மதுமிதா: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "மதுமிதா (பிறப்பு: செப்டம்பர் 5, 1964) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர். == பள்ளி, கல்வி == மதுமிதாவின் இயற்பெயர் மஞ்சுளாதேவி. விருதுநகர் மாவட்டம் ராஜபாளயத்தில் ரகு...")
 
No edit summary
Line 85: Line 85:




[[Category:Being Created]]
{{Category:Being Created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 10:32, 24 August 2022

மதுமிதா (பிறப்பு: செப்டம்பர் 5, 1964) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர்.

பள்ளி, கல்வி

மதுமிதாவின் இயற்பெயர் மஞ்சுளாதேவி. விருதுநகர் மாவட்டம் ராஜபாளயத்தில் ரகுபதிராஜா, பாக்கியலட்சுமி இணையருக்கு செப்டம்பர் 5, 1964இல் பிறந்தார். சுதந்திரப் போராட்ட தியாகி, காந்தி அரங்கசாமிராஜா அவர்களின் பேத்தி. தென்காசி CMS பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்றார். நடுநிலைக்கல்வி மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். உயர்நிலைக்கல்வி தென்காசி பி.ஏ.சி. ஆர் அம்மணி அம்மாள் மேல்நிலைப்பள்ளியிலும், மேல்நிலைக்கல்வி ஏ.கே.டி.ஆர் பெண்கள் மேல் நிலைப்பள்ளி ராஜபாளயத்தில் பயின்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை ஆங்கிலம் அஞ்சல் வழி பயின்றார். மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் முதுகலை ஆங்கிலம் அஞ்சல் வழி பயின்றார். டிப்ளமோ இன் போர்ட்போலியோ மேனேஜ்மெண்ட் கற்றவர். தாய்மொழி, தெலுங்கு. சமஸ்கிருதத்தில் பட்டயப்படிப்பு பயின்றார். தமிழ், ஹிந்தி மொழிகள் அறிந்தவர்.

தனிவாழ்க்கை

செப்டம்பர் 12, 1980இல் ரெங்கனாத ராஜாவை மணந்தார். இராஜபாளையத்தில் வசிக்கிறார். மகன் பத்ரிநாத், மகள் அம்ருதா ப்ரீதம். ராஜபாளயத்தில் வசிக்கிறார். இணைய வானொலியில் தொகுப்பாளராகத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளையும் செய்து வருகிறார்.

அமைப்புப் பணிகள்

துளி அமைப்பு மூலம் சேவைப்பணிகள் ஆற்றி வருகிறார். துளி அமைப்பின் துணைத் தலைவர். இரத்த தானம் செய்தல், பார்வையற்றோருக்குவாசித்தல், பரீட்சை எழுதுதல், குடும்பப் பிரச்சினைகளுக்கு கவுன்சிலிங் எனசேவைப்பணிகளில் இயங்கி வருகிறார். தமிழ்நாடு அரசு இராஜபாளையம் பெண்கள்குழந்தைகள் நூலகம் அமைக்க காரணமாக இருந்தவர். நூலக வாசகர் வட்ட தலைவராக உள்ளார்

இலக்கிய வாழ்க்கை

மதுமிதா கவிதைகள் எழுதி வருகிறார். அச்சு, இணைய இதழ்களில் இவரின் கவிதை, சிறுகதை, கட்டுரை, நேர்காணல், பத்திகள், சமையல் குறிப்புகள் வெளிவந்துள்ளன. பல இணைய இதழ்களிலும் இவரின் பல ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. பள்ளி, கல்லூரிகளில் மாணவ மாணவர்களுக்காகவும் உலக அரங்குகளிலும் உரை நிகழ்த்தியுள்ளார். பெங்களூர், சர்வதேச கவிஞர்கள் சந்திப்பு (International poets meet),'Poetic Prism' விஜயவாடா, டெல்லி சார்க்(SAARC) இலக்கிய விழாவில் கலந்துகொண்டு கவிதை வாசிப்பு நிகழ்த்தியுள்ளார். அறுநூறுக்கும் மேற்பட்ட நேர்காணல்களைச் செய்தார். தமிழ்குஷி எப். எம். இணைய வானொலியில், ஆட்டோகிராப் என்னும் நிகழ்ச்சியில் அறுபதுக்கும் மேற்பட்ட நேர்காணல்களைச் செய்தவர்.

இசை

மதுரை வானொலியில் இவரின் பதினொரு பாடல்கள் இசையமைக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டுள்ளன. இவரின் ஒன்பது பாடல்கள் கனடா இசையமைப்பாளர் ஆர்.எஸ். மணி அவர்கள் இசையமைத்துள்ளார்.

விருதுகள்

  • மொழிபெயர்ப்புக்கான திசையெட்டும் விருது - சென்னை, 2009
  • இலக்கியச் சாதனையாளர் விருது - மணிமேகலை மன்றம், இராஜபாளையம்
  • சாதனையாளர் விருது - பத்திரிகை சங்கம், சென்னை
  • அப்துல்கலாம் நினைவு சாதனையாளர் விருது - நெல்லூர், 2015
  • பல்துறை இலக்கியச் செல்வி விருது 20.09.2015 இராஜபாளையம்
  • கவிக்கோ அப்துல்ரஹ்மான் நினைவு விருது 03.02.2018 தேனி
  • சாவித்திரிபாய் புலே விருது 2018 Savitribai Phule National Women Achiever Award 2018
  • அக்கமகாதேவி விருது டிசம்பர் 25, 2019 - பெங்களூரு
  • சாதனையாளர் விருது (2020) இராஜபாளையம்
  • ஸ்பாரோ இலக்கிய விருது (2020) மும்பை
  • அறம் விருது 2021 இராஜபாளையம்
  • சாதனையாளர் விருது 2021 இராஜபாளையம்
  • ஶ்ரீ சக்தி விருது 2022 - சென்னை

நூல்கள் பட்டியல்

  • 'நீதி சதகம்' (2000) பர்த்ருஹரியின்தத்துவங்களைச் சமஸ்கிருதத்திலிருந்துதமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.
  • மௌனமாய் உன்முன்னே...' (2003) கவிதைத் தொகுப்பு நூல், தமிழ்நெஞ்சம் பிரசுரம்.
  • 'பர்த்ருஹரி சுபாஷிதம்' என்றுசமஸ்கிருதத்திலிருந்து முந்நூறு பாடல்களின்தமிழாக்க நூல். (2005) சந்தியா பதிப்பகம். மொழிபெயர்ப்புக்காக ’திசை எட்டும் விருது’பெற்ற நூல்.
  • நான்காவது தூண் (2006) 18 பத்திரிகைஆசிரியர்களின் நேர்காணல்களின் தொகுப்புநூல். ஸ்ரீ விஜயம் பதிப்பகம்.
  • தைவான் நாடோடிக்கதைகள் (2007) (சிறுவர்கதைகள்) உதயகண்ணன் வெளியீடு.
  • பாயும் ஒளி நீ எனக்கு - (2007) கவிதைத்தொகுப்பு மின்னூல். நிலாச்சாரல்.
  • வசீகரிக்கும் தூசி (2010)- ஒரிய கவிஞர்பிரதிபா சத்பதியின் கவிதைத்தொகுப்பு நூல்.ஆங்கில வழி தமிழாக்கம். சாகித்திய அகாதெமிவெளியீடு.
  • அக்கமகாதேவி வசனங்கள் (2010) - டாக்டர்தமிழ்ச்செல்வியுடன் இணைந்து கன்னடத்திலிருந்து தமிழாக்கம். திரிசக்தி பதிப்பகம்.
  • காலம் (2010) - பத்தி எழுத்தாளராக ' புதியபார்வை' இதழில் எழுதிய பத்திகளின் தொகுப்பு. சந்தியா பதிப்பகம்.
  • இரவு (2010) - 37 படைப்பாளிகளின் இரவுகள்குறித்த தொகுப்பு நூல். சந்தியா பதிப்பகம்.
  • மரங்கள் (2011) - 29 படைப்பாளிகள்தங்களுடைய மரங்களுடன் இணைந்த சிந்தனைகளைகளைப் பகிர்ந்து கொண்டகட்டுரைகளின் தொகுப்பு நூல். சந்தியா பதிப்பகம்.
  • மேகதூதம் (2013) - மகாகவி காளிதாசரின்மேகதூதம், ருது சம்ஹாரம்,சமஸ்கிருதத்திலிருந்து தமிழாக்கம். தமிழினி பதிப்பகம்.
  • பருவம் (2014) 24 படைப்பாளிகள்தங்களுடைய பருவங்களைக் குறித்துபகிர்ந்துகொண்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல்.சந்தியா பதிப்பகம்.
  • தசாவதாரம் (2014) மஹாவிஷ்ணுவின் பத்துஅவதாரக் கதைகள் (சிறுவர் கதைகள்) சாந்தி நூலகம்.
  • நிஜ இளவரசி (2014) ஹேன்ஸ் கிரிஸ்டியன்ஆண்டர்செனின் தேவதைக் கதைகள் (சிறுவர்கதைகள்) தமிழாக்கம், சாந்தி நூலகம்.
  • கவிஞர் சித்தலிங்கய்யா 40 கன்னடக் கவிதைகள் (2014) பேராசிரியை கே.மலர்விழி அவர்களுடன் இணைந்து கன்னடத்திலிருந்து தமிழாக்கம். புதுப்புனல் பதிப்பகம்.
  • வேமன மாலை (2016) வேமனரின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் பாடல்கள் தெலுங்கிலிருந்து தமிழாக்கம். தமிழினி பதிப்பகம், (2016)
  • பூக்களை விற்ற ஊர், (2016) தெலுங்கு கவிஞர் பெருகு ராமகிருஷ்ணா தமிழாக்கம். சந்தியா பதிப்பக வெளியீடு.
  • அ. (ப்ளெமிங்கோ - அச்சில் உள்ளது இன்னும் வெளியாகவில்லை)
  • தெலுங்கு சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பெத்தி பொட்ல சுப்பராமய்யா அவர்களின் 34 கதைகள், சிறுகதைத்தொகுப்பு முதல் பாகம், தெலுங்கிலிருந்து தமிழாக்கம் சாகித்திய அகாதெமி வெளியீடு. (2018)
  • காந்தியமும் நானும் - காந்திய கட்டுரைகள் தொகுப்புநூல் - மதுமிதா (2020) அமேஸான் கிண்டில்
  • மதுமிதா படைப்புலகம் - நேர்காணலும் ஆக்கமும் முபீன் சாதிகா, கலைஞன் பதிப்பகம் (2017)
  • இராஜபாளையம் ஸ்பெஷல் - சமையல் குறிப்பு நூல், அமேஸான் கிண்டில்
  • மதிப்பீட்டுக்கலை - சில பார்வைகள், சில மதிப்பீடுகள் - தொகுப்பு நூல் - மதுமிதா, அமேஸான் கிண்டில்
  • சோதனைக் குடுவை - சில்வியா பிளாத் தின் ஆங்கில நாவல் தமிழாக்கம் ( 2022 ) தமிழினி பதிப்பகம்
  • அக்கமகாதேவி வசனங்கள் - முனைவர் தமிழ்ச்செல்வி யுடன் இணைந்து கன்னடத்திலிருந்து தமிழாக்கம் புலம் பதிப்பகம் (2022) இரண்டாம் பதிப்பு… புது பதிப்பகம்
  • நினைவில் அன்புள்ள பறவை - கவிதைத்தொகுப்பு (2022) கோதை பதிப்பகம்
  • எழுத்தாளர் சூத்ர ஶ்ரீ நிவாஸ் எழுதிய கன்னட நாவல் யாத்ரெ தமிழாக்கம். முனைவர் மலர்விழி யுடன் இணைந்து அச்சில் சுவாசம் பதிப்பகம்

இணைப்புகள்

  • மதுமிதாவின் காற்றுவெளி யூட்யூப் சேனல்

https://youtu.be/lg8qBFxZw7Y

  • மதுமிதா: வலைதளம்: காற்றுவெளி, நீங்கா இன்பம் என்னும் வலைப்பூக்கள்
http://madhumithaa.blogspot.in
  • நிலாச்சாரல் நேர்காணல்

http://www.nilacharal.com/tamil/interview/madhu_interview_218.html

  • தமிழோவியம் நேர்காணல்

http://www.tamiloviam.com/unicode/06210703.asp http://www.tamiloviam.com/unicode/07120703.asp http://www.tamiloviam.com/unicode/07190703.asp http://www.tamiloviam.com/unicode/08080703.asp

  • நேர்காணல் சோழன் பதிப்பகம்

https://cholantamilepub.wordpress.com/2020/05/29/%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d/

  • நேர்காணல் வல்லமை மின்னிதழ்

https://www.vallamai.com/?p=101124

உசாத்துணை

  • தென்றல்: மதுமிதா

http://www.tamilonline.com/thendral/morecontent.aspx?id=107&cid=2&aid=5913 6. மதுமிதாவின் புத்தகங்கள் http://madhumithaa.blogspot.in/2013/01/blog-post_11.html http://madhumithaa.blogspot.in/2012/08/blog-post.html




Being created.png