மயிலன் ஜி. சின்னப்பன்
எழுத்தாளர் மயிலன் ஜி. சின்னப்பன் 12.7.86 அன்று தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா சூரப்பள்ளத்தில், ஜி. சின்னப்பன் - பிரேமா இணையருக்கு மகனாக பிறந்தார். 'பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்' எனும் நாவல் வழியாக அறிமுகமான மயிலன் தொடர்ந்து சிறுகதைகளை எழுதி வருகிறார். தற்போது திருச்சியில் தொழில்முறை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
கல்வி:
மயிலாடுதுறை ராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்றார்.
இளநிலை மருத்துவ படிப்பை சென்னை எம்.எம்.சியிலும் முதுநிலை படிப்பை தஞ்சை மருத்துவக் கல்லூரியிலும் பயின்றார்.
தனி வாழ்க்கை
28/10/2012 அன்று அனுஷ்யாவை மணந்தார். அவர்களுக்கு ரிஷி மித்திரன்,
அதிரூபன் என இரு குழந்தைகள் உள்ளனர்.
இலக்கிய பங்களிப்பு
அசோகமித்திரனையும் ஆதவனையும் தனது இலக்கிய ஆதர்சமாக கருதுகிறார் மயிலன்.
2017 எழுதத்தொடங்கி 2019ல் பிரசுரமான 'பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்' நாவல் நல்ல வரவேற்பை பெற்றது. மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவர்களின் பின்புலத்தில் அவர் எழுதிய 'ஆகுதி' 'ஓர் அயல் சமரங்கம்' ஆகிய சிறுகதைகள் பரவலாக கவனிக்கப்பட்டன.
விருதுகள்:
சிறந்த அறிமுக எழுத்தாளர் 2019-20 - வாசகசாலை
யாவரும் பதிப்பகம் ஒருங்கிணைத்த புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டியில், 'முப்போகம்' குறுநாவல் பரிசு பெற்றது.
நூல்கள்:
1) பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் ( நாவல்)-2019
2) நூறு ரூபிள்கள் (சிறுகதைத் தொகுப்பு) -2020
3) அநாமதேயக் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)-2021
இணைய பக்கம்
mayilanchinnappan.blogspot.com