுவிபரமும் தொடக்கத்திலேயே கொடுக்கப்பட்டுவிடுகிறது. முழுத் தகவலையும் வைத்துக்கொண்டும் அதை அடையமுடியாமல் தவிக்கிறான் பீமன். நோக்கக் குலையும் அனிச்சமலர் போலவே இந்தக் ‘கல்யாண சௌந்திகம்’ மலர், நினைக்குந்தோறும் தன் மணத்தைச் சிதைத்துக்கொள்கிறது. அதனாலாலேயே இது கைப்பற்ற முடியாத மலராகவும் கனவில் அல்லது நினைவில் மட்டுமே நுகரக் கூடிய மலராகவும் இருக்கிறது.
தர்மரைப் போலவும் அர்சுணனைப் போலவும் பீமனும் தனக்கான மெய்மையைத் தேடிச் செல்கிறான். ஆனால், காலத்தின் வழியாகப் பயணித்து, திரௌபதியின் பிற நான்கு உருவங்களையும் (ஊர்வசி, அசோகசுந்தரி, தேவயானி, சர்மிஷ்டை) கனவில் கண்டும் நேரில் சிற்ப வடிவில் கண்டும் மீள்கிறான்.  அவள், ‘கல்யாண சௌந்திகம்’ மலரைப் பற்றிப் பீமனிடம் மட்டுமே பேசுகிறாள். அதைக் கொண்டுவருவதற்காகவே பீமன் காலங்களின் ஊடாகப் பயணிக்கிறான்.
மாமலரில் காலங்களைக் கலைத்தாடுபவராக ஸ்ரீராமபக்த அனுமன் வருகிறார். அவர் தன்னுருவை மறைத்து, காலத்தின் ஏடுகளைப் புரட்டவல்ல குள்ளர் முண்டன் ‘குஸ்மிதன்’ என்ற நபராக உருமாறி வருகிறார். பீமனின் அகத்தேடலுக்கு உறுதுணையாகிறார்.
அர்சுணனுக்கு இந்திரன் எப்போதும் தோன்றாத் துணையாக இருந்து உதவுவதுபோலப் பீமனுக்கு அனுமன் எப்போதும் தோன்றாத் துணையாகவே இருந்து உதவுகிறார். தன்னுடைய படைக்கலமான கதாயுதத்தைப் பீமனின் கையில் கொடுத்துச் செல்கிறார்.
பீமன் பிறந்தபோது மந்திக்குரங்கு வந்து பாலூட்டியது. பீமனுக்குத் தோழமைகளாகவும் சேவகர்களாகவும் குரங்கு இனமே அமைந்தது. பீமன் பெரும்பாலும் வாழ்வது குரங்குகள் குடியிருக்கும் காடுகளும் குன்றுகளும்தான். பீமன் பெரும்பாலும் பேசும் மொழியும் விலங்குகளின் (குரங்கினத்தின்) மொழிதான்.
பீமன் தன்னைக் காட்டாளனாகவும் விலங்கினத்தானாகவும்தான் பெரிதும் உணர்கிறார். பீமன் பெருங்கானகன். அவன் குரங்கினத்தின் பெருந்தலைவன்.
இறந்தோரை உயிர்ப்பிக்கும் மந்திரமான ‘சஞ்சீவினி’யை அறிந்து கொள்வதற்காகச் சுக்ரரிடம் வரும் சகன் மூன்று முறை இறந்து பிறக்கிறான். அவனின் இறப்பை மூன்று விதங்களில் கூறியுள்ளார் எழுத்தாளர்.
அரண்மனைகளில் பணியாற்றும் சேடியர் உலகம் குறித்து எழுத்தாளர் அளித்துள்ள நுண்தகவல்கள் நமக்கு அச்சமூட்டுகின்றன. சேடியரிலும் பல வகைகள். சான்றுகளாக, அணுக்கச் சேடி, அணிச்சேடி
‘தகவலை முன்னறிவித்துவிட்டு, பின்னர் விரிவாகக் கூறும்’ புதுமையான கதைவிரிக்கும் உத்தியினை எழுத்தாளர் இந்த மாமலரில் பயன்படுத்தியுள்ளார். கல்யாண சௌந்திகத்தைப் பீமன் தேடிச் செல்வதற்கு முன்பே அந்த மலரைப் பற்றி நமக்குக் குறிப்புணர்த்திய எழுத்தாளர், ‘யயாதி’யின் வாழ்க்கையைப் பற்றி விரித்துக் கூறுவதற்கு முன்பாகவே யயாதியைப் பற்றிச் சுருக்கக் குறிப்பினை நமக்கு அளித்துவிடுகிறார்.
பீமன் தாண்டகர் வைத்திருக்கும் ‘அனந்தம்’ என்ற யானத்தைப் பார்த்து, யயாதியைப் பற்றி அறிந்துகொள்கிறான். எளிய மானுட மனம் ஒரு பிழைக்கு மற்றொரு எதிர்ப்பிழையை நிகராக்கிக்கொள்ளும் மனவிழைவு கொண்டது. யயாதி தான் செய்த பிழைக்குத் தேவயானி முன்பு செய்த ஒரு பிழையை நிகராக்கிக்கொள்கிறான்.
‘வெண்முரசு’ நாவல் பகுதிகளில் இடம்பெற்றிருக்கும் ‘பிள்ளைப் பெரும்பித்து’ என்ற ‘ஊழின் படைக்கலம்’, மாமலரிலும் வலுவாக இடம்பெற்றுள்ளது. புரூரவஸ் - – ஆயுஸ், ஆயுஸ் -– நகுஷன், சுக்ரர் –- தேவயானி, விருஷபவன் -– சர்மிஷ்டை, யயாதி -– புரு என இந்த வரிசை நீள்கிறது.


== கதை மாந்தர் ==
== கதை மாந்தர் ==


== உசாத்துணை ==
== உசாத்துணை ==
https://venmurasu.in/maamalar/chapter-1
https://venmurasudiscussions.blogspot.com/
https://www.jeyamohan.in/147694/
https://www.jeyamohan.in/?s=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA.+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D


== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==
<nowiki>[[Category:Tamil Content]]</nowiki>
<nowiki>[[Category:Tamil Content]]</nowiki>
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 21:09, 25 February 2022


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

மாமலர் (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 13)

மாமலர் (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 13) முழுக்க முழுக்க கனவு சார்ந்தது. கனவால் மட்டுமே தொட்டறியக் கூடிய ஒரு மலரின் மணம் பற்றிய தேடலை மையமாகக் கொண்டது. இதில் முக்காலமும் (சென்றவை, நிகழ்பவை, வருபவை) கலைந்து கலைந்து மீண்டும் கூடுகின்றன. பீமன் அவற்றை அறிய முயற்சிசெய்து, தவித்து, நீண்ட நெடிய காலப்பயணத்தை மேற்கொண்டு, இறுதியில் தன்னளவில் மட்டுமே மெய்மையை அறிந்து, திரும்பிவருகிறான்.

பதிப்பு

இணையப் பதிப்பு

‘வெண்முரசு’ நாவலின் 13ஆம் பகுதியான ‘மாமலர்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் பிப்ரவரி 1, 2017 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு மே 2017இல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

கிழக்கு பதிப்பகம் மாமலரை அச்சுப் பதிப்பாக வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்

‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

‘கல்யாண சௌந்திகம்’ தான் மாமலரின் மையம். அதைப் பற்றிய முழுவிபரமும் தொடக்கத்திலேயே கொடுக்கப்பட்டுவிடுகிறது. முழுத் தகவலையும் வைத்துக்கொண்டும் அதை அடையமுடியாமல் தவிக்கிறான் பீமன். நோக்கக் குலையும் அனிச்சமலர் போலவே இந்தக் ‘கல்யாண சௌந்திகம்’ மலர், நினைக்குந்தோறும் தன் மணத்தைச் சிதைத்துக்கொள்கிறது. அதனாலாலேயே இது கைப்பற்ற முடியாத மலராகவும் கனவில் அல்லது நினைவில் மட்டுமே நுகரக் கூடிய மலராகவும் இருக்கிறது.

தர்மரைப் போலவும் அர்சுணனைப் போலவும் பீமனும் தனக்கான மெய்மையைத் தேடிச் செல்கிறான். ஆனால், காலத்தின் வழியாகப் பயணித்து, திரௌபதியின் பிற நான்கு உருவங்களையும் (ஊர்வசி, அசோகசுந்தரி, தேவயானி, சர்மிஷ்டை) கனவில் கண்டும் நேரில் சிற்ப வடிவில் கண்டும் மீள்கிறான். அவள், ‘கல்யாண சௌந்திகம்’ மலரைப் பற்றிப் பீமனிடம் மட்டுமே பேசுகிறாள். அதைக் கொண்டுவருவதற்காகவே பீமன் காலங்களின் ஊடாகப் பயணிக்கிறான்.

மாமலரில் காலங்களைக் கலைத்தாடுபவராக ஸ்ரீராமபக்த அனுமன் வருகிறார். அவர் தன்னுருவை மறைத்து, காலத்தின் ஏடுகளைப் புரட்டவல்ல குள்ளர் முண்டன் ‘குஸ்மிதன்’ என்ற நபராக உருமாறி வருகிறார். பீமனின் அகத்தேடலுக்கு உறுதுணையாகிறார்.

அர்சுணனுக்கு இந்திரன் எப்போதும் தோன்றாத் துணையாக இருந்து உதவுவதுபோலப் பீமனுக்கு அனுமன் எப்போதும் தோன்றாத் துணையாகவே இருந்து உதவுகிறார். தன்னுடைய படைக்கலமான கதாயுதத்தைப் பீமனின் கையில் கொடுத்துச் செல்கிறார்.

பீமன் பிறந்தபோது மந்திக்குரங்கு வந்து பாலூட்டியது. பீமனுக்குத் தோழமைகளாகவும் சேவகர்களாகவும் குரங்கு இனமே அமைந்தது. பீமன் பெரும்பாலும் வாழ்வது குரங்குகள் குடியிருக்கும் காடுகளும் குன்றுகளும்தான். பீமன் பெரும்பாலும் பேசும் மொழியும் விலங்குகளின் (குரங்கினத்தின்) மொழிதான்.

பீமன் தன்னைக் காட்டாளனாகவும் விலங்கினத்தானாகவும்தான் பெரிதும் உணர்கிறார். பீமன் பெருங்கானகன். அவன் குரங்கினத்தின் பெருந்தலைவன்.


இறந்தோரை உயிர்ப்பிக்கும் மந்திரமான ‘சஞ்சீவினி’யை அறிந்து கொள்வதற்காகச் சுக்ரரிடம் வரும் சகன் மூன்று முறை இறந்து பிறக்கிறான். அவனின் இறப்பை மூன்று விதங்களில் கூறியுள்ளார் எழுத்தாளர்.

அரண்மனைகளில் பணியாற்றும் சேடியர் உலகம் குறித்து எழுத்தாளர் அளித்துள்ள நுண்தகவல்கள் நமக்கு அச்சமூட்டுகின்றன. சேடியரிலும் பல வகைகள். சான்றுகளாக, அணுக்கச் சேடி, அணிச்சேடி

‘தகவலை முன்னறிவித்துவிட்டு, பின்னர் விரிவாகக் கூறும்’ புதுமையான கதைவிரிக்கும் உத்தியினை எழுத்தாளர் இந்த மாமலரில் பயன்படுத்தியுள்ளார். கல்யாண சௌந்திகத்தைப் பீமன் தேடிச் செல்வதற்கு முன்பே அந்த மலரைப் பற்றி நமக்குக் குறிப்புணர்த்திய எழுத்தாளர், ‘யயாதி’யின் வாழ்க்கையைப் பற்றி விரித்துக் கூறுவதற்கு முன்பாகவே யயாதியைப் பற்றிச் சுருக்கக் குறிப்பினை நமக்கு அளித்துவிடுகிறார்.

பீமன் தாண்டகர் வைத்திருக்கும் ‘அனந்தம்’ என்ற யானத்தைப் பார்த்து, யயாதியைப் பற்றி அறிந்துகொள்கிறான். எளிய மானுட மனம் ஒரு பிழைக்கு மற்றொரு எதிர்ப்பிழையை நிகராக்கிக்கொள்ளும் மனவிழைவு கொண்டது. யயாதி தான் செய்த பிழைக்குத் தேவயானி முன்பு செய்த ஒரு பிழையை நிகராக்கிக்கொள்கிறான்.

‘வெண்முரசு’ நாவல் பகுதிகளில் இடம்பெற்றிருக்கும் ‘பிள்ளைப் பெரும்பித்து’ என்ற ‘ஊழின் படைக்கலம்’, மாமலரிலும் வலுவாக இடம்பெற்றுள்ளது. புரூரவஸ் - – ஆயுஸ், ஆயுஸ் -– நகுஷன், சுக்ரர் –- தேவயானி, விருஷபவன் -– சர்மிஷ்டை, யயாதி -– புரு என இந்த வரிசை நீள்கிறது.

கதை மாந்தர்

உசாத்துணை

https://venmurasu.in/maamalar/chapter-1

https://venmurasudiscussions.blogspot.com/

https://www.jeyamohan.in/147694/

https://www.jeyamohan.in/?s=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA.+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D

இணைப்புகள்

[[Category:Tamil Content]]