மாணிக்கவாசகம் ஆசிர்வாதம்
மாணிக்கவாசகம் ஆசிர்வாதம் (மா. ஆசிர்வாதம்; எம். ஆசிர்வாதம்; ராவ்சாகிப் ஆசிர்வாதம்; அருட்தந்தை ஆசிர்வாதம்; ஆசிர்வாதம் ஐயர்) (ஜூலை 1, 1865 - ஜூலை 13, 1948) கிறித்தவ மத போதகர்; இறையியலாளர். கவிஞர். சேரன்மாதேவி, பண்ணைவிளை, திருவில்லிபுத்தூர், பாளையங்கோட்டை, நல்லூர் போன்ற ஊர்களில் மதப் பணியாற்றினார். ரெட்டியார்பட்டியில் ஆரம்பப் பள்ளியை நிறுவி கல்விப் பணி ஆற்றினார். இயேசு கிறிஸ்துவின் மீது ‘திரு அவதாரம்’ என்னும் காப்பிய நூலை இயற்றினார். ‘இரண்டாம் கிறித்தவக் கம்பர்’ என்று போற்றப்பட்டார்.
பிறப்பு, கல்வி
மா. ஆசிர்வாதம், திருநெல்வேலி மாவட்டத்தில் டோனாவூருக்கு அருகிலுள்ள சூரங்குடி என்னும் சிற்றூரில், ஜூலை 1, 1865 அன்று, மாணிக்கவாசகம் பிள்ளை - முத்துநாயகம் அம்மை இணையருக்குப் பிறந்தார்.பள்ளிக் கல்வியை சூரங்குடியிலும் டோனாவூரிலும் கற்றார். உயர் கல்வி திருநெல்வேலியிலிருந்த சி.எம்.எஸ். (C.M.S.) கல்லூரியில் படித்தார். 1899-ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
மா. ஆசிர்வாதம், பிரிட்டிஷ் அரசின் வருவாய்த்துறையில் அதிகாரியாகப் பணியாற்றினார். ஓராண்டிற்குப் பின் அப்பணியைத் துறந்து மதப் பணிகளில் ஈடுபட்டார். மனைவி: மேரி ஞானம் அம்மையார். இவர்களுக்கு இரண்டு மகன்கள்.
மதப்பணிகள்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.